Primary tabs
5.7 தொகுப்புரை
தமிழ்க் காப்பியங்களில் குண்டலகேசியும் வளையாபதியும் எப்படிப்பட்ட காப்பியங்கள்? யாரால் எழுதப்பட்டன? உண்மையில் இவை காப்பியங்கள்தாமா? என்ற வினாக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தாலும், தமிழ் மாணவர்களிடையே, தமிழ் ஆர்வலர்களிடையே, தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களிடையே இவை காப்பிய வரிசையில் அதிலும் குறிப்பிடத்தக்க பெருங்காப்பிய வரிசையிலே வைத்துத்தான் எண்ணப்படுகின்றன, பேசப்படுகின்றன.