Primary tabs
-
1.0 பாட முன்னுரை
திறனாய்வு என்பது, இன்று வளர்ந்து வருகிற ஒரு துறை. இலக்கிய வளம் உடைய எல்லா மொழிகளிலும் திறனாய்வு போற்றப்படுகிறது. இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் திறனாய்வு பெரிய அளவில் துணை செய்து வருகிறது. இலக்கியம் என்ற பூஞ்செடிக்கு உரமாகவும் நல்ல நீராகவும் திறனாய்வு இருக்கிறது.
எனவே, மொழியைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் பயில விரும்புகிற மாணவர்கள் திறனாய்வு பற்றியும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.