முகப்பு |
தினை (ஏனல்) |
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. | உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! | உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! | உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
122. குறிஞ்சி |
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
||
கருங் கால் செந்தினை கடியுமுண்டென; |
||
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி |
||
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; |
||
5 |
'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
|
வரையக நாடன் வரூஉம் என்பது |
||
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என |
||
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, |
||
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு |
||
10 |
நீயே சூழ்தல் வேண்டும்- |
|
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்
|
128. குறிஞ்சி |
'பகல் எரி சுடரின் மேனி சாயவும், |
||
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் |
||
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் |
||
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், |
||
5 |
அது கண்டிசினால் யானே' என்று, நனி |
|
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல் |
||
ஏனல் காவலினிடை உற்று ஒருவன், |
||
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் |
||
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு |
||
10 |
அஃதே நினைந்த நெஞ்சமொடு |
|
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா
|
134. குறிஞ்சி |
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது |
||
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
||
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
||
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! |
||
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், |
||
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
||
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
||
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! | உரை |
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
147. குறிஞ்சி |
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்! |
||
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் |
||
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று |
||
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, |
||
5 |
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
|
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை |
||
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; |
||
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, |
||
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை |
||
10 |
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
|
தலை இறைஞ்சினளே அன்னை; |
||
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! | உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! | உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
288. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
||
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
||
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
||
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
||
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
||
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
||
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
||
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் |
||
10 |
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? | உரை |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
304. குறிஞ்சி |
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
||
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
||
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
||
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
||
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
||
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
||
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
||
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
||
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|
306. குறிஞ்சி |
தந்தை வித்திய மென் தினை பைபயச் |
||
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- |
||
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என, |
||
நல்ல இனிய கூறி, மெல்லக் |
||
5 |
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
|
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி |
||
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, |
||
பைதல் ஒரு நிலை காண வைகல் |
||
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல் |
||
10 |
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
|
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? | உரை | |
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்
|
317. குறிஞ்சி |
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
||
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
||
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, |
||
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
||
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
||
என் ஆகுவகொல்தானே-எந்தை |
||
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
||
ஆயமொடு குற்ற குவளை |
||
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? | உரை |
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
328. குறிஞ்சி |
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
||
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
||
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
||
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
||
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
||
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
||
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
||
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
||
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. | உரை | |
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|
344. குறிஞ்சி |
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட |
||
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் |
||
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் |
||
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!- |
||
5 |
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
|
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் |
||
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, |
||
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப் |
||
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி |
||
10 |
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
|
செந் தினை உணங்கல் தொகுக்கும், |
||
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
389. குறிஞ்சி |
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் |
||
தேம் படு நெடு வரை மணியின் மானும்; |
||
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- |
||
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை |
||
5 |
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
|
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் |
||
காவல் நீ' என்றோளே; சேவலொடு |
||
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் |
||
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல |
||
10 |
நன் பொன் இமைக்கும் நாடனொடு |
|
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. | உரை | |
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|