தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

    மாணவர்களே ! ஒழிபியலின் ஒரு பகுதியை இப்பாடத்தில் படித்திருக்கிறீர்கள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றுக்கான புறனடைக் கருத்துகளை நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள். மீண்டும் உறுப்பியலையும் செய்யுளியலையும் படித்து இப்பாடத்தின் கருத்துகளை அவற்றுடன் இணைத்துப் பார்த்துத் தெளிவுபெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த பாடத்தில் எதுகை, மோனை தொடர்பான புறனடைகளையும் வேறு பல புதிய செய்திகளையும் படித்தறிவோம்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - Il
    1.
    ஆசிரியப் பாவில் மயங்கிவரும் அடிகள் யாவை?
    2.
    ஆசிரியப்பாவில் அருகி வரும் அடிகள் யாவை?
    3.
    பட்டினப்பாலை எவ்வகைப் பா?
    4.
    ‘கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை’ - இது எந்தப் பாவுக்குரிய அடி?
    5.
    கலிப்பாவில் எந்தெந்த அடிகள் மயங்கி வரும்?
    6.
    வெண்பாவில் பிற பாக்களின் அடிகள் மயங்கி வருமா?
    7.
    ஐஞ்சீரடிகள் அருகிவரும் பாக்கள் யாவை?
    8.
    கடையிணை முரண் என்பது யாது?
    9.
    ‘செவ்வாய்ப் பைந்தொடி’ என்பது பொருள் முரணா?
    10.
    கோதையின் தாழ்ந்த ஓங்குவெள் ளருவி - இது எவ்வகை முரண்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 09:58:14(இந்திய நேரம்)