Primary tabs
- 
- முகப்பு
 - ஓலைச்சுவடிகள்
					
- த.ம.அ ஓலைச்சுவடி தேடுதல் திட்டம்
 - பதிப்பாசிரியர்கள்
							
- இராகவய்யங்கர்
 - இராகவையங்கார்
 - களத்தூர் வேதகிரி முதலியார்
 - தாண்டவராய முதலியார்
 - திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
 - திருநெல்வேலி அம்பலவாண கவிராயர்
 - திருமயிலை சண்முகம் பிள்ளை
 - புதுவை நயனப்ப முதலியார்
 - மகாவித்துவான் சி்
 - மழவை மகாலிங்கையர்
 - முகவை இராமானுசக் கவிராயர்
 - முத்துசாமிப் பிள்ளை
 - யாழ்ப்பாண ஆறுமுக நாவலர்
 - கதிரைவேற் பிள்ளை
 - கலியாண சுந்தரனார்
 - கிருஷ்ண பிள்ளை
 - கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
 - கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை
 - கோவிந்த பிள்ளை
 - சபாபதி முதலியார்
 - சரவணப் பெருமாளையர்
 - சூரிய நாராயண சாஸ்திரியார்்
 - செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்
 - சோடசாவதானம் சுப்புராய செட்டியார்
 - டாக்டர் சாமிநாத ஐயர்
 - திருவேங்கடாசல முதலியார்
 - புதுவை சவராயலு நாயகர்
 - பொன்னம்பல சுவாமிகள்
 - வடலுர் இராமலிங்க அடிகள்
 - சுவடிக் காட்சியகம்
 - துறைச் சுவடி
											
- அகத்தியர்
 - அகத்தியர் 150
 - அகத்தியர் 205-க்குச் சூத்திரம்
 - அகத்தியர் குருநூல் மூப்பு
 - அகத்தியர் குழம்பு
 - அகத்தியர் ஞானம் 30
 - அகத்தியர் திட்சைவிதி சுருக்கம்
 - அகத்தியர் தேவாரத் திரட்டு
 - அகத்தியர் நாடி 50
 - அகத்தியர் பச்சைவெட்டு
 - அகத்தியர் பஞ்சகம்
 - அகத்தியர் லோகமாரணம்
 - அகத்தியர் வைத்தியம்
 - அகத்தியர் வைத்தியம் 350
 - அகத்தியர் வைத்தியம் நடுக்காண்டம்
 - அசுவனி தேவதை சொன்ன வைத்தியம்
 - அடுக்குநிலை போதகம்
 - அடுக்குநிலை போதகம் - ஞானமெய்ப்பொருள்
 - அதியந்த விளக்கம்
 - அமராவதி கதை
 - அரிச்சுவடி
 - அருட நூல்
 - அருணாச்சலபுராணம் மூலமும் உரையும்
 - அருணாசலபுராணம்
 - அறுபத்து மூவர் பெயர்
 - அஷ்ட்டாச்சர மந்திரம்
 - ஆசிரிய விருத்தம்
 - ஆத்திசூடி
 - ஆரிய வெண்பா
 - ஆரூட நூல்
 - ஆறுமுகசுவாமி ஆசிரிய விருத்தம்
 - ஆனந்த விளக்கம்
 - இரதி சொல்
 - இராம காதை
 - இராமதேவர் சோதிடம்
 - இராமர் தோத்திரம்
 - இராமன் கதை
 - உருவசிரெற்றின சுருக்கம்
 - உலகநீதி
 - ஊர்க்குருவி லேகியக் குறவஞ்சி
 - எண் இலக்கம்
 - எண்சுவடி
 - எழுவகைத் தோற்றம்
 - ஏசம்மாள் நாடகம்
 - கதிர்காம மாலை
 - கந்தரந்தாதி மூலமும் உரையும்
 - கந்தரலங்காரம் (கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்)
 - கபிலை வாசகம்
 - கயறு சூத்திரம்
 - கலியாண வாழ்த்து
 - காமன் - பிள்ளையார் தோத்திரம்
 - கீர்த்தனைகள்
 - குணவாகடம்
 - குமரன் தாலாட்டு
 - குருவாகடம் எனும் அம்மை வாகடம்
 - குழந்தை வாகடம்
 - கெருடன் பத்து
 - கைலாச சதகம்
 - கொக்கோகம் மூலமும் உரையும்
 - கொன்றை வேந்தன்
 - கோயில் கணக்கு
 - சக்தி கவசம்
 - சகாதேவன் சாத்திரம் - சந்தனக் குறடு
 - சகாதேவன் நூல்
 - சட்டைமுனி சூத்திரம்
 - சத்தி ஆரூடம்
 - சதாசிவ மாலை
 - சந்தனாதி தைலம்
 - சந்திரமதி புலம்பல்
 - சம்மனசு பேரில் பதம்
 - சவுந்தரியலகரி
 - சஷ்டி கவசம்
 - சாதி வேற்றுமை முத்தி
 - சித்தாரரூட நொண்டிச் சிந்து
 - சித்திரபுத்திர கதை
 - சித்திரபுத்திர நயினர் கதை
 - சித்திரபுத்திரன் கதை
 - சிதம்பர பஞ்சாட்சர பதிகம்
 - சிவ கவசம்
 - சிவவாக்கியம்
 - சிறுத்தொண்ட நாடகம்
 - சுப்பிரமணியர் காவடிச் சிந்து
 - சுப்பிரமணியர் ஞான சைசன்னியம்
 - சுரமாலை
 - சென்னை வல்லப விநாயகர் பஞ்சரத்தினம்
 - சொல் அகராதி
 - சோதிடச் செய்திகள்
 - ஞான நொண்டி
 - ஞான மதியுள்ளான்
 - ஞானதீபம்
 - தட்சிணாமூர்த்தி குருநாடி
 - தத்துவம்
 - தருமநெறி நீதி
 - தருமர் அசுவமேத யாகம்
 - தன்வந்திரி நாடி
 - திரிபுரை மாலை
 - திருச்செந்தில் சண்முகர் மாலை
 - திருநீலகண்டர் பள்ளு
 - திருமந்திரம்
 - திருமூலர் தியானம் தரிசனம்
 - திருமூலர் நாடி
 - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சதகம்
 - திருவாசகம்
 - திருவிளையாடற் புராணம்
 - திருவேங்கட சதகம்
 - திருவேங்கட மாலை
 - தூது லெட்சணம்
 - தெளிவுண்மை போதகம்
 - தென்கபிலை வாசகம்
 - தேவாரம் (உதிரிகள்)
 - தேவி சகாயம்
 - தொடுகுறி சாத்திரம்
 - நட்சத்திரத்தில் மரணம்
 - நடராசப் பத்து
 - நடுவணை மந்திரம்
 - நல்வழி
 - நவக்கிரகத் தோத்திரம்
 - நாடி சாத்திரம்
 - நாடி நிலை
 - நாதாந்தத் திறவுகோல்
 - நாலடியார்
 - நிமித்த சூடாமணி
 - நிலவாகை பூரணம் செய்முறை
 - நீதிசாரம் - மூலமும் உரையும்
 - நீலகண்ட கல்பம்
 - நீலிகதை
 - நோய்க்கு மருந்து
 - நோயின் குணம்
 - நோயின் நட்சத்திரம் அறிதல்
 - பகவத் கீதை
 - பட்சி சாத்திரம்
 - பதஞ்சலி சுவாமி வாதத் திறவுகோல்
 - பரிமண்ண சுவாமி செல்
 - பல்லி காதல்
 - பல்லி விழுகிறதுக்குப் பலன்
 - பழனாபுரி குமரன் மீது பாடல்கள்
 - பழனிமலை முருகன் திருநீற்றுப் பதிகம்
 - பழனிமலை முருகன் தோத்திரம்
 - பழனிமலை வடிவேல் ஆசிரிய விருத்தம்
 - பள்ளி பிள்ளையார் சிந்து
 - பார்வதியம்மன் கதை
 - பாரத அம்மானை
 - பாரதக் கதை
 - பெயர் தெரியாத ஒரு கதைப் பாடல்
 - பெயர் தெரியாத ஒரு தத்துவ நூல்
 - பெயர் தெரியாத ஒரு நீதிநூல்
 - பெயர் தெரியாத ஒரு மருத்துவ நூல்
 - பெயர் தெரியாத ஒரு மருத்துவ நூல் தன்வந்திரி நிகண்டு
 - பெரியபுராணம்
 - பைந்தமிழ்ச் சதகம்
 - பொருளகராதி
 - போகநாதர் சூத்திரம்
 - மகாபாரதம் - துர்ச்சாதனன் பிரிதி
 - மகாபாரதம் (உதிரி ஏடுகள்) மூலமும் உரையும்
 - மகாபாரதம் மூலமும் உரையும்
 - மச்சமுனி வைத்தியம்
 - மணிக்கடை கயிறு சாத்திரம்
 - மதுராபுரி அம்பிகை மாலை
 - மரண மாதம்
 - மருத்துவ நிகண்டு
 - மருத்துவச் செய்திகள்
 - மருந்து சுத்தி
 - மருந்து செய்முறை
 - மருந்து வாகடம்
 - மலையகராதி
 - மன்மதன் கதை
 - மனை நூல்
 - மனையடி சாத்திரம்
 - மனையடி சாஸ்திரம்
 - மாட்டு வாகடம்
 - மாட்டு வாகடம் (நோயின் குணம்)
 - மாந்திரீக நூல்
 - மாந்திரீகச் செய்திகள்
 - மார்க்கண்டனம்மானை
 - மார்க்கண்டேயன் கதை
 - மாரியம்மன் அகவல்
 - மூதுரை
 - ராசிப் பலன்
 - வயிரவன் மந்திரம்
 - வர்ம நூல்
 - வலங்கை மாலைக்கும்மி
 - வாக்குண்டாம் மூலமும் உரையும்
 - வாலை வாகடம்
 - விநாயகர் அகவல்
 - விநாயகர் கவசம்
 - விநாயகரகவல்
 - விநாயகரகவல் பிறந்த வரலாறு
 - விரத நூல்
 - விருத்தாசல புராணம் மூலமும் உரையும்
 - விவேக சிந்தாமணி
 - விஷகடி மருந்து
 - வீரமாமுனி நசைகாண்ட வைத்தியம்
 - வெற்றிவேற்கை
 - வேதாந்த சித்தாந்தம்
 - வைகுண்ட அம்மானை
 - வைத்திய அகராதி
 - வைத்திய சாரம்
 - வைத்திய நிகண்டு
 - வைத்திய வாகடம்
 - ஸ்ரீமதி அமிர்த காவியம்
 
 - தண்டபாணி அடிகளாரின் சுவடிகள்
											
- குறிப்பு உரை
 - ஓலைச்சுவடி முன்னுரை
 - அட்டவணை
 - தண்டபாணி சுவாமிகள்
 - அக்கினிக் கண்ணில்லை யென்பாரறிவிலரே
 - அகத்தியர்
 - அகத்தியர் 1500
 - அகத்தியர் 16
 - அகத்தியர் 205
 - அகத்தியர் 80
 - அகத்தியர் அட்டகர்மம்
 - அகத்தியர் இரத்தினச் சுருக்கம்
 - அகத்தியர் கவுசிகம்
 - அகத்தியர் காவிய சுருக்கம் 16
 - அகத்தியர் காவியம்
 - அகத்தியர் சரக்கு வைப்பு
 - அகத்தியர் சாமுத்திரீகம்
 - அகத்தியர் சூத்திரம்
 - அகத்தியர் சூத்திரம் - வைத்தியம்
 - அகத்தியர் சூத்திரம் 100
 - அகத்தியர் சூத்திரம் 150
 - அகத்தியர் சூத்திரம் 50
 - அகத்தியர் சூரணம் 30
 - அகத்தியர் ஞானபட்சனி
 - அகத்தியர் தாண்டகம்
 - அகத்தியர் தீட்சைவிதி
 - அகத்தியர் தேவாரத்திரட்டு
 - அகத்தியர் நாடி
 - அகத்தியர் நாடி 30
 - அகத்தியர் பட்சணி
 - அகத்தியர் பதிகம்
 - அகத்தியர் பரிபூரணம்
 - அகத்தியர் பூசைவிதி 200
 - அகத்தியர் பூரண சூத்திரம்
 - அகத்தியர் பூரணம்
 - அகத்தியர் ரிகண்டு
 - அகத்தியர் வாகடச் சுருக்கம் 50
 - அகத்தியர் வாகடம் கர்ம காண்டம் 300
 - அகத்தியர் வெண்பா
 - அகத்தியர் வைத்திய சூத்திரம் 150
 - அகத்தியர் வைத்திய சூத்திரம் 1500
 - அகத்தியர் வைத்தியம்
 - அகத்தியர் வைத்தியம் 205
 - அகத்தியர் வைத்தியம் 300
 - அகத்தியர் வைத்தியம் கர்ம காண்டம் - நடுக்காண்டம் 300
 - அகோரமூர்த்தி விருத்தம்
 - அச்சிறுபாக்கம் அரன்
 - அசுவயாக அம்மானை
 - அட்டமூர்த்தியும் ஆகிய சிவனே
 - அட்டாங்க யோகம்
 - அடியனேனுன் அடைக்லமே
 - அடுக்குநிலை போதகம்
 - அடுத்தகண் என்றறைந்தானே
 - அண்டவாதமும் சளிப்பும் தீரப்பாடியது
 - அணிற்காத்த பெருமாளே பதிகம்
 - அம்பலத்திலாடும் அருளானந்த சிவன் பதிகம்
 - அம்பிகை கணபதி, திருப்புகழ் விஷ்ணு வெண்பா
 - அம்பிகை பதிகம்
 - அம்பிகை விநாயகர் வெண்பா
 - அம்பிகை வெண்பா
 - அம்பிகை வெண்பா - மாயவன் பதிகம்
 - அம்பிகை, விநாயகர்
 - அம்பிகை, விநாயகர் திருப்புகழ்
 - அம்பிகை, விநாயகர் வெண்பா
 - அம்மன் விநாயகர் திருப்புகழ்
 - அம்மன் விநாயகர் வெண்பா
 - அம்மன் வெண்பா
 - அம்மானை
 - அம்மை திருப்புகழ்
 - அம்மை பதிகம்
 - அமர்ந்தருள் அன்னையே பதிகம்
 - அய்யம் நாடி
 - அயிந்திரத்தூர் அம்மானே வெண்பா
 - அயிந்திரத்தூர் அவுடதக்கிரி மாயன் பதிகம்
 - அயிந்திரத்தூர் ஆயிரவாய்ப்பாம்பூ ரமர்ந்தான்
 - அயிந்திரத்தூர் கணபதி வெண்பா
 - அயிந்திரத்தூர் பரிமுகத்தான் வெண்பா
 - அரசாட்சி நூல்
 - அரசாட்சிநூல் உரை
 - அரசிலி சிவன்
 - அரசிலி விநாயகர் வெண்பா, முருகன் திருப்புகழ், விட்டுணு
 - அரன்தானோ அரிதானோ அறியேன்
 - அரனார் பதிகம்
 - அரி ஏகபாதத்தந்தாதி
 - அரிகர புத்திரர் பதிகம்
 - அரியநகர் சதுர்வேத விநாயகன்
 - அருட் குறிப்புணர்த்தினாள்
 - அருணகிரிநாதர்புராணம்
 - அருணகிரிநாதர்புராணம குகன் பதிகம்
 - அருணாசலத் தொண்டமான்
 - அருமருந்தொன்றளித்த பதிகம்
 - அருள் வழங்கச் சோம்பாதான் பதிகம்
 - அருள் வேண்டு பதிகம்
 - அருள்செய்யாதிருக்கும்வேலன்
 - அருள்வள்ளத்திடை குளிக்கவருள்
 - அருளாட்சி நூல்
 - அவ்வளவு பாடுபட்டும்
 - அவமான மறுப்பாயே தெய்வப் பதிகம்
 - அவமானம் தீர்த்த பதிகம்
 - அவயவமெழுதலரி தெனல் வண்ணம்
 - அவள் மேல் அம்பெய்வாயே
 - அழகிய நாயகி
 - அளகைக் குபேரன் பதிகம்
 - அறுவகையிலக்கணம் நூல்
 - அறுவகையிலக்கணம் பாயிரம்
 - அனந்த மூர்த்தியுமாம் ஒரு பெருமாள்
 - அனந்தசயனம் அழைத்த மாதவனே
 - அனந்தசயனம் திருப்புகழ்ப் பதிகம்
 - அனந்தசயனம் யமகவந்தாதி
 - அனவரத தானரே வகுப்பு
 - அனைவரையும் புரந்தருள் தெய்வமே
 - ஆங்கிலியரந்தாதி
 - ஆடூர் குருபர குமரவேள்
 - ஆயக்குடி அமர்ந்தவேள் பதிகம்
 - ஆரைவாய்மொழி சிவன் பதிகம்
 - ஆவணிவீதி ஐங்கரன் பதிகம்
 - ஆவணிவீதி ஐங்கரன் வகுப்பு
 - ஆவுடையார் பட்டினம் கணபதி
 - ஆளனுப்பிப் பழனிக்கழைத்த பதிகம்
 - ஆறுமாமுகத்
 - ஆறுமுக நாவலர் இறைவனடியடைந்த போது பாடிய சிவன் பதிகம்
 - ஆனந்தவலலித்தாய் பதிகம்
 - ஆனைமீதமர்ந்திட்ட பதிகம்
 - ஆனைமுகனாறு முகனான பதிகம்
 - இகழ்ச்சியும் புகழ்ச்சியும் நின்பொறுப்பு
 - இத்தனை ஈண்டியற்றுவாயே - பதிகம்
 - இந்திரசாலத்திரட்டு - மூன்றாங் காண்டம்
 - இப்படி நான் வருந்துகிறேன் - கீர்த்தனை
 - இப்போதே அருள் செய் முருகா
 - இரங்கிடா திருக்கொண்ணாதே
 - இரட்டை மணிமாலை (ஆரூரன் சேரன்)
 - இரட்டையாசிரியவிருத்தம்
 - இரவி எழுபது
 - இராமதேவர் கரு சூத்திரம்
 - இராமதேவர் பட்சணி
 - இராமவாசகம்
 - இருதயாலய மருதப்பர் தெய்வ வாழி
 - இருதயாலய மருதப்பர் பிணி நீங்கப் பாடியது
 - இரும்பை அம்பிகை, பிள்ளையார் வெண்பா
 - இரும்பை முருகன் திருப்புகழ்
 - இரும்பை ஈச்சரனே
 - இரும்பை மாகாளம் வாழ் பெருமான்
 - இலக்குமி அனுமார் வெண்பா
 - இலக்குமி கணநாதன்
 - இலக்குமி தேவிப் பதிகம்
 - இலைத்திருநீறு .... தந்த குருபரன்
 - இறைவிமங்கலத்து மால் பதிகம்
 - இன்னிசைப் பஃறொடை வெண்பா
 - ஈகைத்தொழில் கைத்து விட்டாயோ - பதிகம்
 - ஈசன் கலிநிலைத்துறை
 - ஈசன் கொச்சகக் கலி
 - ஈசான தேசிகர் பதிகம்
 - உச்சி விநாயகர் பதிகம்
 - உதவாத பேற்றை உன்னாமலருள்
 - உரத்தூர் விநாயகன்
 - உருவம் கரந்தானே
 - உலகனைத்தும் தரும் அம்மே
 - உலகினர் சுரநோய் தொலையப்புரி
 - உலா
 - உவப்புற வருங்கதிரே
 - உள்ளான் பதிகம்
 - உறையும் சிவபிரானே பதிகம்
 - உறைவானவன் பதிகம்
 - ஊழிக் காற்று
 - எண்ணெய் வகை அட்டவணை
 - எம்பி பூண்ட அரிகண்டம் கழற்றுவாய் என்ற பதிகம்
 - எம்மான் பதிகம்
 - எய்து நலம் பாலிப்பாயே
 - எழுகூற்றந்தாதி
 - எழுகூற்றிருக்கை - திருவல்லிக்கேணி
 - எழுபா எழுபஃது
 - என் சம்பளத்தைத் தந்தருளே
 - என் சுந்தரம் நின்னடைக்கலமே
 - என்கவி எழுதல் விழைந்தானே பதிகம்
 - ஏகத்தாளிதழகற் சேயந்தாதி
 - ஏகபாத உரை
 - ஏகபாதம்
 - ஏகனெழுபது
 - ஏதேனும் நடத்துவாயே (சத்தி
 - ஏரகம் உறை எந்தைபிரான் பதிகம்
 - ஏலாதி
 - ஏழாமிலக்கணம்
 - ஏழாயிரப் பிரபந்தம் + பாயிரம் பாகம் - 1
 - ஏழாயிரப் பிரபந்தம் பாகம் - 2 (8 + 9)
 - ஏழு பதிகம் (7 பதிகங்கள்)
 - ஐங்கரப் பிள்ளையே
 - ஐந்து பதிகம் (5 பதிகங்கள்)
 - ஐந்து வகுப்பு - 1 வேயீன்ற முத்தர் வகுப்பு
 - ஐந்தூர்ச் சமாதி அருளானந்தர் பஞ்சகம்
 - ஐம்புலனை வெல்லும் ஆர்வம் அருள்வாய்
 - ஐயாயிரப் பிரபந்தம்
 - ஒலியலந்தாதி
 - ஒற்றியூர் சிவன்
 - ஔவையார் பதிகம்
 - கங்கா தேவி
 - கங்கையந்தாதி
 - கடலூர் காமாட்சி வெண்பா
 - கண்டனூர் குமரவேள் சட்கம்
 - கண்ணாடியூர்க் கணபதி
 - கணபதி
 - கணபதி பதிகம்
 - கணபதி மாலை
 - கணபதி வெண்பா
 - கணபதி-அம்பிகை வெண்பா
 - கணபதியே - பதிகம்
 - கதிர்காம முருகோனே
 - கதிர்வேலான்
 - கந்தரனுபூதி
 - கந்தன் திருவடி கண்ணிலொற்றத் தந்தானே
 - கயத்தூர் பெருமாள்
 - கயத்தூர் வாழ்வே (சிவன்)
 - கருங்குடை நிழல் தீர்ப்பாய் பதிகம்
 - கருந்தார்குழல் அம்மே
 - கருநிகண்டு
 - கருப்பறியலூர்ப் பதிகம்
 - கருவூர்ராயன் அதீத சூத்திரம்
 - கரையேறவிட்ட நகர் அம்மன் - விநாயகர் வெண்பா
 - கரையேறவிட்ட நகர் கதிர்வேல் பிடித்த குருவே மகுட ஆசிரிய விருத்தம்
 - கரையேறவிட்ட நகர் கந்தவேள்
 - கரையேறவிட்ட நகர் காட்சிநாதன் பதிகம்
 - கரையேறவிட்ட நகர் காத்த பெருமாள்
 - கரையேறவிட்ட நகர் காத்த பெருமாள் திருப்புகழ்
 - கரையேறவிட்ட நகர் காவலன் பதிகம்
 - கரையேறவிட்ட நகர் திருப்புகழ் பதிகம்
 - கல்லாலம் பூண்டிமலை புனிதவேள்
 - கலகமுழுதும் களைவாயே என்ற திருவயிந்திரபுரம் திருமால் பதிகம்
 - கலவி மகிழ்தல் வண்ணம் கருணைக்கடல்
 - கலவி மகிழ்தல் வண்ணம் மலைதொறும்
 - கலிநீக்கி அருள்வாயே
 - கலியாண சுந்தரி பதிகம்
 - கலிவிடந்தாதி
 - கலைக்கியானம் - மணிநூல்
 - கவித்தலம் கண்ணுதல்
 - கவித்தலம் முருகன் திருப்புகழ்
 - கவித்தலம் வாழ்களிறு பதிகம்
 - கவுசிகர் குழம்பு 13
 - கவுசிகர் நொடி மணிக்கட்டை கயறு சூத்திரம்
 - கவுணியன் திருப்புகழ்
 - கவுணியன் பதிகம்
 - கவுமார தீபம்
 - கவுமார நூல்
 - கவுமார வினோதம்
 - கழனிநகர்க் கணபதி பதிகம்
 - களிகூரச் செய்வாயே பதிகம்
 - கற்ப உற்பத்தி
 - கனகமளித்தருளே
 - கனவில தந்த இன்பக்கனி கேட்ட பதிகம்
 - காண்பரங்கிரி வெண்பா + பதிகம்
 - காணாபத்ய சூத்திரம்
 - காத்தவராய சுவாமி கதை
 - காப்புமாலை
 - காமாட்சி - பதிகம்
 - காரணப்பட்டு கணபதி திருப்புகழ்
 - காரணப்பட்டு கணபதி பதிகம்
 - காராமணி நகர் காத்தருள் குகன்
 - காராமணி நகர் முருகன் திருப்புகழ்
 - காராமணி நகர் விசாலாட்சி
 - காராமணி நகர் விநாயகர் விசுவநாதன் வெண்பா
 - காராமணி நகர் வேல் முருகோன் வகுப்பு
 - காராமணிநகர் குமரவேள்
 - காராளர் தொழும் முருகன் பதிகம்
 - காரைக்குடித் திருப்புகழ்
 - காலபயம் தீரக் கருணைபுரி - பதிகம்
 - காலாங்கி நாயனார் சூத்திரம் 32
 - கிணற்றுப் பதிகம்
 - கிருஷ்ணன் தாலாட்டு
 - கீர்த்தனை
 - கீர்த்தனை (பதம்)
 - கீர்த்தனை, நடேசன் வெண்பா, அம்பிகை
 - கீழவேளூர்க் கிழவனாரே - பதிகம்
 - குகன் பதிகம் (இலங்கைப் பயணம்)
 - குகன் பதிகம் (கொழும்பில் பாடியது)
 - குகன் பதிகம் கதிர்காம வடிவேலனே
 - குஞ்சரமுகன்
 - குஞ்சரிமாலை
 - குணவாகடம் - நோயின் சாரம்
 - குமரகுருபர முருக குகப்பெம்மான்
 - குமரபுங்கவன் திருப்புகழ்
 - குமரபுங்கவன் பதிகம்
 - குமரபுங்கவன் வகுப்பு
 - குமரேச சதகத் திரட்டு
 - குமார புரியிற் பவனி வந்தானே
 - குமாரபுர கல்லுப் பெருமாள் காட்டுப் பெருமாள்
 - குமாரபுரி - சண்முகத் திருப்புகழ்
 - குமாரபுரி அம்பிகை, விநாயகர், வெண்பா
 - குமாரபுரி அழகிய சண்முகக் குருவே - வகுப்பு
 - குமாரபுரி ஐந்து முகச்சிவன் ஆறுமுகச் சிவன்
 - குமாரபுரி குகன் மும்மணிக் கோவை
 - குமாரபுரி சக்தி பெரியநாயகி பதிகம்
 - குமாரபுரி சண்முக சற்குருபரன்
 - குமாரபுரி சண்முகவேள் வகுப்பு
 - குமாரபுரி சிவகாமசுந்தரி பதிகம்
 - குமாரபுரி சிவன் பதிகம்
 - குமாரபுரி திருமால் பதிகம்
 - குமாரபுரி திருவருள் விநாயகர் பதிகம்
 - குமாரபுரி நடராசன் வகுப்பு
 - குமாரபுரி மடத்தில் குலவின சிவன் பதிகம்
 - குமாரபுரி மடத்தில் மேவிய பெருமாள் திருப்புகழ்
 - குமாரபுரி மடாலயத்தில் கூத்தாடு சிவன் பதிகம்
 - குமாரபுரி மேவிய கண்ணன் பதிகம்
 - குமாரபுரிக் கடவுளான்
 - குமாரபுரிக் கந்த நாயகன் மாலை
 - குமாரபுரிக் குஞ்சரப் பதிகம்
 - குமாரபுரியில் திருக்கூத்துச் செய்வான்
 - குரு பதிகம்
 - குரு முன்னிலை நூல்
 - குருநாடி சாத்திரம்
 - குருநாதனந்தாதிி
 - குருபரதத்துவ நூல்
 - குருபரனே விண்ணவர் கோமானே
 - குருமுதற் பாசுரநூல்
 - குருமுதற்பாசுர நூல் (நேரிசை வெண்பா)
 - குருவாகடம் எனும் அம்மை வாகடம்
 - குவிபாவொருபஃது உரை
 - குவிபாவொருபது
 - குழிப்பு ஏடு
 - குற்றால வடவருவித் தண்புனல் பதிகம்
 - குறிஞ்சிப்பாடிக் குமரன்
 - குன்மம் 8-ன் குணம்
 - குன்றக்குடி பதிகம் கோமானே
 - குன்றக்குடி முருகன் ஏமாறச் செய்தானே பதிகம்
 - குன்றக்குடி வகுப்பு (ஆறு வகுப்புகள்)
 - குன்றக்குடிக் கலம்பகத்து 27,57, பாடல்கள்
 - குன்றக்குடிக் கலம்பகம்
 - குன்றக்குடிக்கு வருக என்ற பதிகம்
 - குன்றுதோறாடல் பாலனைப் பழித்தல் வண்ணம்
 - கூடலூர் குமரப்பிரான் திருப்புகழ்
 - கூடலூர் குமரப்பிரான் பதிகம்
 - கூடலூர்ப் பதிகம் (சண்முகப் பெம்மான்)
 - கைந்நோய் தீரப்பாடியது
 - கைமுறை அனுபோகம்
 - கையடித்துத் தந்தானே
 - கொங்கண சற்குருவே - பதிகம்
 - கொங்கணர் கடைக்காண்டம் 500
 - கொங்கணர் தண்டகம்
 - கொங்கணர் பாடல்
 - கொடுக்கூர் நெடுமால்ு
 - கொடுக்கூர் நெடுமால் திருப்புகழ்
 - கொடுவூர் கணபதி
 - கொழும்பில் வாழ் குமர நாயகன்
 - கொற்றபுரிக் குஞ்சரம்
 - கோபித்துக் கொள்ளாதே குமரகுரபரனே
 - கோயிற்சீர் செய்வாயே
 - கோலியனூர் குமரவேள்
 - கோலியனூர் குமரவேள் திருப்புகழ்
 - கோவிலெங்கும் வாழ்வானே
 - கோவை
 - கௌமார சூத்திரம்
 - கௌமார முறைமை
 - கௌமார விசயம்
 - கௌமாரத் தொகை
 - கௌமாரலகிரி நூல்
 - சகத்திர தீபம்
 - சகளீகரித்தருளே
 - சகுணநிர்குணத் தனிப்பொருளே
 - சங்ககிரித் திருமால் வெண்பா
 - சங்கர நாராயணனே - பதிகம்
 - சங்கரன் கட்டளைக் கலித்துறை
 - சட்டை முனியார் பாடல்
 - சட்டைமுனி மூலிகை நிகண்டு
 - சடகோபர் சதகத்தந்தாதி
 - சடகோபர்ப் பத்து வெண்பா
 - சண்டேசர், காளி, வெண்பா
 - சண்மதமும் சண்முகமே
 - சண்முக பூசை
 - சண்முகச் சிவனே
 - சண்முகத் திருப்புகழ்
 - சத்தி குகனான பதிகம்
 - சத்தி விசயப் பிரபந்தம்
 - சத்திகவசம்
 - சத்திய சூத்திரம்
 - சத்திய வாசகம்
 - சத்தியப் பதிகம்
 - சத்தியம் தவரொண்ணாது - பதிகம்
 - சத்தியமேயன்றிச் சாட்சியறியேனே
 - சத்துரு சங்கார விருத்தம்
 - சத சத்தகப் பிரபந்தம்
 - சதக உந்தி நூல்
 - சதகப் பதிகம்
 - சதகம்
 - சந்தக் கலித்துறை அந்தாதி
 - சந்தமாலிகைத் திருப்புகழ்
 - சபாபதி மாலை
 - சமயாதீதச் சூத்திரம்
 - சமாதி லட்சணம் 5-க்கு வகை
 - சமுத்தியாகப் பாடிய வண்ணத்தின் முதற்கலை
 - சமையசூத்திரம்
 - சமையாதீதத் திருப்புகழ்
 - சரசுவதித் தாயார் பதிகம்
 - சரசுவதிப் பதிகம்
 - சரநூல்
 - சற்குரு விசயம்
 - சாத்தனூர்ச் சங்கரன்
 - சாத்தனூர்ச் நெடுமாயன்
 - சாத்தா பேரில் அகவல்
 - சாத்துகவி - இராமகிருட்டிணப்பிள்ளை
 - சாத்தேய சூத்திரம்
 - சாதுரிய பூஞ்சேரி உடுக்கு
 - சாரநகர் சண்முகன்
 - சாலை நகர் ஆனந்தவல்லி வெண்பா
 - சாலை நகர் கணபதி, கந்தன்
 - சாலை நகர் திருமால் பதிகம்
 - சாலை நகர் மலைக்கோயில் வயிரவர் பதிகம்
 - சாலைநகர்ச் சிவன் பதிகம்
 - சாலைப்பாக்கம் சிவன் பதிகம்
 - சாஷ்த்திர நாமா
 - சிங்களத்திலிருந்து திரும்ப வேண்டிக் கொண்டது
 - சித்தர் திருப்புகழ்ப் பதிகம்
 - சித்தர் பஞ்சரத்தினக் கோவை
 - சித்தர் பெருமான் பதிகம்
 - சித்தர்மலை சேவகவேலன்
 - சிலேடை வெண்பா
 - சிவ சங்கரனார் பதிகம்
 - சிவதண்டீச்சரம் சிவன் பதிகம்
 - சிவபெருமான் திருப்புகழ்
 - சிவவாக்கியம்
 - சிவன்
 - சிவன் குகனான பதிகம்
 - சிவன் பதிகம்
 - சிவன் வெண்பா
 - சிவனார் பதிகம்
 - சிவனேகபாதத்தந்தாதி
 - சிற்றிலக்கியம்றாற்றூர் - சிவன் - தனி (வெண்பாக்கள் மூன்று)
 - சிறப்பு நூல்
 - சிறுபந்தாடு உடைய சிவன்
 - சுகந்த கொந்தளவல்லி மாலை
 - சுந்தரத்தைச் தந்தது போல் செனனை மீனாட்சியையும் தரவேண்டு
 - சுந்தரத்தைம்மையைச் சுகமுறக் காத்தருள்
 - சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம்
 - சுந்தரி கல்யாணம்
 - சுப்பிரமணிய நூல்
 - சுப்பிரமணிய மூர்த்தியே
 - சுப்பிரமணியம் பரமான பதிகம்
 - சுப்பிரமணியர் ஆசிரிய விருத்தம்
 - சுப்பிரமணியர் மாதப் பதிகம்
 - சுரண்டை நகர் சுந்தரச் சிவன் பதிகம்
 - சுரநிதானம்
 - சுரநூல் சாத்திரம்
 - சுவட்டு படிஎடுப்பு
 - சுவாமி பேரில் வேல்வியம் பபிகம்
 - சூடிக் கொள்வாய்
 - சூரிய மாலை
 - சூரியமூர்த்தி பதிகம்
 - சூரியன் பதிகம்
 - சூரியன் வெண்பாக்கள்
 - சூனாம்பேடு உடையானே
 - செட்டியுருக் காட்டிய பதிகம்
 - செந்திருமின்னாள் பதிகம்
 - செந்தில் விட்டெனையேன் தேடி வந்தீர்
 - செம்பொன்மாரிச் சிவகுருநாதன் திருப்புகழ்
 - செம்பொன்மாரிச் சிவகுருநாதன் பதிகம்
 - செம்பொனந்தாதி
 - செம்பொனல்கின்றே
 - செயசிங்க நகர் சிந்துர முகனே
 - செயசிங்க நகர் திருப்புகழ்
 - செயத்தினான் பாளையம் கணபதி
 - செவ்வாய்ப்பதிக் கோமான்
 - செவ்வேலான்
 - செவ்வேள் சடாக்கரத் திருப்புகழ்
 - செவ்வேள் திருப்புகழ் (நெய்யறாது)
 - செவ்வேளே
 - சென்னை - (சுப்புராயன் செய்த தங்கவிமானம் ) பதிகம்
 - சென்னை கந்தன் பிள்ளைத்தமிழ்
 - சென்னை கந்தனுக்கு உதாரசீலம் உதிக்குமே
 - சென்னை கந்தனுக்கு ஒருபாவொருபஃது
 - சென்னை கந்தனுக்கு குகன் பதிகம்
 - சென்னை கந்தனுக்கு பாங்கியைத் தலைவன் வேண்டல் வண்ணம்
 - சென்னை கந்தனுக்கு முருகேசன் வகுப்பு
 - சென்னை கந்தனுக்கு யமகஇதழகலந்தாதி
 - சென்னை கந்தனுக்கு வெண்பா அந்தாதி
 - சென்னை கந்தனை ஆண்டியென்ற பதிகம்
 - சென்னை கந்தனைச் செட்டி என்ற பதிகம்
 - சென்னை சிவகுருப்பதிகம்
 - சென்னை திரிவந்தாதி
 - சென்னை தேர்த்தரிசனப் பதிகம்
 - சென்னை பதிற்றுப்பத்தந்தாதி
 - சென்னை முருகன்
 - சென்னை முருகன் பதிகம் (எண்சீர்)
 - சென்னை முருகேசன் கேட்கப் பாடிய எமவாதை நீக்கு பதிகம்
 - சென்னைக் கந்தரிதழகலந்தாதி
 - சென்னைக் கந்தன் எங்கணும் முகமானானே
 - சென்னைக் கலம்பகம்
 - சென்னைச் சிவன் பதிகம்
 - சென்னையுறை கந்தனிரு பாதமே வகுப்பு
 - சேக்கிழார் புராணம்
 - சேயூர் சிவன் பதிகம்
 - சேயூர் செய்கை சக்தி தாய் பதிகம்
 - சேயூர் செய்கை சக்தி தாயார் திருப்புகழ்
 - சேயூர் செய்கைமால் பதிகம்
 - சேயூர் பதிகம்
 - சேயூர் முருகன் திருப்புகழ்ப் பதிகம்
 - சேயூர்க் குகன் வெண்பா
 - சேயூர்ச் செவ்வேளே
 - சேரமான் பெருமாள் ஆசிரியப்பா
 - சேலம் கணபதி வெண்பா
 - சேலம் சொர்ணாம்பிகைத்தாய்
 - சேலம் திருப்புகழ்
 - சேலம் மேவிய சிவபெருமான் பதிகம்
 - சைவ சதகம்
 - சைவ சூத்திரம்
 - சைவவைணவ பெருமானந்தாதி
 - சொன்னபடி செய்திலையே குகா
 - சொன்னபடி செய்வாய் முருகா
 - சோதிட நூல்
 - சௌர சூத்திரம்
 - ஞாலமிகழ்ந்திட
 - ஞான தீட்சை
 - ஞான விநாயகனே
 - ஞான வெட்டியான்
 - ஞானவந்தாதி
 - தசாங்க வகுப்பு
 - தட்சிணாமூர்த்தி கலைக்கியானம்
 - தட்சிணாமூர்த்தி குரு செய நீர்
 - தட்சிணாமூர்த்தி ஞானம்
 - தட்சிணாமூர்த்தி வகாரம் 16
 - தட்சிணாமூர்த்தி வாக்கியம்
 - தடைமுழுதும் அறுத்தாள் வாயே
 - தண்டபாணி அநுபூதி
 - தணிகைமலைச் சண்முகன்
 - தத்துவ சாத்திரம்
 - தத்துவக் குறிப்பு அறிதல்
 - தமிழ்க்கவிதை உதிக்கும் வம்பு சகிக்கிலேனே
 - தமிழ்த் தோத்திரம்ப்பதிகம்
 - தமிழ்ப் பதிகம்
 - தமிழ்விலைப் பொருளீவாயே பதிகம்
 - தமிழலங்காரம்
 - தமிழாசை உண்டாக்குக
 - தருணமிதென்றறிவாயே
 - தருமபுரம் சங்கரன்
 - தலையணிச் சீரிதழகற் சேயந்தாதி
 - தவளைப் பதிகம்
 - தனி - கட்கவி
 - தனி வெண்பா
 - தனி வெண்பாக்கள்
 - தனிப்பாடல்
 - தனிப்பாடல் கட்டளைக் கலித்துறை
 - தனிப்பாடல்கள்
 - தாடாளன் உளம் கவர்வாய் - பதிகம்
 - தாடாளன் காணப் பெற்றேன் - பதிகம்
 - தாடாளன் திருப்புகழ்
 - தாடாளன் பதிகம்
 - தாடாளன் வஞ்சனை செய்யேல் - பதிகம்
 - தாடாளன் வெண்பா
 - தாணு கட்டளைக் கலிப்பா
 - தாழிசை
 - திண்டிவனம் அரன் பதிகம்
 - திண்டிவனம் அருட்குறிப்புணர்த்தினாளே
 - திண்டிவனம் சிவகுருபரன் வகுப்பு
 - திண்டிவனம் சிவபெருமான் பதிகம்
 - திண்டிவனம் செங்கதிர் வேலான்
 - திண்டிவனம் திருப்புகழ்
 - திண்டிவனம் திருமால் பதிகம்
 - திண்டிவனம் புரக்கும் மாதவன்
 - திண்டிவனம் பெரிய கணபதி
 - திம்மையன்பாளையம் - சுந்தர விநாயகன்
 - திம்மையன்பாளையம் செவ்வேளே
 - திம்மையன்பாளையம் திருப்புகழ்
 - தியாகச் சிவனார் பதிகம்
 - தியானாநுபூதி நூல்
 - திரிபந்தாதி
 - திரிபுக்கவி
 - திரிபுரசுந்தரி பதிகம்
 - திரிவந்தாதி
 - திருக்கண்டீச்சரம் அரன் பதிகம்
 - திருக்கண்டேச்சுரம் உள்ளானே
 - திருக்கண்ணபுரம் - திருமால் பதிகம்
 - திருக்கழுக்குன்றம் கடவுள் சிவன்
 - திருக்காமீச்சுரம் அரன்
 - திருக்குற்றாலத்துறை சிவன் பதிகம்
 - திருக்கூட்டப் புகழ்ச்சி
 - திருக்கூத்தியற்றுவாயே
 - திருக்கோவிலூர் உலகளந்த மாயவன்
 - திருக்கோவையார்
 - திருச்சிராப்பள்ளி மேவிய சிவன்
 - திருச்செங்காட்டங்குடி சிவன் பதிகம்
 - திருச்செங்குன்றூர் சிவன் பதிகம்
 - திருச்செங்குன்றூர் சிவன் வந்திட்டேன் என்ற பதிகம்
 - திருச்செங்குன்றூர் திருப்புகழ்
 - திருச்செங்குன்றூருள்ளானே
 - திருச்செங்கோட்டுக் குமரவேள்
 - திருச்செங்கோடு (சிவன், முருகன்) தேசிகனே
 - திருச்செங்கோடு அயிலணிகைப் பெருமைக்காரன் வகுப்பு
 - திருச்செங்கோடு அர்த்த நாரீச்சுரன்
 - திருச்செங்கோடு கல்விழுந்திடாதபடி காத்த தெய்வம்
 - திருச்செங்கோடு கொலை நீக்கி அருள்வாயே
 - திருச்செங்கோடு சிவபிரான்
 - திருச்செங்கோடு சிவாம்பிகை
 - திருச்செங்கோடு செவ்வேள் பதிகம்
 - திருச்செங்கோடு சொன்னபடி செய்வானே
 - திருச்செங்கோடு திருப்புகழ்ப் பதிகம்
 - திருச்செங்கோடு தெய்வப் பதிகம் (மூவர்)
 - திருச்செங்கோடு நாகமலை மால் பதிகம்
 - திருச்செங்கோடு நாகமலைவிசாகன் சந்தப் பதிகம்
 - திருச்செங்கோடு பரிமளவல்லித் தாயார்
 - திருச்செந்தூர் திருப்புகழ்
 - திருச்செந்தூர் நற்றாயிரங்கல் வண்ணம்
 - திருச்செந்தூர் வெண்பா வந்தாதி
 - திருத்துறையூர் கணபதி வெண்பா
 - திருத்துறையூர் சிவபிரான் பதிகம்
 - திருத்துறையூர் சிவலோகநாயகி பதிகம்
 - திருத்துறையூர் திருப்புகழ்
 - திருத்தொண்டத் தொகை
 - திருத்தொண்டர் திருவந்தாதி
 - திருத்தொண்டர் புராணத் தொகை
 - திருநாவுக்கரசர் பதிகம்
 - திருநாளைப் போவார் வெண்பா
 - திருநெல்லை மணக்கோலமுடையார்
 - திருநெல்வேலி அப்பர் நீரே
 - திருநெல்வேலி காந்திமதி நாயகியே
 - திருநெல்வேலி அம்பலத்து வேலவனே
 - திருநெல்வேலி அலங்கார சட்கம்
 - திருநெல்வேலி அனவரத தான் விநாயகர்
 - திருநெல்வேலி அனவரததான விநாயகர்
 - திருநெல்வேலி அனவரதப் பிள்ளையாரே
 - திருநெல்வேலி கணபதி - பதிகம்
 - திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள்
 - திருநெல்வேலி கருணைமாலே
 - திருநெல்வேலி காந்திமதியம்மன்
 - திருநெல்வேலி கோமதியம்மன்
 - திருநெல்வேலி சந்தி விநாயகர்
 - திருநெல்வேலி சித்திரத்துறை சிவகுருபரன்
 - திருநெல்வேலி தனிவெண்பாக்கள்
 - திருநெல்வேலி திருமின்னாளே
 - திருநெல்வேலி தொண்டநயினார் அறுசீர்
 - திருநெல்வேலி தொண்டநயினார் எண்சீர்
 - திருநெல்வேலி தொண்டநயினார் எழுசீர்
 - திருநெல்வேலி நவரத்தினத் திருப்புகழ்
 - திருநெல்வேலி பஞ்சரத்தின மாலை
 - திருநெல்வேலி பதிகம் திருப்புகழ்
 - திருநெல்வேலி வெண்ணிறக்கமல வாணியே
 - திருநெல்வேலிக் காந்திமதிக் கோபுரத்துக் கந்தன்
 - திருநெல்வேலித் தெய்வமே
 - திருநெல்வேலியுள்ளானே பதிகம்
 - திருப்பரங்கிரி செங்கதிர் வேலன் பதிகம்
 - திருப்பரங்குன்றுள்ளான்
 - திருப்பாதிரிப் புலியூர் அம்மன், கணபதி வெண்பா
 - திருப்பாதிரிப் புலியூர் திருப்புகழ்
 - திருப்பாதிரிப் புலியூரான் பதிகம்
 - திருப்பாதிரிப்புலியூர்
 - திருப்புகலூர் திருமேனி வகுப்பு
 - திருப்புகலூர் புண்ணிய மாலை
 - திருப்புகழ்
 - திருப்போரூர் முருகன்
 - திருமகளந்தாதி
 - திருமங்கலம் சிவன் பதிகம்
 - திருமலை என்ற பெண் குழந்தை பிரிவால் பாடியவை
 - திருமாயன் துயில் விட்டெழுவானே
 - திருமால் செவ்வேளான பதிகம்
 - திருமால் பதிகம்
 - திருமாலந்தாதி
 - திருமுடியடவு
 - திருமுதுகுன்றூர் சிவன் பதிகம்
 - திருமுலைப்பால் வேண்டு பதிகம்
 - திருமுறை கண்ட புராணம்
 - திருமூலர் குணவாகடம்
 - திருமேனி சிவப்பு
 - திருவடி சூட்டினானே - பதிகம்
 - திருவடித்துணை
 - திருவண்ணாமலை - மெய்யடியார் தவமே
 - திருவண்ணாமலை ஆறெழுத்தலங்காரம்
 - திருவண்ணாமலை உண்ணாமுலையாள் - பதிகம்
 - திருவண்ணாமலை ஏழிளையனார் திருப்புகழ்
 - திருவண்ணாமலை ஓராயிரம் தீபங்களே
 - திருவண்ணாமலை கந்தா நித்திரை நீங்குவாய்
 - திருவண்ணாமலை கம்பத்திளைஞனார்
 - திருவண்ணாமலை கோபுர முகப்பின் வடபால்
 - திருவண்ணாமலை கோபுர வாயிலுக்கு வடவருகில் கந்தன்
 - திருவண்ணாமலை கோபுரக் களிறே
 - திருவண்ணாமலை கோபுரக் குகனே
 - திருவண்ணாமலை கோபுரம் + தூண்
 - திருவண்ணாமலை கோயில் தெய்வமே
 - திருவண்ணாமலை சித்து விளையாடல் செய்வாய்
 - திருவண்ணாமலை திருப்பணிக்குப் பொன் தரவேண்டல்
 - திருவண்ணாமலை திருப்புகழ் கோபுரத் திளையனார்
 - திருவண்ணாமலை திருவுளமிரங்காய்
 - திருவண்ணாமலை நோய்தீர வேண்டு
 - திருவண்ணாமலை வடபுறத்தில் நிற்கும் முருக
 - திருவண்ணாமலை வேலணிந்து கொண்ட பதிகம்
 - திருவண்ணாமலை வேலணிய வேண்டு பதிகம்
 - திருவண்ணாமலையான் - பதிகம்
 - திருவதிகை அம்பிகை, விநாயகர் வெண்பா
 - திருவதிகை வீரட்டத்தரன்
 - திருவதிகை சரம்தந்த பெருமாளே - வெண்பா
 - திருவதிகை சிவபெருமான்
 - திருவதிகை முருகன் திருப்புகழ்
 - திருவயிந்திரபுரம் இலக்குமி, அயக்கிரீவன், தேசிகன்- வெண்பாக்கள்
 - திருவயிந்திரபுரம் ஐங்கரன் பதிகம்
 - திருவயிந்திரபுரம் திருப்புகழ்
 - திருவயிந்திரபுரம் தேவநாயகன் வகுப்பு
 - திருவரங்கத் திருவாயிரம்
 - திருவரங்கம் இதழகலந்தாதி
 - திருவருட் கண்ணி
 - திருவருட் சிந்தனை
 - திருவருட் சிவனே
 - திருவருட் பதிகம்
 - திருவருட்போதம்
 - திருவருணாட்டம்
 - திருவருணை குகைநமச்சிவாயர் பதிகம்
 - திருவருணைப் பதிற்றுப் பத்தந்தாதி
 - திருவருள் வழக்கு
 - திருவருள் விளக்கம்
 - திருவல்லிக்கேணி
 - திருவல்லிக்கேணி 700 பொன் கடன் சீட்டுப் பதிகம்
 - திருவல்லிக்கேணி திருமால்
 - திருவனந்த சயனத்தந்தாதி (யமகம்)
 - திருவனந்த திருப்புகழ்ப் பதிகம்
 - திருவனந்தபுரம் - அழைத்தபடி வந்துற்றேன்
 - திருவனந்தபுரம் - பொய்யனே ஆனான்
 - திருவனந்தபுரம் அழைத்த மாதவன்
 - திருவனந்தபுரம் ஏமாற்ற எண்ணினன்
 - திருவனந்தபுரம் சத்தியம் சத்தியமாகத் தயை புரகுவாய்
 - திருவனந்தபுரம் செங்கண்மால்
 - திருவனந்தபுரம் பதுமநாபன்
 - திருவனந்தபுரம் பனுவல் விலை தருவாயே
 - திருவனந்தபுரம் மானிபோல் வரக்கண்டேனே
 - திருவாசகம்
 - திருவாதவூர நாயனார் புராணம்
 - திருவாமாத்தூர் அந்தணனே அமரர் கோவே
 - திருவாமாத்தூர் ஏன்கிறி செய்கின்றீர்
 - திருவாமாத்தூர் கணபதி வெண்பா
 - திருவாமாத்தூர் சிவன் பதிகம்
 - திருவாமாத்தூர் தலபுராணம்
 - திருவாமாத்தூர் திருப்புகழ்
 - திருவாமாத்தூர் பெம்மான்
 - திருவாமாத்தூர் மருவுமம்பிகை
 - திருவாமாத்தூர் முத்தாம்பிகை
 - திருவாமாத்தூர் முருகன் திருப்புகழ் (வாரத் திருப்புகழ்)
 - திருவாமாத்தூர் விநாயகர் பஞ்சரத்தினம்
 - திருவாரூர்
 - திருவாரூர் திருப்புகழ்
 - திருவாரூர் தெட்சிணாமூர்த்தி பஞ்சரத்னம்
 - திருவாவடுதுறை அரசே
 - திருவான்மியூர் சிவன்
 - திருவிசைப்பா
 - திருவிடைக்கழி முருகன் பதிகம்
 - திருவிளையாடற் கலிவெண்பா
 - திருவுரு மாமலை முருகன் பதிகம்
 - திருவுருமாமலைக் குகன் பதிகம்
 - திருவுருமாமலைக் முருகன் பதிகம்
 - திருவுருமாமலைத் திருப்புகழ்
 - திருவுருமாமலையான் பதிகம்
 - திருவெண்பா
 - திருவொற்றியூர் அழைத்த காரணம் ஏன்
 - திருவொற்றியூர் உத்தமனே
 - திருவொற்றியூர் சிவபிரான்
 - திருவொற்றியூர் முருகன் பதிகம்
 - திருவௌ¢ளிய குடியான் பதிகம்
 - தில்லை இதழகலந்தாதி
 - தில்லை நடராச ஞானமணியே
 - தில்லை நடராயனே
 - தில்லை பதிக பஞ்சகம் ஈசன் - சத்தி - மால் - கணபதி - முருகன்
 - தில்லைச் சிவன் பதிகம்
 - தில்லைப் பாண்டிநாயகன் பிள்ளைத்தமிழ்
 - தில்லைமன்று தூணிலுறை குகன் பதிகம்
 - தில்லைமன்று தூணிலுறை குகன் வகுப்பு
 - திவாகரம்
 - துயரடராது விரும்பியவாரருள்
 - துயரமினிச் சகிக்க முடியாது
 - துயில் நீத்தெழுவாயே பதிகம் + வெண்பா -1
 - துன்பமெல்லாந் தவிர்த்தருள்
 - தூக்கணம்பாக்கம் பூசனை கொள்வாயே
 - தூத்துக்குடி முத்துசாமிப் பிள்ளை பாடல்
 - தூதுவிட்ட பதிகம்
 - தெய்வ நாயகன் பதிகம்
 - தெய்வ மஞ்சரி நூல்
 - தெய்வ முன்னிலை நூல்
 - தெய்வ வழக்குப் பிரபந்தம்
 - தெய்வ வெண்பா
 - தெய்வக் கண்ணி
 - தெய்வக் கூட்டமே
 - தெய்வத் திருப்பதிகம்
 - தெய்வத் திருவாயிரம்
 - தெய்வப் பதிகம்
 - தெய்வப் பதிகம் (இத்தனை செய்தருளே)
 - தெய்வப் பதிகம் (பிணி தீர்த்தருள்வாயே)
 - தெய்வம் பெரிய பதிகம்
 - தெய்வமஞ்சரி நூல்
 - தெய்வானைத்தாய்ப் பதிகம்
 - தெய்வீகப் பதிகம் + தனி விருத்தம்
 - தெருத் தெருவாயலைகின்றேன்
 - தென்காசியூர்ச் சிவன் பதிகம்
 - தென்புதுவையூர்க் குகன்
 - தென்பேறு உடையான்
 - தென்பேறு நெடுமால்
 - தேவபுரித் திருப்புகழ்
 - தேவை முருகன் பிள்ளைத்தமிழ்
 - தேவைத் திரிவந்தாதி
 - தேள்விடம் தீர்க்க வேண்டு பதிகம்
 - தையல்நாயகித் தாயார் பதிகம்
 - நடேசன் இறந்தபின் பாடியது
 - நடேசன் சுரநோய் தீரப்பாடியது
 - நந்தனப் பாமாலை
 - நயனவிதி
 - நல்ல தெய்வங்கள் பதிகம்
 - நல்லாற்றூர் ஐங்கரன்
 - நல்லாற்றூர் குகவேள்
 - நல்லாற்றூர் குகவேள் திருப்புகழ்
 - நல்லாற்றூர் சிவப்பிரகாசமூர்த்தி
 - நல்லாற்றூர் சிவன்
 - நல்லாற்றூர் திரிபுரசுந்தரி
 - நல்லாற்றூர் நாரணன்
 - நவரசமஞ்சரி
 - நவவீரர் பதிகம்
 - நற்றாயிரங்கல் வண்ணம் பூரணத்தை
 - நாடி - பலதிரட்டு
 - நாடி நூல்
 - நாணயம் தவறினானே
 - நாணயம் மழைபெய்யப்புரி
 - நாதாந்த விளக்கம்
 - நாமாவளி - (முருகன் - சிவன் - திருமால்)
 - நாரதன் பூண்டி
 - நாராயணன் - பதிகம்
 - நான் தனியன் என்ற பதிகம்
 - நான்கனேரிச் சிவன் பதிகம்
 - நானிலைச் சதகம்
 - நிட்டூர மாலை
 - நிட்டூரப் பதிகம்
 - நிமித்த சூடாமணி
 - நிரோட்டத் தொருதொடைச் செய்யுளந்தாதி
 - நிரோட்டத்தலைச் செய்யுளந்தாதி வெண்பா
 - நிலமின் பதிகம்
 - நீலகண்ட குரு
 - நெஞ்சொடு நிகழ்த்தல்
 - நெடும்பாக்கத் துறைவன்
 - நெல்லி நகர் அம்மன் வெண்பா
 - நெல்லி மாநகர் - ஈசன் பதிகம்
 - நெல்லி மாநகர் அம்பிகை, விநாயகர், விட்டுணு வெண்பா
 - நெல்லி மாநகர் தட்சிணாமூர்த்தி வெண்பா
 - நெல்லி மாநகர் புவனாம்பிகை பஞ்சகம்
 - நெல்லி மாநகர் முருகன் திருப்புகழ், இலக்குமி வெண்பா
 - நெல்லிவனத் துறைவான் பதிகம்
 - நெல்லை - பஞ்சாயுதத் திருப்புகழ்
 - நெல்லை இதழகலந்தாதி
 - நெல்லை இருக்கின்றேன் என்ற பதிகம்
 - நெல்லை ஈசன் பதிகம்
 - நெல்லை காந்திமதித்தாயார் பதிகம்
 - நெல்லை பதிக மண்டலம் (45 பதிகம்)
 - நெல்லை பாதி தில்லை பாதி வெண்பா
 - நெல்லை மாநகர் நிலவிய சிவன் பதிகம்
 - நெல்லை மாநகர் மேவிய சிவன் பதிகம்
 - நெல்லை யமகவந்தாதி
 - நெல்லை வடிவம்மன் பதிகம்
 - நெல்லைக் கலம்பகம்
 - நெல்லைச் சிவனார் பதிகம்
 - நேரிசை பஃறொடை வெண்பா
 - நோய்க்கு மருந்து
 - நோயின் குணம்
 - நோயின் குணமும் மருந்தும்
 - நோயின் சாரம்
 - பகவத்கீதை 4-வது சம்பிரதாய வத்தியாயம்
 - பட்சி சாத்திரம்
 - படைவீட்டுத் திருப்புகழ்
 - படைவீட்டுப் பதிகங்கள் 36
 - பண்டைச் சோழ நல்லூரான்
 - பணகுடி கைவிளங்கவில்லை என்றேன் காட்டீனிரே என்ற பதிகம்
 - பணகுடி சவன் பதிகம்
 - பத்துப் பதிகம் (10 பதிகங்கள்)
 - பதஞ்சலி கற்பமுறை சுருக்கம்
 - பதார்த்த சிந்தாமணி
 - பதிகச் சதகப் பிரபந்தம்
 - பதிகம்
 - பதிகமணிமாலை (27 பதிகங்கள்)
 - பதிகவுந்தி நூல்
 - பதிற்றுப்பத்தந்தாதி
 - பரசிவன் பதிகம்
 - பரமகுருநாதன் பதிகம்
 - பரிதிகுகனான பதிகம்
 - பரிபூரண நாடி
 - பல நாமக்காரன் வகுப்பு
 - பலநாமக்காரன் வகுப்பு
 - பழனி கண்நோய் தீர்த்தருளே
 - பழனித் திருவாயிரம்
 - பழனிமலை சிவகுரு தேசிகன்
 - பற்றொழியப் புரிவாயே
 - பன்னிரு பதிகம்
 - பனை முறியப்பாடிய வெண்பாப் பதிகம்
 - பனைய சத்தியவல்லித்தாய்
 - பனையபுரத்தரசே
 - பாண்டிக் கொடுமுடி அம்பிகை, கணபதி, திருமால், சங்கரி
 - பாண்டிக் கொடுமுடி சிலேடை வெண்பா
 - பாண்டிக் கொடுமுடி சிவபிரான்
 - பாண்டிக் கொடுமுடி முருகன் திருப்புகழ்
 - பாண்டியன் திருமுடியடவு
 - பாண்டியனுக்கு வௌ¢ளாளன் நாள்கவி
 - பார்ப்பனப்பட்டி கணபதியே பதிகம்
 - பார்ப்பனப்பட்டி மாலே பதிகம்
 - பாவனைபோல் வந்தெனை ஆள்வாய்
 - பாவிகள் பொடியாவர் என்ற பதிகம்
 - பாழினிற் கொல்லாதே
 - பாற்கடல் விட்டு படிமிசை வருக
 - பாறைக் கிணற்றந்தாதி
 - பாறையறும் பதிகம்
 - பிணிநீங்கச் செய்வாயே
 - பித்த நிதானம்
 - பிரகாச மாலை
 - பிரணவக் களிற்றுப் பதிகம்
 - பிரணவாநுபூதி
 - பிரமமுனி சாஸ்திரம்
 - பிரமமுனி சூத்திரம் 380
 - பிரிந்திடா தருள்செய்வாய்
 - பிள்ளைப் பெருமாள்
 - பிள்ளைப்பிணி வாகடம்
 - புண்ணியன் பதிகம்
 - புதுப்பாளையம் திருப்புகழ்
 - புதுப்பாளையம் முருகன்
 - புதுவை குருபரனே வகுப்பு
 - புதுவை சித்தி விநாயகர் திருப்புகழ்
 - புதுவை சித்தி விநாயகர் மும்மணிக் கோவை
 - புதுவை சிவனாரே
 - புதுவை திரிபுர சுந்தரியே
 - புதுவை திருப்புகழ்
 - புதுவை நகர் கலியற்றோடுமே
 - புதுவை நகர் குமரனந்தாதி
 - புதுவை நகர் சிவன் பதிகம்
 - புதுவை நகர் தவணை பொய்யாதருள்
 - புதுவை நகர் தனிவெண்பாக்கள்
 - புதுவை நகர் பெருமாள் பதிகம்
 - புதுவை நகர் முருகன் திருப்புகழ்
 - புதுவை நகர் முருகன் பதிகம்
 - புதுவை நகர்ச் சிவன் பதிகம்
 - புதுவை நாய்க்குருளை உய்யப் புரிந்த
 - புதுவை நாராயணனே - பதிகம்
 - புதுவை நாராயணனே - வகுப்பு
 - புதுவை மணற்குள விநாயகன்
 - புதுவை மாதவனே திருப்புகழ்
 - புதுவை மாதவனே பதிகம்
 - புதுவை மூவாறுவிழி முருகோனே
 - புதுவை விக்கினேச்சுரனே
 - புயவகுப்பு
 - புரத்திலமர்ந்¢த பிரான்
 - புருடேசநகர் குகன் பதிகம்
 - புலத்தியர் வைத்திய சூத்திரம்
 - புலிப்பாணி வைத்தியம்
 - பூமிதேவி
 - பூரண சாத்திரம்
 - பூரம் கடிக்கவிட்டாயே வாணி என்ற பதிகம்
 - பெயர் தெரியாத ஒரு மருத்துவ நூல்
 - பெரிய குருபரனே
 - பெரிய சிவனார் - பதிகம்
 - பெரிய புராணம்
 - பெரும்பேற்றுமலை முருகன்
 - பெருமங்கலத்தான் பதிகம்
 - பெருமங்கலம்
 - பெருமாள் திருப்புகழ்
 - பெருமாள் பதிகம்
 - பெருமாளந்தாதி (திருமால் - முருகன் )
 - பெருமாளே
 - பெருமாளைக் கட்டுவேன் - பதிகம்
 - பேரருட் குருவாமதுவே வண்ணப் பதிகம்
 - பேரை மாநகர் சாந்தலிங்க தேசிகர்
 - பேரை மாநகர் பெரிய சங்கரன்
 - பேரை மாநகர் மாதவன்
 - பேரொலியலந்தாதி - எ.கா
 - பொதியமலை அகத்திய மாமுனிவர் பதிகம்
 - பொது நூல்
 - பொதுத் திருப்புகழ்
 - பொதுத் தெய்வம்
 - பொதுவான தெய்வ வகுப்பு
 - பொருட் கடன் தீர்த்தருள்வாயே
 - பொருளகத்தியமருள்வாயே
 - பொருளாசை தீரப் பாடியது (குரு)
 - பொன்பெயர்த்தொருண்டை நல்கு
 - போகநாதர் சரக்கு வைப்பு சூத்திரம்
 - போகம் செய்யும் வகை
 - மகாபாரத அம்மானை
 - மகுட ஆசிரியப் பதிகம் (குருவே)
 - மகுட ஆசிரியப் பதிகம் (தெய்வமே)
 - மங்களக் கீர்த்தனை
 - மச்சமுனி நிகண்டு
 - மச்சமுனி பெருநூல்
 - மதுரை அங்கையற் கண்ணம்மை
 - மதுரை ஆலவாய்க் கோயில் அமர் பெம்மானே
 - மதுரை பரமசிவன் பதிகம்
 - மதுரை முனி 350-ல் மேகனாதி தைலம்
 - மதுரைப்பாக்கம் மாயவன்
 - மதுரைப்பாக்கம் வீரபத்திரன்
 - மயிலக்கிரி குமரவேள் பதிகம்
 - மயிலக்கிரி குமரேசன் வகுப்பு
 - மயிலக்கிரி சிவஞான தேசிகன்
 - மயிலக்கிரி முருகன் வெண்பா
 - மயிலக்கிரி யார்க்கினி அருள் செய்வாயே
 - மயிலம் கலம்பகம்
 - மயிலம் சிவஞான பாலையன்
 - மயிலம் திருப்புகழ்
 - மயிலம் மயிலத்தரசே
 - மயிலம் மலைக் குமரவேளே
 - மயிலலங்காரம்
 - மயிலாபுரி கணபதி வெண்பா
 - மயிலாபுரி குகவேள்
 - மயிலாபுரி அம்மன் வெண்பா
 - மயிலாபுரி குகன் பதிகம்
 - மயிலாபுரி சிவன் பதிகம்
 - மயிலாபுரிச் சிவன் பதிகம்
 - மயிலாபுரியானே
 - மரக்காணம் சிவன் பதிகம்
 - மருத்துவ அகராதி
 - மருத்துவ அட்டவணை
 - மருத்துவ நூல்
 - மருத்துவக் குறிப்புகள்
 - மருத்துவச் செய்திகள்
 - மருதப்பன் விருத்தங்கள்
 - மருந்து செய்முறை
 - மருந்து செய்முறை (அகத்தியர் 400-ல் சொல்லியபடி கைமுறை)
 - மருந்துச் சாத்தும் விவரம்
 - மருவிய குஞ்சரமுகன் வகுப்பு
 - மழை பொழியப் புரிவாயே தனி வெண்பா
 - மழை பொழியப் புரிவாயே பதிகம்
 - மழைப் பதிகம்
 - மனத்தே வரும் பெருமான் பதிகம்
 - மனுநெறித் திருநூல்
 - மாதைத் திருவிழாப் பாடல்கள்
 - மாந்திரீகச் செய்திகள்
 - மாம்பூதூர் வாரணப் பதிகம்
 - மாயன் பதிகம்
 - மால் பதிகம்
 - மாலைமாற்று - உரை
 - மாலைமாற்றுக் கவிகள்
 - மீனாட்சி பதிகம்
 - முசுகுந்த நாடகம்
 - முத்தமிழ்ப் பாமாலை
 - முத்தாலு நகர் - விநாயகனே
 - முத்தாலு நகர் திருப்புகழ், வகுப்பு (குமரகுருநாதனே)
 - முத்தாலு நகர் முருகவேளே
 - முத்தி மூன்றையும் மொழிந்த முன்னவன்
 - முத்துக்குமாரசாமி திருப்புகழ்
 - முத்துக்குமாரசாமி பதிகம்
 - முத்துக்குமாரன் திருப்புகழ்
 - முத்துக்குமாரன ¢வகுப்பு
 - முருகதாசரருளிய பதம்
 - முருகதாசனநுபூதி
 - முருகப் பெருமான் திருப்புகழ்
 - முருகவேள் பதிகம்
 - முருகன்
 - முருகன் கடன் தீரப் புரிவாயே
 - முருகன் திருடன் தானே
 - முருகன் திருப்புகழ்
 - முருகன் திருப்புகழ்ப்பா
 - முருகன் பதிகம்
 - முருகன் பதிகம் (துறை)
 - முருகன் மெத்த நல்லவனே
 - முருகானந்தலகிரி நூல்
 - முருகேசனருள் கூடலாமே
 - முலைப்பாலருள் என்ற சத்தி பதிகம்
 - மூலிகை விபரம்
 - மூவகை ஏடணை தீர்த்தருள்
 - மூன்று பதிகம் (3 பதிகங்கள்)
 - மெய் வழக்குமாலை
 - மெய்ச்சுருக்கம்
 - மெய்ஞ்ஞானம் - திருமந்திரம் 1500
 - மெய்யாயிலங்கிடச்செய்
 - மெய்வரோதயச் சதகம்
 - மெய்வழக்குப் பதிகம் (பொது)
 - மேட்டுப்பாளையம் வாழ் சிவனே
 - மொழிநெறியெழுபா
 - மோட்சகுளத்தூர் முகுந்தமால்
 - யமகவந்தாதி
 - யமகவந்தாதி - 97-ம் பாடல் உரை, ஏகபாதம்
 - யாத்திரைத் துயர்தீர் தெய்வமே
 - யூகமுனி பலதிரட்டு
 - வக்கரை சிவசங்கரனார் பதிகம்
 - வக்கரை சிவன்
 - வக்கரை நும்கோயில் புதுக்கிக் கொள்வீரே
 - வக்கரை மகா கணபதி
 - வக்கரை மகா கணபதி வகுப்பு
 - வசியம்
 - வஞ்சி நாட்டுக் கணபதியே
 - வடநாவல் அமர்வான் பதிகம்
 - வடபுதுவைமால்
 - வடலூரான் எழுந்திடப் புரிந்திலையே பதிகம்
 - வடலூரான் வருவானென்றுரைத்தானே
 - வடவொழுகை அம்பிகை வெண்பா - முருகன் திருப்புகழ் - வகுப்பு
 - வடவொழுகை சிவன் பதிகம்
 - வடவொழுகை பொன்னங் கணபதி
 - வடவொழுகை மனத்தினுள் வருகின்றானே
 - வடுகபுரிச் செங்காட்டு கணபதி
 - வண்ண விருத்தம்
 - வண்ணத்தியல்பு
 - வண்ணப் பாமாலை
 - வண்மையளித்தருளே
 - வந்தவாசிக் கணபதி பதிகம்
 - வராகி மாலை
 - வருக்கக் குறள்
 - வருடப் பதிகம் (60 பதிகங்கள்)
 - வருஷ சாத்திரம்
 - வள்ளித்தாய்ப் பதிகம்
 - வள்ளியம்மன் பிள்ளைக் கவி
 - வள்ளியூர்மலை வள்ளல் பதிகம்
 - வளவனூர் சிவபெருமான் பதிகம்
 - வளவனூர் நெடுமாயன் பதிகம்
 - வாக்கூர் அறம் வளர்த்த நாயகி
 - வாக்கூர் திருமால்
 - வாக்கூர் முருகோன்
 - வாக்கூர் வாழ் சிவன்
 - வாகட சாத்திரம் - நொடி சிந்தாமணி
 - (பலிக்க அருளே) வாணித்தாய் பதிகம்
 - வாணித்தாய்ப் பதிகம்
 - வாணுமாமலை மால் பதிகம்
 - வாத நிதானம்
 - வாதபுரியான்
 - வாய்ப்புண் ஒழியப் புரிவாய் பதிகம்
 - வாய்ப்புலவோர்பாற்புகல் நவரத்தினம்
 - வாய்வு பத்து, நாடி பத்துக்கு விபரம்
 - வாரப்பதிகம்
 - வாருகாள்பட்டினம் கணபதி
 - வாருகாள்பட்டினம் வீரபத்திரனார்
 - வால்மீகர் நாடி சூத்திரம்
 - வால்மீகி ராமாயணம்
 - வாலை வாகடம்
 - வாழ்குகன் வெண்பா
 - வாழி விருத்தம்
 - வாழும் மாயவன் பதிகம்
 - வாளொளிப்புற்றூர் வாழ் சிவன் பதிகம்
 - வானூர் அம்பிகை வெண்பா
 - வானூர் சிவனார்
 - வானூர் திருமால்
 - வானூர் முருகன் திருப்புகழ்
 - வானூர்க் கணபதி
 - விக்கிரம பாண்டி விமலர் வெண்பா கீர்த்தனை
 - விக்கிரமபாண்டி சிவன்
 - விக்கிரமபாண்டி தமிழ் கொண்ட அரி பதிகம்
 - விக்கிரமபாண்டி நெடுமால்
 - விக்கிரமபாண்டி மேவிவளர் சிவன்
 - விக்கிரமபாண்டி வாழ் பிள்ளையாரே
 - விக்கிரமபாண்டி விளையாடல் செய்மின் சிவன்
 - விக்கினந் தீர்த்தருள்வாயே
 - விநாயகர் திருப்புகழ்
 - விநாயகர் வெண்பா
 - விபூஷணன் புத்திப் படலம்
 - வியாதியின் குணம்
 - விராலிமலை வேள் பதிகம்
 - விருத்தம்
 - விருத்தாசலமுடையான் பதிகம்
 - வில்லிநகர் அகவல் - திருப்புகழ்
 - வில்லிப்பாக்கம் நகர்ச் சிவனே
 - வில்லிப்பாக்கம் பதிற்றுப்பத்தந்தாதி
 - வில்லிப்பாக்கம் முத்தம்மை பஞ்சகம்
 - வில்லிப்பாக்கம் வேதியனே பதிகம்
 - வில்வவனத்துறை என்றும் வாழ் குயிலே
 - வில்வவனத்துறை திருக்காமேச்சுரனார் பதிகம்
 - வில்வவனத்துறை முருகன் திருப்புகழ்
 - வில்வவனத்துறை விநாயகர் வெண்பா
 - வில்வவனத்துறை வேதியனே
 - விழுப்புரம் உறைவிண்ணவன் பதிகம்
 - விழுப்புரம் ஊர்புரந்தருள் விகர்தமால்
 - விழுப்புரம் நின்ற விக்கினேச்சுரனே
 - விழுப்புரம் பொலிந்து வாழ் உமை
 - விழுப்புரம் மேவிய பெருமாளே திருப்புகழ்
 - விழுப்புரம் வளர்வேல் முருகோன்
 - விழுப்புரம் வளர்வேல் முருகோன் திருப்புகழ்
 - விழுப்புரம் வாழ் சிவனே
 - விற்பனம்
 - வினையாகிலும் தவிர்த்தாள் சண்முகா
 - வீரவாகு வண்ணப் பதிகம்
 - வீரவாகு வாளலங்காரம்
 - வீரவாகுதேவர் பதிகம்
 - வீரை நகர் சுபசகுனம் கொடுத்த பதிகம்
 - வீரை நகர் நெடுமால் பதிகம்
 - வீரை மாதவன் + கீர்த்தனை -1
 - வீரைக் கலம்பகம் (நவநீதகிருட்டிணன்)
 - வீரைநகர் கிருட்டிணமூர்த்தி பதிகம்
 - வீரைப்பதி திருமால் திருப்புகழ்
 - வீரைப்பதி திருமால் பதிகம்
 - வெண்பாவந்தாதி
 - வெற்புறை சிவகுருபரன் வகுப்பு
 - வேண்டுகோள் மாலை
 - வேதபுரி பூதவேதாள வகுப்புச் சந்த திருப்புகழ்
 - வேதபுரி வரதர் வெண்பா - திருப்புகழ்
 - வேதபுரிச் சிவன் பதிகம்
 - வேதவன நாதன்
 - வேதவனம் புதுவை நகர் முருகேசன்
 - வேதியன் பதிகம்
 - வேலலங்காரம்
 - வேலுடையான் பட்டினம் முருகன்
 - வேலூர் அமுதச் சித்தர் பதிகம்
 - வேலூர் குகவேளே
 - வேலூர் திருப்புகழ்ப் பதிகம்
 - வேலூர் முருகன் பதிகம்
 - வேலூரில் இளையனாரே திருப்புகழ்
 - வேலூரில் இளையனாரே பதிகம்
 - வேலூரில் வயலக்காவூர் சிவன் பதிகம்
 - வேளூர்ப் பதிகம்
 - வேற்படைப் பதிகம்
 - வேற்பெருமான் பதிகம்
 - வைகுண்ட அம்மானை
 - வைணவ சூத்திரம்
 - வைத்திய இரத்தினச் சுருக்கம்
 - வைத்திய சாரம்
 - வைத்திய சுருக்கம்
 - வைத்திய சூத்திரம்
 - வைத்திய ரத்தினச்சுருக்கம்
 - வைத்தியக் கும்மி
 - வைத்தியனார் பதிகம்
 - வெள்ளாளன் திருப்பணிப் பிள்ளையான வரலாறு
 - வெள்ளை மாநகர் வேலன்
 - ஷ பாயிரக் கவி சேர்க்கை
 - ஸ்ரீரெங்க மகத்துவம்
 
 
 
 
 
- 
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
(1855 – 1942)
முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை
சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் புகைவண்டி நிலையமருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.02.1855 அன்று வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில் ‘சாமா’ எனப் பெற்றோர்கள் அழைத்து வந்ததையே இவருடைய ஆசிரியர் சாமிநாதன் எனத் திருத்தி அமைத்தார். பின்னர் அதுவே அவருடைய பெயராயிற்று.
ஐயரவர்களுடைய தந்தை வேங்கட சுப்பையர் இலக்கண இலக்கியப் பயிற்சியும் இசைப்புலமையும் பெற்றவர். தந்தையிடம் சிறந்த கல்விப் பயிற்சி பெற்ற சாமிநாத ஐயர் அரியலூர் சடகோப ஐயங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் போன்றோரிடமும் பாடங்கேட்டார். பின்னர் பலரின் உதவியுடன் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத் தம் பதினேழாம் வயதில் ஆசிரியராகப் பெற்றார். ஐயர் அவர்கள் பிள்ளையவர்களை நிழல் போலத் தொடர்ந்து நூல்கள் பலவற்றையும் பாடங்கேட்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பானையோலையில் எழுதப் பழகிய ஐயர், பிள்ளையவர்களின் பாடல்களைப் பானையோட்டில் எழுதலானார். இவரிடம் ஆறு ஆண்டுகள் கல்வி கற்ற இவர் கோபாலகிருட்டிண பாரதியாரிடம் இசைப் பயிற்சியும் பெற்றார்.
கல்லூரி ஆசிரியர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலமான பின் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரிடம் சில ஆண்டுகள் கல்வி கற்க ஐயர் ஆசிரியராகவும் மாறினார். பிள்ளையவர்களின் முதல் மாணவராகிய தியாகராசச் செட்டியார் தாம் கும்பகோணம் கல்லூரியில் ஆற்றிய தமிழாசிரியர் வேலையை ஐயருக்கு வாங்கி அளித்தார். அதுவே இவருடைய தமிழ்ப் பணிக்கு முதற்படியாயிற்று.
பதிப்புப் பணி
கும்பகோணத்தில் முன்சீபாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் ஐயரிடம் சீவகசிந்தாமணியைப் பாடங்கேட்க விரும்பி ஒரு நாள் ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வந்தார். அதிலிருந்து பிழைகளை எடுத்துக்காட்டிய ஐயரிடம் முதலியார் அவர்கள் தாங்களே இந்நூலை ஏன் திருத்தி அச்சிடக்கூடாது என வினவினார். அதன்படி ஐயரவர்கள் ஏடுகளைத் தேடத் தொடங்கினார். எல்லாச் சுவடிகளையும் ஒப்பிட்டு நோக்கி 1887 ஆம் ஆண்டில் சிந்தாமணியை வெளியிட்டார். இவருடைய இம்முதல் பதிப்புப் பணியே இவருக்கு மிகுந்த புகழை அள்ளித்தந்தது.
1888 ஆம் ஆண்டு பத்துப்பாட்டு நூலையும், 1892 இல் சிலப்பதிகாரத்தையும், பிறகு புறநானூறையும், 1898 இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய நூல்கள் யாவும் பல ஓலைச்சுவடிப் பிரதிகளை முறையாக ஆராய்ந்து திருத்தமான பாடங்கண்ட பிறகே வெளிவரலாயின. இதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பு ஆண்டுக்கணக்கிலாகும்.
நூல் வெளியீட்டுப் பணியில் முழுநேரமும் ஆர்வங்கொண்ட ஐயருக்குச் சென்னையில் பணி கிடைத்ததும் அவருடைய வளர்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று. சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் சாமிநாத ஐயரின் தமிழார்வத்தைக் கண்டுமெச்சி அவரைத் தம் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தினார். அதன் பின்னர் 1903 ஆம் ஆண்டில் ஐங்குறுநூறு நூலையும், 1904 இல் பதிற்றுப்பத்து நூலையும், 1918 ஆம் ஆண்டில் பரிபாடலையும் ஐயர் பதிப்பித்து வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டில் மாகாணக் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தில்லையில் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அமைத்த மீனாட்சி கல்லூரியின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஐயர் பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்றார்.
1906 ஆம் ஆண்டில் மகா மகோபத்யாயர் பெரும் பேராசான் என்னும் சிறப்புப் பெயருடன் ஆயிரம் வெண்பொற் காசுகளும் இவருக்கு அளிக்கப் பெற்றார்.
பாரத தர்ம மகாமண்டலத்தார், அவையினர் இவருக்குத் திராவிட வித்யா பூஷணம் (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டத்தையும், காஞ்சி காமகோடி பீடத்தலைவர் அவர்கள் தாட்சிணாத்ய கலாநிதி (தெற்கத்திய கலைச்செல்வன்) என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ஐயாயிரம் வெண்பொற் காசுகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.
ஐயரவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் (இலக்கியப் பேரறிஞர்) பட்டத்தை வழங்கியது. இப்பட்டத்தைப் பெற்ற ஐயரவர்கள் தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.
சென்னை, அண்ணாமலை நகர், மைசூர், காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழகத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த ஐயரவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக் குழுத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். இவருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டதார் இல்லை என்றே கூறலாம். மகாகவி பாரதியார் இவரை நேரில் கண்டு வாழ்த்திய பாடல்களே இதற்குப் பெருஞ்சான்றாகும்.
முன் இவன் அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன் பெருமை மொழிய லாமோ
என்றும்,
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே
என்றும் மிக்க உணர்ச்சிப் பெருக்கோடு இவரை வாழ்த்துவர் பாரதியார்.
தமிழ் நூல்கள்
கல்லூரியாசிரியர் வேலையைத் தவிர மற்ற காலங்களில் எல்லாம் நூல்பதிப்புப் பணியிலே மூழ்கியிருந்த ஐயரின் நூல்கள் மிகப்பல. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை மட்டுமின்றிப் பல நூல்களையும் அவர் வெளிக்கொணர்ந்தார். தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, உரை, சங்கரலிங்க உலா, திருவாரூர்க் கோவை, பழலைக் கோவை, கலைசைக் கோவை, சீகாழிக் கோவை, சிராமலைக் கோவை, சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தத்திரட்டு, திருமயிலைத் திரிபந்தாதி, திரு இலஞ்சி முருகன் உலா, திருக்கழுக்குன்ற உலா, திருப்புவாணநாதர் உலா, திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, கடம்பர் கோயில் உலா, மதுரை சொக்கநாதர் உலா, தேவை உலா, மான்விடு தூது, தமிழ்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, வண்டுவிடு தூது, சிவசிவவெண்பா, திருமலையாண்டவர் குறவஞ்சி, மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, தனியூர்ப்புராணம், நன்னூல் மயிலைநாதர் உரை, மதுரை மும்மணிக்கோவை, வலிவல மும்மணிக்கோவை, திருவாவடுதுறைக் கோவை ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட ஐயரவர்கள் நல்லுரைக் கோவை, புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, தமிழ் நெறி விளக்கம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், தியாகராசர் செட்டியார் வரலாறு, என் சரித்திரம் போன்ற பல அரிய உரைநடைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இத்துடன் அவர் ஆயிரக்கணக்கான சுவடிகளையும் சேகரித்துள்ளார்.
தமிழரின் பழமையைப் பறைசாற்றும் பெருநூல்களான சங்க இலக்கியங்களை இவர் அள்ளித்தந்ததும், பொது அறிவுக் களஞ்சியங்களான உரைநடை நூல்களையும் இவர் படைத்துத் தந்ததும், தமிழாய்வு செய்யும் பலருக்கு இன்றும் பயனளித்து வருகின்றன.
 
Tags :