நிலத்தில்
குளித்து நெடுவிசும்பு ஏறிச்
சலத்தில்
திரியும்ஓர் சாரணன் தோன்ற,
மன்னவன்
அவனை வணங்கி முன்நின்று
என்உயிர்
அனையாள் ஈங்குஒளித் தாள்உளள்
அன்னாள்
ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்
சொல்லுமின்
என்று தொழஅவன் உரைப்பான்:
கண்டிலேன்
ஆயினும் காரிகை தன்னைப்
பண்டுஅறி
வுடையேன் பார்த்திப கேளாய்:
நாக நாடு
நடுக்குஇன்று ஆள்பவன்
வாச மயிலை
வயிற்றுள் தோன்றிய
பீலிவளை
என்போள் பிறந்த அந்நாள்
இரவிகுலத்து
ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும்எனக்
கணிஎடுத்து உரைத்தனன்
ஆங்குஅப்
புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி
வாராள் புலம்பல் இதுகேள்:
தீவகச்
சாந்தி செய்யா நாள்உன்
காவல் மாநகர்
கடல்வயிறு புகூஉம்
மணிமே கலைதன்
வாய்மொழி யால்அது
தணியாது இந்திர
சாபம்உண் டாகலின்.
ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும்
வேந்தரை
அட்டோய் மெய்எனக் கொண்டுஇக்
காசுஇல்
மாநகர் கடல்வயிறு புகாமல்
வாசவன் விழாக்கோள்
மறவேல் என்று
மாதவன் போயின
அந்நாள் தொட்டும்இக்
காவல் மாநகர்
கலக்குஒழி யாதால்
தன்பெயர்
மடந்தை துயர்உறு மாயின்
தன்பெருந்
தெய்வம் வருதலும் உண்டுஎன
அஞ்சினேன்
அரசன் தேவிஎன்று ஏத்தி
நல்மனம்
பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத்
தருகென, இராசமா தேவி
கள்ளும்
பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக்
களவும்என்று உரவோர் துறந்தவை
தலைமையாக்
கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை
புலைமைஎன்று
அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு
போந்து நின்மனைப் புகுதாள்
என்னொடு
இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி,
மணிமே கலைதிறம்
மாதவி கேட்டுத்
துணிகயம்
துகள்படத் துவங்கிய வதுபோல்
தெளியாச்
சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளிஎறி
கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி
அறவணர்
அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன்
மறவேல்
மன்னவன் தேவிதன் பால்வரத்
தேவியும்
ஆயமும் சித்திரா பதியும்
மாதவி மகளும்
மாதவர்க் காண்டலும்
எழுந்துஎதிர்
சென்றுஆங்கு இணைவளைக் கையால்
தொழுந்தகை
மாதவன் துணைஅடி வணங்க
அறிவுஉண்
டாகஎன்று ஆங்குஅவன் கூறலும்,
இணைவளை நல்லாள்
இராசமா தேவி
அருந்தவர்க்கு
அமைந்த ஆசனம் காட்டித்
திருந்துஅடி
விளக்கிச் சிறப்புச் செய்தபின்
யாண்டுபல
புக்கநும் இணைஅடி வருந்தஎன்
காண்தகு நல்வினை
நும்மைஈங்கு அழைத்தது
நாத்தொலைவு
இல்லாய் ஆயினும் தளர்ந்து
மூத்தஇவ்
யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன,
தேவி கேளாய்
செய்தவ யாக்கையின்
மேவினேன்
ஆயினும் வீழ்கதிர் போன்றேன்
பிறந்தார்
மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார்
என்கை இயல்பே இதுகேள்:
பேதைமை செய்கை
உணர்வே அருவுரு
வாயில்
ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே
தோற்றம் வினைப்பயன்
இற்றுஎன வகுத்த
இயல்புஈ ராறும்
பிறந்தோர்
அறியில் பெரும்பேறு அறிகுவர்
அறியார்
ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
பேதைமை
என்பது யாதுஎன வினவின்
ஓதிய இவற்றை
உணராது மயங்கி
இயற்படு பொருளால்
கண்டது மறந்து
முயல்கோடு
உண்டுஎனக் கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும்
உயிராம் உலகம்
அலகுஇல்
பல்உயிர் அறுவகைத் தாகும்
மக்களும்
தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க
விலங்கும் பேயும் என்றே
நல்வினை
தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப்
பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன்
விளையுங் காலை உயிர்கட்கு
மனப்பேர்
இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை
என்பது யாதுஎன வினவின்
ஆய்தொடி
நல்லாய் ஆங்குஅது கேளாய்
கொலையே
களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில்
தோன்றுவ மூன்றும்,
பொய்யே
குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச்
சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல்
வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின்
உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால்
பயன்தெரி புலவர்
இத்திறம்
படரார் படர்குவர் ஆயின்
விலங்கும்
பேயும் நரகரும் ஆகிக்
கலங்கிய
உள்ளக் கவலையில் தோன்றுவர்,
நல்வினை
என்பது யாதுஎன வினவில்
சொல்லிய
பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித்
தானம் தலைநின்று
மேல்என வகுத்த
ஒருமூன்று திறத்துத்
தேவரும்
மக்களும் பிரமரும்
மாகி
மேவிய மகிழ்ச்சி
வினைப்பயன் உண்குவர்
அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர்
புரைதீர்
நல்அறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப்பு
உணர்ந்த மணிமே கலைநீ
பிறஅறம்
கேட்ட பின்னாள் வந்துஉனக்கு
இத்திறம்
பலவும் இவற்றின் பகுதியும்
முத்துஏர்
நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றுஅவன்
எழுதலும், இளங்கொடி எழுந்து
நன்றுஅறி
மாதவன் நல்அடி வணங்கித்
தேவியும்
ஆயமும் சித்திரா பதியும்
மாதவர்
நல்மொழி மறவாது உய்ம்மின்
இந்நகர்
மருங்கின்யான் உறைவேன் ஆயின்
மன்னவன்
மகற்குஇவள் வரும்கூற்று என்குவர்
மாசுஇல்
மணிபல் லவம்தொழுது ஏத்தி
வஞ்சியுள்
புக்கு மாபத் தினிதனக்கு
எஞ்சா நல்அறம்
யாங்கணும் செய்குவல்
எனக்குஇடர்
உண்டுஎன்று இரங்கல் வேண்டா
மனக்குஇனி
யீர்என்று அவரையும் வணங்கி,
வெந்துஉறு
பொன்போல் வீழ்கதிர் மறைந்த
உலக அறவியும்
முதியாள் குடிகையும்
இலகுஒளிக்
கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம்
ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன்
மருமான் இரும்பதிப் புறத்துஓர்
பூம்பொழில்
அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து
ஆங்குவாழ்
மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப்
பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன்
யார்என மாதவன் கூறும்
நாக புரம்இது
நல்நகர் ஆள்வோன்
பூமிசந்
திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்குஇவன்
பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர்
வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும்
மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று
உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத்
தகைமலர்த்
தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப்
பூம்பொழில் அருந்தவன் தான்என்.
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.