தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருத்தணிகை விசாகப் பெருமாளையர்

     

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

     

    இவர் சாலி வாகன சகம் 1720 சரியான பிங்கல ஆனி 24 (1720) பிறந்தவர். இவர் திருத்தணிகைக் கந்தப்பையர் எனும் வீர சைவரின் மூத்த மகனாவார். இவர் இயற்றமிழாசிரியர் இராமானுசக் கவிராயரிடம் கல்வி பயின்றவர். விசாகப் பெருமாளையர் சென்னை மாகாணக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். உவின்ஸ்லோ தமிழ் அகராதிக்குத் துணைபுரிந்தவர். இலக்கணச் சுருக்க வினாவிடை என்னும் நூலை 1828லும், பாலபோத இலக்கணம் என்னும் நூலை 1852லும் எழுதி அச்சிட்டவராவர். அணியிலக்கண வினாவிடை (1857), யாப்பிலக்கண வினாவிடை, கல்விப் பயன் என்னும் நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

    பதிப்பு நூல்கள்

    திருக்கோவையாருக்கு உரை எழுதி 1857இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் நன்னூலுக்குக் காண்டிகையுரையுடன் 1840இல் எழுதிப் பதிப்பித்துள்ளார். இது 1868, 1882லும் அச்சிடப்பட்டது. இவரை இலக்கண விசாகப் பெருமாளையர் என்னும் கவிராயர் என்றும் அழைத்து வந்தனர். இவருக்குச் சென்னையில் கல்வி விளக்க அச்சகம் ஒன்று இருந்தது. இவரும் இவருடைய இளவல் சரவணப் பெருமாளையரும் சேர்ந்து திருவள்ளுவ மாலை என்ற நூலை 1830இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:17:29(இந்திய நேரம்)