Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)பத்றுப் போரைப் புலவர் எவ்வாறு வருணிக்கிறார்?பத்றுப்போரில், முசுலீம்களோடு எதிரிகள் போரிட்டது கடலைக் கடல் எதிர்த்துப் போரிடுவது போலவும், யானையோடு யானை போர் செய்வது போலவும், நீரோடு நீர் பொங்குவது போலவும், தீயில் காற்றுப் புகுந்தது போலவும் இருந்தது. மேலும் தலைகள் உருண்டன; இரத்தம் பாய்ந்தோடியது; கைகள் அறுந்தன; கால்கள் பெரிய மரம் போல வீழ்ந்தன; தோள்கள் இரத்தத்தில் மூழ்கின; பெருவெள்ளத்தோடு பெருவெள்ளம் புகுந்தது போலவும் தீயில் புயற்காற்று நுழைந்தது போலவும் போர் நடந்தது என்று வருணிக்கிறார் புலவர்.