திகழ்ஒளி
நித்திலச் சித்திர விதானத்து
விளங்குஒளி
பரந்த பளிங்குசெய் மண்டபத்துத்
துளங்குமான்
ஊர்தித் தூமலர்ப் பள்ளி
வெண்திரை
விரிந்த வெண்ணிறச் சாமரை
கொண்டுஇரு
மருங்கும் கோதையர் வீச
இருந்தோன்
திருந்தடி பொருந்திநின்று ஏத்தி,
திருந்துஎயிறு
இலங்கச் செவ்வியின் நக்குஅவன்
மாதவி மணிமே
கலையுடன் எய்திய
தாபதக் கோலம்
தவறுஇன் றோஎன,
அரிதுபெறு
சிறப்பில் குருகுகரு உயிர்ப்ப
ஒருதனி ஓங்கிய
திருமணிக் காஞ்சி
பாடல்சால்
சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப
நன்னலங் கவினிக்
காமர் செவ்விக்
கடிமலர் அவிழ்ந்த
உதய குமரன்
எனும் ஒருவண் டுஉணீஇய
விரைவொடு
வந்தேன் வியன்பெரு மூதூர்ப்
பாழ்ம் பறந்தலை
அம்பலத்து ஆயது
வாழ்கநின்
கண்ணி வாய்வாள் வேந்து என
ஓங்கிய
பௌவத் துஉடைகலப் பட்டோன்
வான்புணை
பெற்றென மற்று அவட் குஉரைப்போன்
மேவிய பளிங்கின்
விருந்தின் பாவைஇஃது
ஓவியச்
செய்திஎன்று ஒழிவேன் முன்னர்க்
காந்தள்அம்
செங்கை தளைபிணி விடாஅ
ஏந்துஇள
வனமுலை இறைநெரித் ததூஉம்
ஒத்துஒளிர்
பவளத்து உள்ஒளி சிறந்த
முத்துக்கூர்த்
தன்ன முள்எயிற்று அமுதம்
அருந்தே
மாந்த ஆர்உயிர் தளிர்ப்ப
விருந்தின்
மூரல் அரும்பிய தூஉம்
மாஇதழ்க்
குவளை மலர்புறத்து ஓட்டிக்
காய்வேல்
வென்ற கருங்கயல் நெடுங்கண்
அறிவுபிறிது
ஆகியது ஆயிழை தனக்குஎனச்
செவியகம்
புகூஉச் சென்ற செவ்வியும்,
பளிங்குபுறத்து
எறிந்த பவளப் பாவைஎன்
உளங்கொண்டு
ஒளித்தாள் உயிர்க்காப் பிட்டுஎன்று
இடையிருள்
யாமத்து இருந்தேன் முன்னர்ப்
பொன்திகழ்
மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல்
காட்டிச் செய்தவம் புரிந்த
அங்குஅவள்
தன்திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்
கொல்லோ திப்பியம் கொல்லோ
எய்யா மையலேன்
யான்என்று அவன்சொல,
சித்திரா
பதிதான் சிறுநகை எய்தி
அத்திறம்
விடுவாய் அரசிளங் குரிசில்
காமக் கள்ளாட்டு
இடைமயக் குற்றன
தேவர்க்
காயினும் சிலவோ செப்பின்,
மாதவன்
மடந்தைக்கு வருந்துதுயர் எய்தி
ஆயிரம்
செங்கண் அமரர்கோன் பெற்றதும்,
மேருக் குன்றத்து
ஊருநீர்ச் சரவணத்து
அருந்திறல்
முனிவர்க்கு ஆர்அணங்கு ஆகிய
பெரும்பெயர்ப்
பெண்டிர் பின்புஉளம் போக்கிய
அங்கி மனையாள்
அவரவர் வடிவாய்த்
தங்கா வேட்கை
தனைஅவள் தணித்ததூஉம்
கேட்டும்
அறிதியோ வாள்திறல் குரிசில்
கன்னிக்
காவலும் கடியின் காவலும்
தன்உறு கணவன்
சாவுறின் காவலும்
நிறையின்
காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன்
அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தம்
குடியில் பிறந்தாள் அல்லள்
ஆடலும் பாடலும்
அழகும் காட்டிச்
சுருப்புநாண்
கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல்
நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர்
நெஞ்சம் கொண்டுஅகம் புக்குப்
பண்தேர்
மொழியின் பயன்பல வாங்கி
வண்டின்
துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையில்
பிணித்துப் படிற்றுஉரை அடக்குதல்
கோல்முறை
அன்றோ குமரற்கு என்றலும்,
உதய குமரன்
உள்ளம் பிறழ்ந்து
விரைபரி
நெடுந்தேர் மேற்சென்று ஏறி
ஆயிழை இருந்த
அம்பலம் எய்திக்
காடுஅமர்
செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக்
கொண்டுநின்று ஊட்டுநள் போலத்
தீப்பசி
மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப்
பாத்திரம்
ஏந்திய பாவையைக் காண்டலும்,
இடங்கழி
காமமொடு அடங்கான் ஆகி
உடம்போடு
என்தன் உள்ளகம் புகுந்துஎன்
நெஞ்சம்
கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றுஊண்
வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
ஏற்றூண்
விரும்பிய காரணம் என்எனத்
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல்
இயல்புஎனச் சென்று
நல்லாய்
என்கொல் நல்தவம் புரிந்தது
சொல்லாய்
என்று துணிந்துஉடன் கேட்ப,
என்அமர்
காதலன் இராகுலன் ஈங்குஇவன்
தன்அடி தொழுதலும்
தகவுஎன வணங்கி
அறைபோய்
நெஞ்சம் அவன்பால் அணுகினும
இறைவளை முன்கை
ஈங்குஇவன் பற்றினும்
தொன்று காதலன்
சொல்எதிர் மறுத்தல்
நன்றி அன்றுஎன
நடுங்கினள் மயங்கிக்
கேட்டது மொழிவேன்
கேள்வி யாளரில்
தோட்ட
செவியைநீ ஆகுவை யாம்எனில்
பிறத்தலும்
மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும்
உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள்
யாக்கை இதுஎன உணர்ந்து
மிக்க நல்அறம்
விரும்புதல் புரிந்தேன்
மண்டுஅமர்
முருக்கும் களிறுஅனை யார்க்குப்
பெண்டிர்
கூறும் பேர்அறிவு உண்டோ
கேட்டனை
ஆயின் வேட்டது செய்கென,
வாள்திறல்
குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி
முதியாள் இருந்த
குச்சரக்
குடிகை தன்அகம் புக்குஆங்கு
ஆடவர் செய்தி
அறிகுநர் யார்எனத்
தோடுஅலர்
கோதையைத் தொழுதனள் ஏத்தி
மாய விஞ்சை
மந்திரம் ஓதிக்
காயசண்
டிகைஎனும் காரிகை வடிவாய்
மணிமே கலைதான்
வந்து தோன்ற
குச்சரக்
குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப்
பாத்திரம் பெரும்பசி உழந்த
காயசண் டிகைதன்
கையில் காட்டி
மாயையின்
ஒளித்த மணிமே கலைதனை
ஈங்குஇம்
மண்ணீட்டு யார்என உணர்கேன்
ஆங்குஅவள்
இவள்என்று அருளாய் ஆயிடின்
பல்நா ளாயினும்
பாடு கிடப்பேன்
இன்னும்
கேளாய் இமையோர் பாவாய்
பவளச் செவ்வாய்த்
தவளவாள் நகையும்
அஞ்சனம்
சேராச் செங்கயல் நெடுங்கணும்
முரிந்துகடை
நெரிய வளைந்தசிலைப் புருவமும்
குவிமுள் கருவியும்
கோணமும் கூர்நுனைக்
கவைமுள்
கருவியும் ஆகிக் கடிகொளக்
கல்விப்
பாகரில் காப்புவலை ஓட்டி
வல்வாய்
யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை
முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக்கோள்
யானை வேட்டம் வாய்த்தென
முதியாள்
உன்தன் கோட்டம் புகுந்த
மதிவாள்
முகத்து மணிமே கலைதனை
ஒழியப்
போகேன் உன்அடி தொட்டேன்
இதுகுறை என்றனன்
இறைமகன் தான்என்.
உதயகுமரன் அம்பலம் புக்க
காதை முற்றிற்று.