Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 286 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
புலவர் பெயரிலுள்ள அடைமொழி
மா என்பது நில அளவைக் குறிக்கும் ஒரு அளவைச் சொல்.
மா அளவை
காவிரி பாயும் தஞ்சைப் பகுதியில் நிலப்பரப்பளவைக் குறிக்கும் வகையில் இக்காலத்திலும் இந்த ‘மா’ என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
100 குழி – ஒரு மா
20 மா – ஒரு வேலி
3.5 மா – ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் – ஒரு வேலி
பொருநராற்றுப்படை
‘வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு கிழவோயே’
என்று கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் வாழ்த்துகிறார். மா பரப்பளவுள்ள நிலம். அது ஆற்றுத்துறைக்காக ஒதுக்கப்பட்ட குறுநிலம். அங்கே ஒரு பாலம். அது அந்த மா நிலத்தையும், ஆற்றுத் துறையையும் இணைத்துக் கொண்டிருந்தது. இந்த வழியே மா நிலத்துக்கும் வரலாம். ஆற்றுத்துறைக்கும் செல்லலாம். எனவே இது ‘துறைக்குறு மாவிற் பாலம்’ ஆயிற்று.
பாடல் தரும் கருத்தில் அந்த அடைமொழி அமைந்துள்ள சிறப்பு
தலைவன் பொருள் தேடச் செல்கிறான். பொருள் எதற்காக?
‘நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்’
அவன் பொருள் தேடச் செல்கிறான். தன் மனைவி வளமுடன் வாழவேண்டும். அத்துடன் தன் நண்பர்களும் செல்வவளம் பெருகி வாழவேண்டும். தலைவன் பொருள் ஈட்டுவதன் நோக்கம் இது தான் இவை பாடலில் கூறப்படும் செய்தியாகும்.
அடைமொழியும் பாடற் செய்தியும்
அடைமொழியிலுள்ள பாலம் நிலத்தையும் துறையையும் இணைக்கிறது. தலைவன் தேடிவரும் பொருள் மனை வாழ்க்கையையும் நண்பர் வாழ்க்கையையும் நலம் பெறச் செய்கிறது.
இப்படி துறைக்குறு மாவிற் பாலத்தைப் பொருள் என்னும் பாலமாகக் காட்டியதால் கொற்றனார் தம் பாடலில் அமைத்துத் தந்துள்ள கருத்துக்குப் பொருத்தமான அடைமொழியைத் தன் பெயருக்கு முன்னர் பெற்றுள்ளார்.
கொற்றனார் என்னும் பெயருள்ள பல புலவர்களில் இவரை வேறுபடுத்திக் காட்ட இந்த அடைமொழி இவருக்குத் தரப்பட்டுள்ளது.
Tags :
- பார்வை 1063