Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
உழவனின் தோற்றத்தை வருணிக்கும் தூங்கலோரியாரின் கவித்துவச் சிறப்பை எடுத்துக் காட்டுக.
நடவு வேலைக்காக விடியலில் புறப்படும் உழவன் பெரிய வரால் மீன் துண்டுகள் கிடக்கின்ற குழம்புடன் அரிசிச் சோற்றை மயக்கமேற உண்கிறான். அவனுடைய மனத்தின் ஆசையையும், நாவின் சுவை உணர்ச்சியையும் அப்படியே அவனது கைக்கு மாற்றுகிறார் புலவர். கவர்படுகையை கழும மாந்தி - ஆசை நிரம்பிய கை என்கிறார். கையே மனத்தையும் நாவையும் காட்டுகிறது.