Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம் யாது? அதன் உள்ளடக்கம் யாது?
கி.பி. 1856 இல் வெளிவந்த வெள்ளாட்டி மசலாவே முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம் ஆகும். தவத்துது என்னும் வெள்ளாட்டி (அடிமைப்பெண்) மார்க்க அறிஞர்களின் வினாக்களுக்கு விடைகூறும் முகமாகத் திருக்குரான் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றில் கூறப்படும் வாழ்வியல் சட்டங்களை எடுத்துரைப்பதே இந்நூலின் உள்ளடக்கம் ஆகும்.