Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
பரூஉமோவாய்ப் பதுமனார்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
பரூஉமோவாய்ப் பதுமனார் ஒரு புலவர். பருத்த மோவாயையுடைய பதுமனார் என்று இவர் பெயருக்கு விளக்கம் கூறுவார். உ.வே.சா. எனவே, உறுப்புக் குறித்த அடையுடன் இவர் பெயர் பெற்றவராவார். இவரால் பாடப்பெற்றது குறுந்தொகையில் 101 ஆம் பாடலாகும். தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத்தலைவியால் வரும் இன்பம் வேறு எப்பொருளிலும் சிறப்புடையதன்று பாங்காயினார் கேட்ப கூறியதாக இவர் அதனைப் பாடியுள்ளார். பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலக இன்பமும் அரிதாகப் பெறுதற்குரிய சிறப்பமைந்த புத்தேள் நாட்டு இன்பமும் ஆகிய இரண்டினையும் ஒரு தட்டிலும், தாமரைப் பூப்போலும் மையுண்ட கண்களும் பொன் போலும் நிறமும் மாட்சிமைப்பட்ட வரிகளமைந்த அல்குலும் உடைய காதலியாகிய குறுமகளின் தோளோடு தோள் மாறுபடத் தழுவும் இன்பத்தை மறுதட்டிலும் வைத்துத் தூக்கினால் எமக்குக் காதலின்பத்தோடு அந்த ஈடுலக இன்பமும் கனம் ஒவ்வாதொழியும் என்று தலைவன் கூற்றாக இவர் உணர்வு நலத்தோடு புனைந்துள்ளார். இவர் உறுப்பாற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர்.
Tags :
- பார்வை 905