5. மண்ணு
நீராட்டியது
|
இதன்கண் : உதயணனுக்கும் வாசவதத்தைக்கும்
மங்கல நீராட்டிற்குரிய நறுநீர் கொணரும்படி சான்றோர் பணித்தலும், நீர்கொணர்தற்குப்
பொற்குடங்களைக் கொண்டுசெல்லும் சிறப்பும், பதினாறு வகை மங்கலப் பொருள்களையும் ஏந்திச்
செல்லுதலும், மங்கலநீர்க் குளத்தின் மாண்பும், அதன்கண் நீர்முகந்து கொணருதலும், உதயணனுக்கும்
வாசவதத்தைக்கும் சான்றோர் நெய்யணிதலும், இருவரையும் நீராட்டலும், மகளிரும் மைந்தரும்
நீராடலும், உதயணனையும் வாசவதத்தையையும் ஒப்பனை செய்தலும் பிறவும் கூறப்படும். |
|
5 |
மயிர்வினைக் கம்மம் மரபுளி
முடித்தபின் வயிரக்
கொடுங்குழை வார்ந்த
காதுஇற பெருமகன் ஆடும் பீடுகெழு சிறப்பின் திருமண்ணு நறுநீர் விரைவதின்
வருகென உரமண்
ணுவாவொடு வயந்தகன் உரைப்ப
|
உரை |
|
10
15 |
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் மண்பெரும் சுற்றமும் வம்ப
மாந்தரும் நிலைஇடம் பெறாஅர் நெருங்குபு செற்றித் தலையிட மருங்கின் தமனியத்
தண்குடம் ஆயிரத்து ஓர்எட்டு அணிமலர் வாய முத்துத் தாமமொடு பொன்புரி அணிந்து வித்தகர் புனைந்த சித்திர நெடுங்குடை எண்ணறுங் கோலமொடு கண்உறக்
கவிப்பக் காரிகை வனப்பின் கன்னி மகளிர் சீர்கெழு மெல்விரல் செறியப்
பற்றி இடுமணி யானை இரும்புறத்து இருப்பப்
|
உரை |
|
20 |
படுகண் முழவொடு பல்இ்யம்
கறங்க ஏம முரசம் இழும்எனச் சிலைப்பக் காமர் சங்கம் வாய்வதின்
முழங்க வரித்த
பூங்கொடி விரித்துவிசும்பு இவரப் பத்திரப் படாகை பலவயின்
நுடங்கக் சாதிங்
குலிகமொடு சமரம்
ஒழுகிய மேதகு
முளைக்கால் கோதை துயல்வரக் குத்துமுளை செறித்த வித்தக விதானத்துத்
|
உரை |
|
25
30
35 |
தண்எழில் நடுவண்
நுண்எழில்
நுனித்த அயின்முனை வாளும் வயிரத்
தோட்டியும் கொற்றக் குடையும் பொன்பூங் குடமும் வலம்புரி வட்டமும் இலங்குஒளிச்
சங்கும் வெண்கண் ஆடியும் செஞ்சுடர் விளக்கும் கவரியும் கயலும் தவிசும்
திருவும் முரசம் படாகையும் அரசியல் ஆழியும் ஒண்வினைப் பொலிந்த ஓமா
லி்கையும்என்(று) எண்இரண்டு ஆகிய பண்அமை வனப்பின் கடிமாண் மங்கலம் கதிர்வளை மகளிர் முடிமிசை ஏந்தி முன்னர்
நடப்ப வேலும் வாளும் கோலும்
கொண்ட காவல் இளையர் காவல் கொள்ள
|
உரை |
|
40 |
மருப்புநிலைக் கந்தின் இருப்பெழுப்
போக்கி வயவர் காக்கும் வாயில் செல்வமொடு கயவர் துன்னாக் கட்டிற்று
ஆகிப் படைஅமை இட்டிகைப் பாடமைப்
படுகால் இடம்அமைத்து இயற்றிய ஏந்துநிலைக்
கோணத்துக் கழறுகால் அமைத்த கட்கின் வாவியுள்
|
உரை |
|
45
50 |
நிழல்திகழ் தெண்நீர் நீலம்
சூழப் பறவைத்
தொழுதிப் பக்கம் நீக்கி நிறைய முகந்து
முறைமையின்
ஏந்தி ஐஞ்நூற்று இரட்டி அணியிதழ்த்
தாமரைச் செந்நீ்ர் போதொடு செறிய வீக்கிப் பூஞ்சுமடு இரீஇப்
போற்றுவனர் தந்த தேங்கமழ் நறுநீர் திறவதின் பற்றிப்
|
உரை |
|
55
60 |
பணைமுரசு சியம்பும் படைப்பெரு முற்றத்துத் துணைநலத் தோழர்
துன்னினர்
சூழா மண்ணுநீர்
ஆட்டின் மலைந்தனர் ஆகி வண்ண மணியும் வயிரமும்
முத்தும் இட்டன
கொள்ளும் முட்டினர்
ஆதலின் வான மீனின் வயின்வயின்
இமைக்கும் தானம்
தோறுந் தகைபெறக்
குழீஇ வித்தகர்
வரித்த சித்திர நகர்வயின் பொன்பெரும் படுமணை முத்தொடு
விரவிச் சாலியும் உழந்தும் கால்வழிப்
பரப்பிப் பாஅய்
அமைந்த பின்றைச் சேஎய்
|
உரை |
|
|
செவ்வியில் சேர்ந்து சிறப்பொடு வணங்கி எவ்வழி
யோரும் ஏத்தினர் எதிர்கொள அவ்வழி இரீஇய பின்றை மெய்பெறச்
|
உரை |
|
65
70 |
65சங்கினும் பாலினும் சலம்இல்
வாய்மை விழுத்திணைப் பிறந்த ஒழுக்குடை மரபினர் நெய்தலைப் பெய்தற்கு எய்திய
சிறப்புஅணி ஏந்திய
சென்னி மாந்தர்
கூடி அறுகைப் புல்லினும் வாகைத் தளிரினும் 70 நறுநெய் தோய்த்து முறைமுதல் நீவி
|
உரை |
|
75 |
நின்னோர் அன்ன நீப்பரும் காதல் பொன்அணி புலவரொடு
செம்மலை
ஆகிக் கொற்றம் கொண்டு கோல்இனி்
ஓச்சென வெற்ற வெள்வேல் வீரியன் புகழ்ந்து மடவரன் மாதரை மணம்புரி காதலற்கு இடவயின் இருத்தல்
கடவது
ஆகலின் தம்கரச்
செல்வம் தலைத்தலை தரூஉம் மங்கல மணைமிசை
வெண்துகில் புதைஇ இருக்கை திருத்திய
பின்றைத் திருத்தகு
|
உரை |
|
80
85
90 |
மறுவில் தொல்குடி மங்கல மடந்தையர் நறுவெண் சாந்தின் நன்நலம் குயிலக் கொடிபல எழுதிய கோலத்
தோளினர் முடிமிசை அணிந்த முல்லைஅம்
கோதைக் கொடுங்குழை திளைக்கும் காதினர்
கடுங்கதிர்க் கலாவம்
புதைத்த நிலாவெண் துகிலினர் நுரைபுரை கலிங்கம்
ஒருமுலை
புதைப்பத் திருக்கொடிச்
சாலி செம்பொன் வாகையென்று ஒருப்படுத் ஊழ்ஊழ் முறைமையின்
ஏந்தி நானங்
கலந்த நறுநெய் தோய்த்துத் தானம் தொறும் தலைமுதல் உறீஇக்
|
உரை |
|
95 |
கொண்டோன் வேட்குங் குறிப்பினை
ஆகித் தண்டாப் புலமொடு மகளிரைத் தழீஇத் திருமனைக் கிழமையின் ஒருமீக்
கூரிக் கற்புமேம்
படீஇயர் பொன்தொடீ பொலிந்தென நற்பல கிளவி பற்பல
பயிற்றி நெய்தலைப் பெய்த பின்றை மெய்வயின்
|
உரை |
|
100
105 |
மென்மையும் நேயமும் நன்மையும்
நாற்றமும் ஒருநாள் பூசினும் ஓர்யாண்டு விடாஅத் திருமாண் உறுப்பிற்குச் சீர்நிறை
அமைத்துக் கரும
வித்தகர் கைபுனைந்து
இயற்றிய வாச
வெண்நெய் பூசினர் போற்றி நூல்வழி நுனித்த நுழைநுண் உணர்வினர் நால்வகைக்
கோலத்து நால்வகை மாக்கள் தாமரை மூய தமனியக்
குடநீர் தாமுறை
சொரிந்துதம் முறைமையின் ஆட்டிச்
|
உரை |
|
110
115
120 |
செய்த கோலம் சிதைய
மறலிப் பெய்தல் நாடிப் பேதையர் பிணங்கி அத்தின் எறிந்து முத்துப்
பரிந்திட்டும் சித்திர நுண்துகில் சேர்ந்த
அல்குல் பத்திப் பல்காசு பரிந்தனர்
உகுத்தும் கோதை
பரிந்தும் குடநீர் தூயும் மான்நேர்
நோக்கியர்.........,.. போதுவிரி பொய்கையுள் புக்கனர்
புரிந்தும் குளித்த மகளிரொடு திளைத்தல் ஆனார் குடைந்த வெண்நுரை குடங்கையின்
வாரித் தடங்கண் சிவப்ப எறிதலின் நடுங்கி விம்முவனர் தளர்ந்து மென்மெல
ஒதுங்கிக் கூந்தல் சோரப் பூந்துகில் அசைஇ வேந்தன் மகளொடு விளையாட்டு
விரும்பி வண்ண
மகளிரும் மைந்தரும் மயங்கி மண்ணுநீ ராட்டின் மரபுளிக் கழிந்தபின்
|
உரை |
|
125
130 |
திருமணுத் தானம் பெருமண்
உள்ளிட்டு மண்ணுறு மணியும் மாலையும் தூசும் கண்ணுற மொய்த்த கழிபேர்
அவாவின்நின்று ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற
வீசிப் பூவினுள் பொலிந்த தாமரை போலத் தாவில் அணியின் தான்மீக்
கூரிய அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்துத் துறைவிதி நுனித்த தூத்தொழி
லாளர் கண்துளங்கு
அவிர்ஒளிக் கழூஉநிறம்
பெறீஇய வெண்துகில்
இணைமடி விரித்தன உடீஇச் செய்த கோலத்துச் சித்திரம் காண
|
உரை |
|
135 |
வெய்யொன் கதிரொளி வீசுவளி
நுழையா இரும்பணி பெற்ற அரும்பணைப் படுகால் மேற்புலம் அமைந்த விளங்குமணி
வேயுள் யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇக் கோப்புறு விழுக்கலம் ஏத்துவனர் காட்டிக்
|
உரை |
|
140
145 |
கனமணி முடியும் கதிர்முத் தாரமும் இனமணிப் பூணும் ஏக
வட்டமும் வயிரக்
குழையும் வல்வினைப் பொலிந்த நெடுந்தோள் வளையும் கடுங்கதிர்க்
கடகமும் நாமர வளியும் காமர் கைவினைச் சித்திரப் புனையலும் பத்திரச்
சுரிகையும் பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும் ஆரணங்கு ஆகிய பேரணி
கலங்களும் உழைப்பெருஞ் சிலதியர் பிழைப்பிலர் நீட்ட
|
உரை |
|
150
155
160 |
அருவரை பிளந்த அஞ்சுவரு
நெடுவேல் ஒருவலத்து உயரிய பொருவில் புள்கொடித் தளைஅவிழ் நறுந்தார்த் தனக்குஇணை
இல்லா இளையவன் படிவம்
ஏற்ப இயல்புறீஇச் சித்திர இருநிதிச் செந்நெறி
நுனித்த வித்தக வினைஞர் தம்முடன் வந்து வடிவு கண்டிடும் வத்தவர்
பெருமகன் ஒடிவில் வென்றி உதயண குமரன் ஒருமெய் சேர்ந்திவை பெருமை
பெறுகென அருளின் அணியின் அல்லதை இவன்குஇவை உருஎன அணியா உறுப்புமுதல்
அணிதலின் புண்ணியம் உடையஇப் பொன்அணி
கலன்என எண்ணிய நெஞ்சமொடு நுண்வினைப் பொலிந்த கோல வித்தகர் வாலணி புனைய
|
உரை |
|
165 |
ஆராக் காதல் அவந்திகை
தன்னையும் நிராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்குப் பாரம் ஆகிய பல்காசு
புதைஇ ஈர
நுண்துகில் அகற்றி ஏருடைக் கோடிப் பூந்துகில் கொய்து
விளிம்புரீஇச் சேடார் அல்குல் சேடுபட
உடீஇ வல்லவர் வகுத்த மல்வினை
நகர்வயின் பொன்மணைப் பொலியப் போற்றுவனர் இரீஇ
|
உரை |
|
170
175
180 |
நன்மணக் கோலத்துக் கைந்நலம்
நுனித்த அங்கலுழ்
பணைத்தோள் மங்கல
மகடூஉக் கட்டிய கச்சையள் கைவிரல்
கூப்பி நெட்டிருங் கூந்தல் நீரற
வாரிப் பன்னுமுறை விரித்துப் பின்னுபு
தொகுத்துக் கொட்டிடை வளைஇய குஞ்சரத் தடக்கையின் சூட்டொடு விரைஇச் சுற்றுபு
முடித்துப் பத்திப்
பலகைப் பரிசரக்
கைவினை வித்தகப் பத்தி வேறுபட
விரித்தவை ஒழுக்கமுறை அறிந்து வழக்கிலள்
வைத்து முடிக்கலம் ழுதலா முறைமுறை தோன்றும் அடிக்கலம் ஈறு அணிந்துஅழகு பெறீஇ
|
உரை |
|
185 |
வாச நறுஞ்சாந்து வகைபெறப் பூசி மாசில் திருமகள் வண்ணம்
பழிப்பதோர் கோலம் செய்து கொண்டுஅகம்
புக்குக் கடிநகர் வரைப்பில் கல்என் சும்மையொடு அடிசில் அயினி ஆர்பதம்
அயின்று மன்பெரும் போகத்து மகிழ்ந்து
விளையாடி இன்புற் றனரால் இருவரும் இயைந்துஎன்.
|
உரை |
|