Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
நெடுங்கழுத்துப் பரணர்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
நெடுங்கழுத்துப் பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் பரணர், வன்பரணர் போன்று பரணர் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் இருப்பதால் அவர்களினுன்று இவரை வேறுபடுத்திக் காட்ட இவரை நெடுங்கழுத்து என்னும் அடைமொழி சேர்த்து நெடுங்கழுத்துப் பரணர் என வழங்கினர்.
புறநானூறு 291 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாக உள்ளது.
பகைவர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்க அரசன் வீரர்களை அனுப்பினான் ஆனிரைகளை மீட்டுத் திரும்பிய மாயோன் போன்ற கருநிறத்தவன் விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்தான். அவனைத் தின்ன நரிகள் வட்டமிட்டன.
அவன் மேல் வெள்ளை ஆடை போர்த்தினர். சிறுவர்களும் துடி முழக்குவோரும் பாடும் மக்களும் கூடினர். மக்கள் தாம் அணிந்திருக்கும் மணிமாலையை வீரன் மாயோனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். துடிதுடித்து விதுப்புற்ற வேந்தனும் வீரன் மாயோனுக்குச் சூட்டி மகிழ்ந்தான். இக்காலத்தில் மேளம் கொட்டுவது போல அக்காலத்திலும் துடியை முழக்கினர்.
இக்காலத்தில் சாவுமேளம் கொட்டுவோர் இறந்தவரின் புகழைப் பாடிக்கொண்டு கொட்டுவர். அதுபோல விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்த மாயோனுக்கும் அவனது புகழைப் பாடிக் கொண்டு துடி முழக்கினர். இப்படிக் கொட்டி அவர்கள் அவன் சாகும் வரையில் நரி அண்ட விடாமல் தடுத்தனர்.
இறந்தவன் நிரந்தரமாக உலகை விட்டுப் பிரிந்துவிட்டான் இந்தப் பிரிவைப் பாடுவது பாலைப்பண். இதனை விளரிப்பண் என்றும் கூறுவர். துடி முழக்கத்துடன் இறந்தவரின் புகழைப் பாடுவதும், மகளிர் இறந்தவரின் புகழைப் பாடி ஒப்பாரி வைப்பதும் விளரிப்பண் ஆகும். இதனை நெடுங்கழுத்துப் பரணர் சிறப்பாகப் பாடியுள்ளார்.
Tags :
- பார்வை 1039