6. தெய்வச்
சிறப்பு
|
இதன்கண் : சான்றோர் உதயணன்பால் சென்று இன்பமாடம் புகுந்து திருக்கோயில் வழிபடுதலும் நகர்வலம்
செய்தலும், மணம் புரிந்துகொண்ட மன்னர் மக்கட்கு இன்றியனமயாக் கடமைகள்
ஆகும் என்று அறிவுறுத்தலும், அவற்றிற்கு அவன் உடம்படுதலும், உதயணன் திருக்கோயிற்குச்
செல்லுதலும், ஆண்டுப்படு நிகழ்ச்சிகளும், அருகன் கோயில் மாண்பும், அக்கடவுள்
அரியணையின் மாண்பும், அக்கோயிலின்கண் உதயணன் வாசவதத்தையோடும் சுற்றத்தாரோடும்
ஒருங்கு புகுந்து இறைவன் திருமுன்நின்று நெஞ்சுருகி வாழ்த்தப் பரவுதலும் பிறவும்
கூறப்படும். |
|
5
10 |
இன்புற்று இருவரும் இயைந்துஉடன்
போகிய நன்பெரும் காலை நல்லோர்
குழீஇக் கண்கெழு
பெருஞ்சிறப்பு இயற்றிப்
பண்புளிப் பூப்புரி மாடத்துப் போற்றெனப்
புகாஅத் தேவ
குலத்தொடு திருநகர்
வலஞ்செயல் காவல குமரர் கடிநாள் கடன்என வென்றி முழக்கம் குன்றாது
வழங்குநர் முன்னர்
நின்று முன்னியது முடிக்கஎன மங்கல மரபினர் மரபில்
கூறக் காவல
குமரனும் கடிநகர்
வலஞ்செய மேவினன் அருள மேவரப் புனைந்த
|
உரை |
|
15
20 |
பசும்பொன் அலகில் பவழத் திரள்கால் விசும்புஇவர் மதிஉறழ் வெண்பொன்
போர்வைத் தாம நெடுங்குடை தகைபெறக் கவிப்பக் காமர் கோலம் காண்மின்
நீரென ஏமச் செங்கோல் ஏயர்
பெருமகன் செம்பொன் செருப்பில் சேவடி
இழிந்து வெண்பூ
நிரந்த வீதியுள் இயங்கி நகர்வலம்
கொள்ளும் நாள்மற்று இன்றுஎனப் பகல்அங் காடியில் பல்லவர் எடுத்த
|
உரை |
|
25 |
பல்வேறு கொடியும் படாகையும்
நிரைஇ ஆறுபுகு
கடலின் மாறுதிரை
மானக் கண்ணுற்று நுடங்கிக் கார்இருள்
கழுமி விண்ணுற்று இயங்கும் வெய்யோன் அழுங்க மரீஇய மாந்தரும் மனைகெடுத்து
உழன்றுஇது பொரீஇக் காணின் போக பூமிக்(கு) இருமடங்கு இனிதெனப் பெருநகர்
உற்ற செல்வக் கம்பலை பல்லூழ் நிறைந்து மாண்பதி உறையுநர் காண்பது விரும்பித்
|
உரை |
|
30
35 |
தன்னின் அன்றியும்
தமக்கு வழிவந்த குலப்பெருந் தெய்வம் கூப்புத
லானும் அரிமலர்க் கண்ணியொடு அகநாட்டுப் பெயரும் கருமக் காலை பெருவரம்
பெறுகென உள்ளகத்து உணர்ந்ததை உண்மை யானும் சுருக்கம் இன்றிச் சுடர்ப்பிறை
போலப் பெருக்கம் வேண்டிப் பெருநில மன்னவன் ஆரணங்கு ஆகிய அறிவர்
தானத்துப் பூரணப்
படிமை காண்ட லானும் இன்னவை பிறவும் தன்னியல் ஆதலின்
|
உரை |
|
40
45 |
ஆணப் பைம்பொன்
அடித்தொடைப் பலகைக் கோணங் கொண்ட கொளூஉத்திரள்
சந்துமிசை உறுப்புப் பலதெரிந்த சிறப்பிற்று ஆகிச் செம்பொன் இட்டிகைத் திண்சுவர்
அனமத்துக் குடமும் தாமமும் கொழுங்கொடிப் பிணையலும் அடர்பூம் பாலிகை அடிமுதல் குளிஇப் புடைதிரண்டு அமைந்த போதிகைப்
பொன்தூண் வேண்டக மருங்கில் காண்தக நிறீஇ
|
உரை |
|
50 |
வரிமான் மகர மகன்றில் யானை அரிமான் அன்ன மணிநிற
எண்குஇனம் குழவிப்
பாவையொடு அழகுபெறப் புனைந்து பொருவில் பூதத்து உருவுபட வரீஇ
|
உரை |
|
|
மரகத
மாலை நிரல்அமைத்து இரீஇ எரிமலர்த் தாமரை இலங்கொளி
எள்ளிய திருமணிக் கபோதம் செறியச் சேர்த்திப்
|
உரை |
|
55
60
65 |
பத்திப்
பல்வினைச் சித்திரக்
குலாவின் ஒத்துஅமைத்து
இயன்ற சத்திக்கொடி உச்சி வித்தக நாசி வேண்டிடத்து
இரீஇத் தூண்மிசைக்கு ஏற்ப ஏண்முள் அழுத்திய போதிக்கு ஒத்த சாதிப்
பவழக் கொடுங்காழ்க் கோவைக் கடுங்கதிர்ப்
பணித்திரள் அவ்வயிற் கேற்றுக் கவ்விதின்
பொலிந்து நீல உண்மணிக்கோலக் குழிசி புடைத்துளைக்கு ஏற்ற இடைத்துளை
யாப்பின் அமைத்துஉருக்கு இயற்றிய ஆடகப்
பொன்னின் விசித்திரத்து இயற்றிய வித்தக வேயுள்
|
உரை |
|
70
75 |
தீஞ்சுவை நெல்லி்த் திரள்காய்த்
தாரையுள் கூப்புபு பிணித்த கூடப் பரப்பில் கட்டளை அமைத்துக் கண்குஇனி
தாகி எட்டுவகைப் பெருஞ்சிறப்பு ஏற்ப எழுதி ஒட்டிய வனப்பினோர் ஓட
உத்தரத்து ஒண்மணிப் புதவில் திண்ணிதின் கோத்த பொறிநிலை அமைந்த செறிநிலைப்
பலகை வள்ளியும் பத்தியும் உள்விரித்து எழுதி ஒள்ஒளி திகழும் வெள்ளிக் கதவின் பக்கம்
வளைஇய நித்திலத் தாமம் சித்திர மாலையொடு சிறந்துஒளி
திகழ வளஇற்கு அமைந்தவாயிற் றாகி
|
உரை |
|
80 |
நிலவிற்கு அமைந்த நிரப்பம் எய்தி மண்ணினும் மரத்தினும் மருப்பினும்
அன்றிப் பொன்னினும் மணியினும் துன்எழில் எய்தி அடியிற்கு ஏற்ற
முடியிற் றாகி அங்கண் மாதிரத்து அணிஅழகு உமிழும் பைங்கதிர்ச் செல்வனொடு
செங்கதிர்க்கு இயன்ற வால்ஒளி மழுங்க மேல்ஒளி திகழப்
|
உரை |
|
85 |
பரூஉப்பணைப்
பளி்ங்கில் பட்டிகை கொளீஇ வேல்தொழில் பொலிந்த மாற்றுமருங்கு
அமைத்துக் காம்பும் கதிரும் கூம்புமணிக் குமுதமும் பாங்குற நிரைத்த பயிற்சித்து ஆகிப்
|
உரை |
|
90
95 |
பத்திச் சித்திரப் பன்மணிக்
கண்டம் வித்தக
வண்ணமொடு வேண்டிடத்து அழுத்தி அரும்பும் போதும் திருந்துசினைத்
தளிரும் பெருந்தண் அலரொடு பிணங்குபு
குலாஅய் உருக்குறு
பசும்பொன்
உள்விரித்.தோட்டிக் கருத்தின்
அமைந்த காம வள்ளி கோணச் சந்தித் தோரணம் கொளீஇ மாலை அணிநகை மேல்உற
வளைஇ நீலத் திரள்மணிக் கோலக் கருநிரை இடையிற் கேற்றுப் புடையில் பொலிந்து
|
உரை |
|
100
105 |
விழைதகும் விழுச்சீர் மந்த
மாமலை ழுழையில்
போதர முயற்சி போல முதல்நிலைப் பலகைச் சுவன்முதல்
ஒச்சி முரி நிமிர்வன போலஏர் பெற்று வைந்நுதி அமைந்த வயிர
வாயில் கண்நிழல் இலங்கும் ஒளியிற் றாகிப் பவழ நான் திகழ்மணிப்
பகுவாய்ப் பசுமணிப் பரூஉச்செவிப் பன்மணிக் கண்டத்து உனளமயிர் அணிந்த உச்சிக்கு
ஏற்ப வாய்புகு அன்ன வந்துஒசி கொடிபோல் சென்றுசெறிந்து இடுகிய நன்றுதிரள் நடுவின்
|
உரை |
|
110
115 |
தகைமணிக்
கோவை தன்கைக்கு ஏற்பப் பரூஉத்திரள் குறங்கின் பளிக்குமணி
வள்உகிர்த் திருத்தம் செறிந்து திகழ்ந்துநிழல்
காட்டும் உருக்குறு தமனியத்து ஒண்பொன் கட்டில் அணிப்பொலிந்து இயன்ற அழல்உமிழ்
அரிமான் உச்சியில்
சுமந்துகொண்டு ஓங்குவிசும்பு இவர்தற்கு நச்சி அன்ன உட்குவரு உருவின்
|
உரை |
|
120 |
தருமாண் ஆசனத்து இருநடு
இலங்க இருந்த
வேந்தைப் பொருந்து மருங்குல் தலைவாய் உற்றுத் தலைஎழில்
பொலிந்து சிலைகவிழ்த்து அன்ன கிம்புரி கல்வி நிழல்காட்டு ஆடி நிழல்மணி
அடுத்துக் கோலம் குயின்ற நீலச் சார்வயல்
|
உரை |
|
125
130 |
வாடாத் தாரினர் சேடுஆர் கச்சையர் வட்டுடைப் பொலிந்த கட்டுடை
அல்குலர் மலர்ந்தேந்து அகலத்து இலங்குமணி ஆரத்து உடன்கிடந்து இமைக்கும் ஒருகாழ்
முத்தினர் முழவுறழ் மொய்ம்பினர் முடிஅணி
சென்னியர் கழுமணிக்
கடிப்பினர் கடகக் கையினர் புடைதிரண்டு அமைந்த பொங்குசின
நாகம் இடைநிரைத்து
அன்ன எழில்வளை கவ்விய எழுவுறழ் திணிதோள் எடுத்தனர்
ஏந்திப் புடைஇரு பக்கமும் போதிகை பொருந்தித்
|
உரை |
|
135 |
தொடைஅமை கோவை துளங்குமணிப் பன்னகை முகிழ்முடிச் சிறுநுதல் முதிரா
இளமை மகிழ்நகை
மங்கையர் மருங்குஅணி யாக புடைதிரண்டு இயங்கும் பொங்குமணிக்
கவரி அடைவண்டு ஓப்பும் அவாவினர் போல எழில்மணி இயக்கத் தொழில்கொண்டு ஈய
|
உரை |
|
140
145 |
மணிவிளக்கு உமிழும் அணிநிலாச்
சுவர்மிசை வலத்தாள்
நீட்டி இடத்தாள்
முடக்கிப் பொன்பொலிந்து இயலும் பொங்குபூந் தானைப் பசும்பொன் கச்சை பத்தியில்
குயின்ற விசும்பகம் நந்தும் வேட்கையர் போலத் தாமரைத் தடக்கையில் தாமம்
ஏந்தி விச்சா தரர்நகர் எச்சாரும் மயங்கி நீனிற முகிலிடைக் காமுறத் தோன்றத்
|
உரை |
|
150 |
திருமுடி இந்திரர் இருநிலக் கிழவர் உரிமை மகளிரொடு உருபுபடப்
புனைந்த பொத்தகக்
கைவினைச் சித்திரச் செய்கைத் தத்தம் தானத்து அத்தக நிறீஇ
|
உரை |
|
155
160 |
அழகுபடப்
புனைந்த அலங்குமணித் தவிசின்மிசை நிறைகதிர் வெண்மதி நிலாஒளி
விரிந்து முறையின் மூன்றுடன் அடுக்கின
போலத் தாம
முக்குடை தாமுறை கவிப்ப உலக வெள்ளத்து ஆழும்
பல்லுயிர்க்கு அலகை ஆகிய அருந்தவக்
கிழவனை இருக்கை இயற்றிய திருத்தகு செல்வத்து ஆரணங் காகிய அணிகிளர்
வனப்பின் பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறித் திருமணி அடக்கிய செம்பொன்
செப்பின் அருமணி சுடரும் அராஅந் தாணம்
|
உரை |
|
165
170 |
உரிமைச் சுற்றமொடு ஒருங்குடன்
துன்றிக் கதிவிளக்
குறூஉங் கருத்தினன் போல விதியில் சேர்ந்து துதியில்
துதித்துப் பெறற்குஅரும் பேதையைப் பெறுகெனப் பரவிச் சிறப்பெதிர் கொள்கைச் சித்திக்
கிழவன் பேரறம் பேணிய சீர்நெறிச் சிறப்பின் தெய்வதை அமர்ந்தெனக் கைம்முதல்
கூப்பி விரவுமலர்ப் போதொடு வேண்டுவ வீசிப் பரவுக்கடன் கழித்தனன் பைந்தா ரோன்என். |
உரை |
|