Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
நாகம்போத்தன்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
நாகம் போத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் போத்தனார் எனக் குறிப்பிடப்படாமல் போத்தன் எனக் குறிப்பிடப்படுவதால் இவர் ஒரு குறுநில மன்னர் எனத் தெரிய வருகிறது. சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை 282 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
நவ்விமான் வரகுப் பயிரின் இலையைக் குறிக்கிறது. வெண்கூதாளம் பூ பூத்திருக்கிறது. இது கார் காலத்தின் அறிகுறி. இதனைக் கார்காலம் இல்லை என்பார் போல் வெண்கூதாளம் பூவே பூக்கவில்லை என்று கூட மக்கள் சொல்லுவார்கள் போலும், என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். இது இவரது பாடலில் சொல்லப்படும் செய்தியாகும்.
வரகு இலை
வரகு சிவப்பு நிறம் கொண்டது. அதன் பயிர் கருகருவெனப் பசுமை நிறம் கொண்டிருக்கும். இதனை மான் விரும்பி மேயும்.
வெண்கூதாளம் பூ
இந்தப் பூவின் காம்பு நீளமானது. காம்பின் உள்ளே நீண்ட துளை இருக்கும். இதனைப் பறித்து விளையாட்டுப் பிள்ளைகள் தம் கால்களில் வீரக்கழல் போல் அணிந்துகொள்வர்.
செம்மண்ணாகிய மேட்டு நிலத்தில் தழைத்துப்2 பருவம் வாய்ந்த வரகு நாற்றின் ஓரிலையை நாட்காலையில் மான்குட்டி மேய்ந்து உண்ணும் கடனைக் கழிக்கும் கார்காலம் என்று இவர் அப்பருவ நிகழ்ச்சியைப் புனைவர். பிரிவால் உடல் மெலிந்து மகளிரின் கைகளிலிருந்து வளைகள் கழன்று வீழ்தற்கு, வெண்கூதாள மலர்கள், காம்புகளிலிருந்து கழன்று உதிர்தலை இவர் உவமையாகக் கூறியுள்ளார்.
Tags :
- பார்வை 988