| 11. அவலம் 
 தீர்ந்தது | 
 
 | இதன்கண் : உருமண்ணுவா என்னும் 
 அமைச்சனை உதயணகுமரனுக்குத் துணைவனாகத் தோழர்கள் அமைத்ததும், அவ்அமைச் சன் அவ்உதயணனுடைய துயரத்தை
 அகற்றுதற்கும் ஓதிஞானமுடைய ஒரு 
 துறவியின்பால் சென்று குறிகேட்டற்கும் இலாவாண நகரத்தின் 
 பக்கத்திலுள்ள மலைச்
 சாரலிலே உண்டாட்டுத் தலைக்கீடாகச் சயந்தி 
 நகர மக்களுடன் உதயணனை அழைத்துச் செல்லக் கருதி அதற்கு அவனை
 உடம்படுவித்தலும் பிறவும் கூறப்படும்.
 | 
 
 |  | 
 
 | 
 
 
 5
 |  விலாவணை ஒழியான் வீணைக் கைவினைநிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகை 
 நினைந்து
 வைகல் தோறும் வான்மதி மெலிவின்
 பையுள் கொண்ட படிமை நோக்கி
 அரும்பெறல் அமைச்சரொடு ஒருங்குடன் 
 குழீஇக்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 10
 |  காவலன் அதிர்ந்த காலை மண்மிசைத்தாவில் பல்உயிர் தளர்ச்சி எய்தலின்
 எத்திறத்து ஆயினும் அத்திறம் 
 அகற்றுதல்
 மந்திர மாந்தர் தந்திரம் ஆதலின்
 வத்தவர் கோமான்கு ஒத்த 
 உறுதொழில்
 உத்தம மந்திரி யூகியின் பின்னர்
 அருமை சான்ற ஆய்பொருள் 
 கேள்வி
 உருமண் ணுவாவிற்கு உறுகடன் இதுஎனத்
 தாழாத் தோழர் தன்மேல் வைத்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 | 15 |  வீழாக் 
 காதலொடும் விரும்புவனன் ஆகிச்செய்பொருள் இதுவென ஐயம் 
 தீர
 மன்னுயிர் ஞாலக்கு இன்னுயிர் ஒக்கும்
 இறைபடு துன்பம் குறைபட எறியும்
 மருந்தின் பிண்டம் தெரிந்தனிர் கேண்மின்
 | உரை | 
 
 |  | 
 
 | 20 
 
 
 
 25
 |  தணப்பில் 
 வேட்கை தலைத்தலை சிறப்பஉணர்ப்புஉள் ளுறுத்த ஊடல் 
 அமிர்தத்துப்
 புணர்ப்புஉள் ளுறுத்த புரைபதம் 
 பேணும்
 காமக் காரிகைக் காதல் மகளிர்
 தாமப் புணர்முலைத் தலைபிணி உறீஇ
 யாமக் கோட்டத்து அருஞ்சிறைக் 
 கோடல்
 வணங்கா மன்ரை வாழ்வுகெட முருக்கி
 அணங்கரும் பெருந்திறை கொணர்ந்துமுன் 
 இடுதல்
 பூமலர் பொதுளிய புனல்வரைச் சோலை
 மாமலைச் சாரலொடு கானம் 
 காட்டுதல்
 | உரை | 
 
 |  | 
 
 | 30 
 
 
 
 35
 |  யானையும் சுரிஉளை அரிமான் ஏறும்மானின் பெடையும் வாள்வரி 
 உழுவையும்
 புள்ளும் மாக்களும் உள்உறுத்து இயன்ற
 நொய்ம்மர நெடும்புணை கைம்முதல் 
 தழீஇக்
 கூறாடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி
 ஆறாடு ஆயமொடு அணிவிழவு அமர்தல்
 இன்னது ஒன்றினுள் என்னதொன் 
 றாயினும்
 காமுறு கருமம் கால்வலை யாக
 | உரை | 
 
 |  | 
 
 | 
 40
 
 
 
 
 45
 |  ஏமுற ஒழியா ஏயர் 
 மன்னனைஉடுத்துவழி 
 வந்த உழுவல் அன்பின்
 வடுத்தீர் கைவினை வாசவ தத்தையொ(டு)
 ஒருப்படுத்து ஒழியாது ஓங்குமலை 
 மருங்கில்
 கடிகமழ் கானம் காணக் காட்டிப்
 படிவப் பள்ளியுள் பாவப் 
 பெருமரம்
 விரத மழுவின் வேரறத் 
 துணிக்கும்
 குறிக்கோள் உறுதவன் உண்மை 
 கூறி
 ............................................................
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 50
 
 
 
 
 55
 
 
 
 
 60
 
 
 
 
 65
 |  இன்றே அன்றியுந் தொன்றுவழி வந்தகுன்றாக் கற்பின்எங் கோப்பெருங் 
 கிழவோள்
 நித்திலம் பொதிந்த இப்பி போலத்
 திருவயிற்று அகவயின் உருவொளி 
 அறாஅ
 நின்னைத் தாங்கிய நன்னாள் அமயத்துக்
 கண்நிழல் ஞாறிய காமர் 
 பள்ளியுள்
 வெண்ணிலா முற்றத்து விரும்பி அசைதலின்
 ஒள்ஒளி அரத்தம் ஊனென 
 நசைஇப்
 பல்வலிப் பறவை பற்றுபு பரிந்து
 விபுலம் என்னும் வியன்பெரும் 
 குன்றத்(து)
 அருவரை அருகர் ஆய்நலம் கவினிய
 ஆலங் கானத்து அணியொடு 
 பொலிந்த
 ஞாலம் காவல் நஞ்சென 
 நீக்கிப்
 பாய்பரி இவுளி ஏயர் பெருமகன்
 தன்கண் கொற்றம் எல்லாம் தன்மகன்
 வென்றித் தானை விக்கிரன்கு 
 அருளி
 மறுவில் நெஞ்சமொடு மாதவம் தாங்கி
 உறுபெருங் காட்சி ஓங்கிய 
 படிவத்(து)
 அறம்புரி தந்தை பள்ளியது அருகர்ப்
 பறந்துசெல் சிம்புள் பையென வைத்தலும்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 70
 |  கயல்ஏர் கண்ணி துயில்ஏற் றெழவேஉயிர்போய் உறாமையின் உறுபுள் 
 போக
 அச்ச 
 வகையினும் அந்தரச் செலவினும்
 பொற்றொடி மாதர் பொறைநோய் கூர
 எல்லாக் கோளும் நல்வழி 
 நொக்கத்
 திருமணி விளக்கம் திசைநின்று அழலப்
 பெருமணிப் பாவையின் பிறந்தனை 
 கிடந்தோய்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 75
 
 
 
 
 80
 |  திருமெய் தழீஇ அருமைத் தாகநிகழ்ந்ததை அறியாள் கவன்றனள் 
 இரங்க
 ஆத்திரை போந்த 
 அருந்தவன் கண்டுதன்
 ஆத்த காதல்மகள் ஆவது 
 அறிந்துசென்(று)
 அஞ்சல் ஓம்பென நெஞ்சகம் 
 புகலப்
 பள்ளிக் கொண்டுபுக்கு உள்ளழிவு ஓம்பி
 அதிரா ஞாலத்து அரசுவீற் 
 றிருந்த
 கதையுரைக் கெல்லாங் 
 காரணன் ஆதலி்ன்
 புதைஇருள் அகற்றும் பொங்கொளி 
 மண்டிலம்
 உதயம் இவர்தர உதித்தோன் மற்றுஇவன்
 உதயணன் ஆகெனப் பெயர்முதல் கொளீஇப்
 | உரை | 
 
 |  | 
 
 | 85
 
 
 
 
 90
 |  பரம 
 இருடிகள் பல்லோர்க்குத் தலைவன்தருமம் தாங்கிய தவாஅக் கொள்கைப்
 பிரமசுந் தரன்எனும் பெரும்பெயர் 
 முனிவன்குப்
 பழிப்பில் கற்பின் பரமசுந் தரியெனும்
 விழுத்தகு பத்தினி விரும்பிப் 
 பெற்ற
 புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும்
 இருவிரும் அவ்வழி மருவிவிளை 
 யாடிச்
 செல்லா நின்ற சில்லென் காலை
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 95
 
 
 
 
 100
 |  வெஞ்சின வேழ வெகுளி நீக்கும்      
 மந்திர 
 நாமம் வந்துநீர் 
 கன்மெனத்
 தேவ 
 இந்திரனின் திருந்தப் பெற்ற
 ஆய்பெரு நல்லி்யாழ் அமைவர 
 எழீஇக்
 கான 
 யானையும் கரந்துறை புள்ளும்
 ஏனைய பிறவும் ஆனா 
 உவகையொடு
 கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி
 வேண்டிய செய்தலின் ஈண்டிய 
 மாதவன்
 வரத்தின் வல்லே 
 வல்லை 
 ஆகென
 உரைத்தம் 
 முனிவன் உவந்தனன் கொடுத்துப்
 பெறலரும் பேரியாழ் பெற்ற வாறும்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 105
 |  ஆர்வ 
 நெஞ்சினன் ஆகிய கல்வி்நேர்தனக்கு இல்லா நெஞ்சுண் 
 அமைதி
 யூகி நினக்குஇங்கு 
 அடைக்கலம் என்பதும்
 போகிய புகழோன் பணிப்பக் 
 கொண்டு
 தோழன் ஆகித் தோமில் கேள்வி
 யாழும் பாட்டும் அவைதுறை போகிக்
 கல்லா நின்ற சில்லென் காலத்து
 | உரை | 
 
 |  | 
 
 | 110 
 
 
 
 115
 
 
 
 
 120
 |  மைவரை மருங்கின் மடப்பிடி சூழத்தெய்வ யானை நின்றது 
 நோக்கிக்
 கண்டே 
 நின்று காதல் ஊர்தர
 மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
 தந்திர வகையும் காண்பல் 
 யானென
 எழீஇயவண் இயக்கப் 
 பொழிமத யானை
 வேண்டிய செய்தலின் ஈண்டிய 
 மாதவன்
 பள்ளிக்கு உய்ப்ப நள்ளிருள் கூறும்
 பாகர் ஏறினும் தோற்கயிறு இடினும்
 நீமுன் உண்ணினும் 
 நீங்குவல் யானென
 ஆகு 
 பொருள்கேட்டு அறிவுற்று எழுந்து
 போதுங் காலை மாதவன் ஒருமகன்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 125
 
 
 
 
 130
 
 
 
 
 135
 |  வீயாச் செங்கோல் விக்கிரன் 
 ஒருநாள்எச்சம் இன்மையின் எவ்வம் கூராத்
 துப்புர வெல்லாம் 
 துறப்பென் யானெனத்
 தற்பயந்து எடுத்தவன் தாள்நிழல் வந்தோன்
 மதலை யாகும்இப் புதல்வன் 
 யாரெனச்
 செருமிகு சீற்றத்துக் குருகுலத்து அரசன்
 சாயாச் செங்கோல் சதானிகன் 
 தேவி
 அருமைசால் கற்பின் மிருகா 
 பதியெனும்
 நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட்(கு)
 இன்னது நிகழ இவ்வயின் 
 தந்த
 பொன்னணி பைம்பூண் புதல்வன் 
 தான்இவன்
 ஐயாண்டு 
 நிறைந்தனன் ஆதலின் இவனைத்
 தெய்வ ஞானம் திறம்படக் 
 காட்டித்
 தன்நகர்க்கு 
 உய்ப்பென் என்றலும் அடிகள்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 140
 
 
 
 
 145
 |  என்னுழைத் தம்மின் இறையென இயற்றித்தாயம் எல்லாந் தனக்குரித் 
 தாக
 ஏயர் 
 கொற்றம் இவன்வயின் 
 கொடுத்துப்
 பெறலரும் 
 பெருந்தவத்து உறுபயன் கொள்வலென்(று)
 ஆய்புகழ் முனிவனொடு தேவியை 
 இரந்து
 செருமிகு குருசில்தன் மருமகன் தழீஇ
 நீல யானை நின்றது 
 பண்ணிக்
 கோல எருநத்தங் குலவ ஏற்றி.
 வளநகர் புக்குத்தன் உளமனைக்கு 
 எல்லாம்
 உதயணன் 
 இறையென அறிவரச் 
 சாற்றி
 வேத்தவை 
 நடுவண் வீற்றுஇனி 
 திருத்தி
 ஏயர் 
 குலமுதற்கு இறைவன் ஆகி
 அவ்வழி மற்றுநீ வளர இவ்வழிப்
 | உரை | 
 
 |  | 
 
 | 150
 
 
 
 
 155
 |  பட்டதை அறியான் பயநிலங் காவலன்கட்டழல் எவ்வமொடு கடவுளை 
 வினவக்
 கடும்புள் எதிர்ந்து காட்டகத்து இட்டதூஉம்
 நெடுந்தோள் அரிவை நின்னைப் 
 பெற்றதூஉம்
 தகையுடை முனிவன் தலைப்பட் டதூஉம்
 வகையுடை நல்யாழ் வரத்தில் 
 பெற்றதூஉம்
 விசையுடை 
 வேழம் வணக்கும் விச்சையும்
 மாமன் கொண்டுதன் மண்நகர் 
 புக்கதூஉம்
 ஏயர்க்கு இறையென இயற்றிய வண்ணமும்
 | உரை | 
 
 |  | 
 
 | 
 160
 |  மாசில் கொற்றவன் மறுத்துஇவண் 
 வரவும்ஆண்தகை மொய்ம்பினோர் அரசடிப் படுப்பதூஉம்
 ஈண்டுஇவண் வந்துநீ வீற்றிருப் பதூஉம்
 உள்ளுறுத்து ஓதியான் உள்ளம் உவப்ப
 முற்பால் நிகழ்ந்தவும் பிற்பாற் பெருக்கமும்
 இனையவை எல்லாம் இயற்படப் 
 பிழையாது
 வினவிய பொழுதின் விரித்துரைத் தனன்ஒர
 | உரை | 
 
 |  | 
 
 | 165 
 
 
 
 170
 |  பனுவ லாளனைப் 
 பணிந்துகை கூப்பிக்கண்போல் காதல்நின் கழிபே 
 ரமைச்சன்
 முன்போல் விளிந்து முடிக்குங் காரியம்
 உண்டு மாங்கொல் கண்டுவந் 
 தோர்களைக்
 கண்டிலம் ஆதலின் பண்பொடு 
 புணரக்
 கேட்டபின் அறிதும் 
 யாமென வேட்ப
 இன்னவை கிளந்துபின் தன்வயின் 
 தழீஇ
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 175
 
 
 
 
 180
 |  என்கூற் றினையும் நுங்கூற் றாகத்தேன்சுவைக் கொளீஇ வேம்பின் 
 ஊட்டும்
 மகாஅர்மருந் தாளரின் மறத்தகை அண்ணலை
 நகாஅர் பல்அவர் நலம்புகழ்ந்து 
 ஏத்தும்
 விழுப்பம் எய்தி ஒழுக்கியல் போம்பி
 இழுக்காது இயன்ற இலாவா 
 ணத்தயல்
 உண்டாட்டு அயர்தல் உறுதி உடைத்தென
 வண்டார் மார்பனை வலியுள் 
 ளுறீஇ
 ஏழ்ச்சி 
 வேண்டுஞ் சூழ்ச்சி கொடுக்கென
 | உரை | 
 
 |  | 
 
 | 
 
 
 185
 | உள்ள 
 தோழரும் ஒருப்பட் டெய்தி வள்ளிதழ் நறுந்தார் வத்தவற்கு 
 உறுகி
 முறைபட உணர்ந்த குறைவில் கட்டுரை
 கொள்ளக் கூறலும் வள்ளலும் 
 விரும்பி
 நிதியக் 
 கலத்தொடு பதிபல அருளிக்
 கொற்ற முரசிற் கோடணை 
 கொட்டி
 ஓசைபோக் கினரால் உவகையின் மகிழ்ந்தென்,
 | உரை | 
 
 |  |