தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:5-தொகுப்புரை

  • 2.5 தொகுப்புரை

    தமிழ் இலக்கியத்தில் தொடர்நிலைச் செய்யுளாலான முதல் பெருங்காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இக்காப்பியத்தின் ஒரு காதையான வழக்குரை காதை என்ற இந்தப் பாடப் பகுதியில் கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாறு மூலம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்; பாண்டிய மன்னன் ஆராயாது செய்த தவறே அவனது உயிருக்குக் கூற்றாய் முடிந்தது என்பதன் மூலம் அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    வழக்குரை காதை அமைப்பு முறை என்ன?
    2.
    கோப்பெருந் தேவியின் கனவு குறித்து எழுதுக.
    3.
    வாயில் காவலன் கண்ணகியை எவ்வாறு சித்திரிக்கின்றான்?
    4.
    கண்ணகி கூறிய சான்று என்ன?
    5.
    பாண்டியன் எவ்வாறு நீதியை நிலை நாட்டினான்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 18:48:23(இந்திய நேரம்)