தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.4 தொகுப்புரை

    இப்பாடல்களில் காதல் உணர்வின் பல்வேறு தோற்றங்களைக் கண்டீர்கள்; தலைவி, தோழி, தலைவன், பாகன் போன்ற பாத்திரங்களின் பேச்சுகளில் சொல்லைத்தாண்டி விரியும் மனக்குறிப்புகளை உணர்ந்தீர்கள். அன்புப் பெருக்கின் முன்னிலையில் காட்டுக்கோழி தோழனாகவும் புன்னைமரம் தங்கையாகவும் மாறிவிடும் உலக ஒருமைப்பாட்டைக் கவிஞர்கள் உங்களுக்குக் காட்டினார்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    புன்னை தலைவியின் தங்கையாக - உயர்திணைப் பொருளாகக் காட்டப்படுவதன் நோக்கம் என்ன?

    2.

    அடுத்த வீட்டுப் பெண்ணின் நற்சொல்லுக்குக் கிடங்கில் என்ற ஊர் உவமையாகிறது. உவமை பொருந்துமா? விளக்குக.

    3.

    சேகம் பூதனார் அருளில்மாலை என மாலையை வருணிப்பது ஏன்?

    4.

    உழவனின் தோற்றத்தை வருணிக்கும் தூங்கலோரியாரின் கவித்துவச் சிறப்பை எடுத்துக் காட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 12:38:35(இந்திய நேரம்)