தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருவேங்கடாசல முதலியார்

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவர் சென்னைக் கல்விச் சங்க தமிழ்ப் புலவராக இருந்தவர். சென்னையில் சரஸ்வதி அச்சுக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.

    பதிப்பு நூல்கள்

    அழகிய மணவாளதாசர் இயற்றிய திருவேங்கடந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருமாலிருஞ்சோலை மாலை, அழகரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி முதலியவற்றை இவர் 1830 இல் பிழையறப் பரிசோதித்துப் பதிப்பித்துள்ளவர். பல நூல்களுக்கு இவரே அச்சடுக்கிக் கொடுத்துள்ளார். கம்ப இராமாயணத்தைக் காண்டம் காண்டமாக முதன் முதலில் வெளியிட்டவர் இவரேயாவர். ஆரணியக் காண்டம் (1844), பாலகாண்டம் (1848), இராமநாடகம் (1850), பிரகலாதன் விலாசம் (1860), ஸ்ரீ கிருஷ்ணபகவான் தூது, அரிச்சந்திர புராணம் மூலமும் உரையும், 1869 போன்ற அரிய நூல்களையும் இவர் பதிப்பித்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:21:04(இந்திய நேரம்)