Primary tabs
-
3.6 தொகுப்புரை
இக்காலப்பகுதியில் ஒட்டக்கூத்தர், ஒளவையார் ஆகியோரின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சாத்திர நூல்களைப் பொறுத்தவரை திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம் போன்றவை தோன்றின. பிற நூற்றாண்டுகளில் இருந்த அளவு இக்காலப்பகுதியில் சமண இலக்கியத்தில் வளர்ச்சி நிலை இல்லை. வைணவத்தில், கிடாம்பியாச்சான், அனந்தாழ்வான், திருநறையூர் அரையர், சோமாசியாண்டான், வேதப்பிரான்பட்டர், பிள்ளை உறங்கா வில்லிதாசர், கம்பர் போன்ற பலர் தனியன்களை எழுதியுள்ளனர். பிரபந்த இலக்கியத்தைப் பொறுத்த வரை சீராக இருந்த காலம் இது. உரைகளில் முக்கியப் பங்களிப்பு என்ற பெருமை அடியார்க்கு நல்லார் உரைக்கு உண்டு.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II