Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் அகநானூறு 169 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தொண்டி என்னும் ஊர் ஒரு துறைமுகப் பட்டினம். இந்தத் தொண்டியை அடுத்திருந்த ஆமூரில் வாழ்ந்தவர் இந்தப் புலவர்.
பொருள் தேடச் செல்லும் தலைவன் இடைச் சுரத்தில் தன் காதலியை நினைத்துப் பார்க்கிறான். சுரத்தில் மரம் கரிந்து போயிருக்கும் நிலத்தின் பயன்கள் வாடிப்போயிருக்கும், வெயில் சுட்டெரிக்கும். எங்கும் அழல் என்னும் தணல் பறப்பது போல் இருக்கும். புலி யானையைத் தொலைத்து உண்ட மிச்சில் கிடைக்கும். அதன் துண்டங்களை வெட்டி உமணர் கடலில் விளைவித்த அமிழ்து என்னும் உப்பிலிட்டு ஞெலி கோலில் கோத்துக் காய வைத்துக்கொள்வர். அதனைச் சோற்று உலையில் போட்டுச் சமைத்து உண்பர்.
தலைவியின் மேனி பசலை பாய்ந்திருக்கும் பொழுது இறங்கும் மாலை நேரத்தில் தன் நெற்றியில் விரலை வைத்துக் கொண்டு என்னை நினைப்பாள். கயல்மீன் நீரை உமிழ்வது போல அவளது கண் கண்ணீரைக் கொட்டும் அவளது தோள் வாடிப்போயிருக்கும்.
கண்ணில், அழும் நீர் வரும் காட்சி கயல்மீன் நீரை உமிழ்வது போல் இருக்கும் என அகநானூறு-169 ஆம் பாடலில் நயமாகப் பாடிச் செல்கிறார் சாத்தனார்.
Tags :
- பார்வை 1067