Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
தேய்புரிப் பழங்கயிற்றியனார்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
தேய்புரிப் பழங்கயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை நூலில் 284 எண்ணுள்ள பாடலாக உள்ளது. இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. எட்டுத்தொகையைத் தொகுத்தவர் இவரது பாடலில் காணப்படும் தேய்புரிப் பழங்கயிற்றியனார் என்னும் பெயர் சூட்டியுள்ளார்.
தலைவன் பொருள் தேடச் சென்றுள்ளான். பொருள் தேடும் பணி முற்றிலுமாக நிறைவேறவில்லை. இந்த நிலையில் தனக்குள் சொல்லிக் கொள்கிறான். தலைவி அவனது உள்ளத்தைப் பிணிக்கொண்டவள் பொருள் தேடும் காலத்தில் அவன் தன் நெஞ்சை அவளிடம் செல்லாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. அவளிடம் தன் நெஞ்சைப் பாய விட்டுவிட்டால் பொருள் தேடும் பணி முற்றுப்பெறாது. அத்துடன் துன்பமும் வந்து சேரும். சோம்பலை உண்டாக்கி நன்மக்களிடம் இழிவையும் உண்டாக்கும்.
தன் காதலியை நினைப்பதா அல்லது அவளை மறந்து பொருளை நினைப்பதா என்று அவன் மனம் ஊசலாடுகிறது. யானை கயிற்றில் கட்டுப்பட்டுள்ளது. அந்தக் கயிற்றின் புரி தேய்ந்து போயிருக்கிறது. யானை இழுக்கிறது. அந்தக் கயிறு தாங்குமா? தெரியவில்லை.
அவன் நெஞ்சம் யானை. தலைவி யானையைக் கட்டியிருக்கும் தூண் அவனது உடம்பு யானையைத் தூணில் கட்டியிருக்கும் கயிறு அவளையும் பொருளையும் மாறி மாறி எண்ணி எண்ணித் தேய்ந்து போன அவனது நினைவு மோதும். உடல் என்ன ஆகுமோ? இது தான் தலைவன் கவலையாகும் என்ற கருத்தமைந்த்து இவர் எழுதியுள்ள பாட்ல்.
Tags :
- பார்வை 1130