உரை
|
|
|
|
|
|
10 |
ஒட்டாக் கிளைஞரை நட்பினுள்
கெழீஇய ஐயிரு பதின்மர் அரக்கின் இயற்றிய பொய்யில் அன்ன பொறிஇவன்
புணர்க்கும் கையுங் கூடுங் காலம்
இதுவென ஐய முற்று மெய்வகை
நோக்கிச் சிறப்புடை மாநகர்ச் செல்வம்
காண்கம் உழைச்சுற் றாளரைப் புகுத்துமின் விரைந்தெனத் |
உரை |
|
|
|
|
|
|
15
20 |
தலைக்கூட்டு உபாயமொடு
தக்கோன் தெரிந்து முட்டு முடுக்கும் இட்டிடை
கழியும் கரப்பறை வீதியுங் கள்ளப்
பூமியும் மரத்தினும் மண்ணினும் மதியோர்
புணர்க்கும் எந்திர மருங்கின் இழுக்கம்
இன்மை அந்நிலை
மருங்கின் ஆசற நாடி வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறிச் |
உரை |
|
|
|
|
|
|
25
30 |
சந்தன வேலிச் சண்பகத்து
இடையதோர் வேங்கையொடு தொடுத்த விளையாட்டு
உறற் தூங்குபு மறலும் முழைச்சிறு
சிலதியர் பாடல்
பாணியொடு அளைஇப்
பல்பொறி ஆடியன் மஞ்ஞை அகவ
அயலதோர் வெயில்கண் போழாப் பயில்பூம்
பொதும்பில் சிதர்தொழில் தும்பியொடு மதர்வண்டு
மருட்ட மாதர் இருங்குயில் மணிநிறப்
பேடை காதற்
சேவலைக் கண்டுகண்
களித்துத் தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும் |
உரை |
|
|
|
|
|
|
35 |
பால்நிறச் சேவல் பாளையில் பொதிந்தெனக் கோள்மடல்
கமுகின் குறவயிற் காணாது பவழச் செங்கால் பன்மயிர் எருத்தில் கவர்குரல் அன்னம் கலங்கல் கண்டும் தனித்துஉளங் கவல்வோன் தான்வீழ்
மாதர் மணிக்கேழ் மாமை மனத்தின் தலைஇப் புள்ளுப்புலம்
புறுக்க உள்ளுபு நினைஇ மன்றனாறு ஒருசிறை நின்ற பாணியுள் |
உரை |
|
|
|
|
|
40 |
சென்றுசென்று இறைஞ்சிய
சினந்தீர்
மண்டிலம் சூடூறு பாண்டிலில் சுருங்கிய
கதிர்த்தாய்க் கோடுஉயர் உச்சிக் குடமலைக்
குளிப்ப விலங்கும் பறவையும் வீழ்துணைப் படரப் |
உரை |
|
|
|
|
|
45
50 |
புலம்புமுத்து உகுத்த புன்மைத்து
ஆகி நிறைகடல்
மண்டிலம் நேமி
உருட்டிய இறைகெழு பெருவிறல் எஞ்சிய
பின்றைக் கடங்கண் எரிந்த கைய
ராகி இடந்தொறும் பல்கிய மன்னர்
போல வரம்பில் பன்மீன் வயின்வயின்
விலங்கிப் பரந்துமீது
அரும்பிய பசலைவா னத்துத் |
உரை |
|
|
|
|
|
55
60 |
தலைத்தேர்த் தானைக்குத்
தலைவனாகி முலைப்பால் காலத்து முடிமுறை
எய்திக் குடைவீற்று இருந்த குழவி
போலப் பொழில்கண் விளக்கும் தொழில்நுகம்
பூண்டு புயல்மாசு கழீஇப் புனிற்றுநாள்
உலவாது வியன்கண் மாநிலம் தாங்க, புவிசும்,
ஊர்ந்து பைந்தொடி மகளிர் பரவினர்
கைதொழச் செங்கோட்டு இளம்பிறை செக்கர்த்
தோன்றித் தூய்மை காட்டும் வாய்மைமுற்
றாது மதர்வை
யோர்கதிர் மாடத்துப் பரத்தரச் |
உரை |
|
|
|
|
|
65
70 |
சுடர்வெண் நிலவின் தொழில்பயன்
கொண்ட மிசைநீள் முற்றத்து அசைவளி
போழ விதானித்துப் படுத்த வெண்கால்
அமளிச் சேக்கை மகளிர் செஞ்சாந்து
புலர்த்தும் தேக்கண் அகிற்புகை திசைதொறுங்
கமழக் கன்றுகண் காணா முன்றில்
போகாப் பூத்தின்
யாக்கைமோ.................. ................குரால் வேண்டக்
கொண்ட சுரைபொழி தீம்பால் நுரைதெளித்து ஆற்றிச் சுடர்பொன்
வள்ளத்து மடல்விரல்
தாங்கி மதலை மாடத்து மாண்குழை
மகளிர் புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் |
உரை |
|
|
|
|
|
75
80
85
90 |
இல்லெழ முல்லையொடு மல்லிகை
மயங்கிப் பெருமணம் கமழவும் பிடகைப்
பெய்த வதுவைச் சூட்டணி
வண்டுவாய்
திறப்பவும் பித்திகக் கோதை செப்புவாய்
மலரவும் அறவோர் பள்ளி அந்திச்
சங்கமும் மறவோன் சேனை வேழச்
சங்கமும் புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்n மதுக்கோள்
மாந்தர் எடுத்த
வார்ப்பும் மழைக்கடல் ஒலியின் மயங்கிய
மறுகில் விளக்கொளி பரந்த வெறிகமழ்
கூலத்துக் கலக்கதவு அடைத்து மலர்க்கடை
திறப்பவும் ஒளிறுவேல் இளையர் தேர்நீறு அளைஇக் களிறுகால் உதைத்த புஞ்சப்
பூழியொடு மான்றுகள் அவிய மதுப்பலி
தூவவும் தெற்றி முதுமரத்து உச்சிச்
சேக்கும் து.........க.........ரக்
குரலளைஇச் சேக்கை நல்லியாழ் செவ்வழி
பண்ணிச் செறிவிரல்
பாணியின் அறிவரப்
பாடவும் அகில்நாறு அங்கை சிவப்ப
நல்லோர் துகிலின் வெண்கிழித் துய்க்கடை
நிமிடி உள்ளிழுது உறீஇய வொள்ளடர்ப்
பாண்டில் திரிதலைக் கொளீஇ எரிதரு மாலை |
உரை |
|
|
|
|
|
95
100
105
|
வெந்துயர்க் கண்ணின்
வேல்இட் டதுபோல் வந்திறுத் தன்றால் வலியெனக்கு
இல்லெனக் கையறு குருசிலை வைகிய
தெழுவென இலங்குசுடர் விளக்கோடு எதிர்வந்து
ஏத்திப் புறங்காப்பு இளையர் புரிந்தகம்
படுப்ப எண்ணால்
இலக்கணத்து உள்நூல்
வாங்கித் திணைவிதி யாளர் இணைஅற
வகுத்த தமனியக் கூடத்துத் தலைஅளவு
இயன்ற மயன்விதி அன்ன மணிக்காழ்
மல்லத்துச் சித்திர அம்பலம் சேர்ந்துகுடக்கு ஓங்கிய அத்தம் பேரிய அணிநிலை
மாடத்து மடைஅமைத்து இயற்றிய மணிக்கால்
அமளிப் படையகத்து ஓங்கிய பல்பூம்
சேக்கைப் பைதல் நெஞ்சத்து மையல்
கொள்ளா எஃகுஒழி களிற்றின் வெய்துயிர்த்து உயங்கி |
உரை |
|
|
|
|
|
110
115 |
உண்டுஎனக் கேட்டோர்
கண்டுஇனித்
தெளிகஎனத் திருவின் செய்யோள் உருவமெய்த்
தோன்றத் தீட்டிரும் பலகையில் றிருத்தித்
தேவர் காட்டி வைத்ததோர் கட்டளை
போலக் கலன்பிற அணிந்து காண்போர் தண்டா நலந்துறை போகிய நனிநாள்
ஒடுக்கத்து மணிமுகிழ்த்து அன்ன மாதர்
மென்முலைத் தணிமுத் ஒருகாழ் தாழ்ந்த வாகத் |
உரை |
|
|
|
|
|
120
125 |
திலமலர்ச்
செல்வாய் எயிறுவிளக்
குறுக்க அலமரு திருமுகத்து அளகத் அப்பிய செம்பொன் சுண்ணம் சிதர்ந்த
திருநுதல் பண்பில் காட்டிப் பருகுவனள்
போலச் சிதர்மலர்த் தாமரைச் செந்தோடு
கடுப்ப மதரரி நெடுங்கண் வேல்கடை
கான்ற புள்ளி வெம்பனி கரந்த கள்விதன் காரிகை உண்டஎன் பேரிசை
ஆண்மை செறுநர் முன்னர்ச் சிறுமை
இன்றிப் பெறுவென் கொல்லென மறுவந்து
மயங்கி எவ்வமிக்கு அவனும் புலம்ப அவ்வழிக் |
உரை |
|
|
|
|
|
130
135 |
குழவி
ஞாயிறு குன்றுஇவர் வதுபோல் மழகளிற்று எருத்தின் மைந்துகொண்டு
இருந்த மன்ன குமரன் தன்னெதிர்
நோக்கி ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கதுஎன்
நெஞ்சென மழுகிய திருமுகம் மம்மரோடு
இறைஞ்சித் தருமணற் பேரிற் தமரொடு
புக்குத் திருமணி
மாடத்து ஒருசிறை நீங்கிப் பெருமதர் மழைக்கண் வருபனி அரக்கிக் |
உரை |
|
|
|
|
|
|
|
|
140 |
கிளையினும்
பிரித்தவன் கேடுதலை
எய்தித் தளையினும் பட்டவன் தனியன்
என்னான் வேழம் விலக்கிய யாழொடும் செல்கஎனச் சொன்னோன் ஆணை முன்னர்த்
தோன்றி உரக்களிறு அடக்குவது ஓர்த்து
நின்ற மரத்தின் இயன்றகொல் மன்னவன் கண்எனப் |
உரை |
|
|
|
|
|
145
150 |
உள்ளகத்து
எழுதரு மருளினள் ஆகித் தெளிதல் செல்லா திண்நிறை
அழிந்து பொறியறு பாவையின் அறிவுஅறக்
கலங்கிக் காமன் என்னும் நாமத்தை
மறைத்து வத்தவன் என்னும் நற்பெயர்
கொளீஇப் பிறைக்கோட்டு டியானை பிணிப்பதும் அன்றி நிறைத்தாழ் பறித்துஎன் நெஞ்சகம்
புகுந்து கள்வன் கொண்ட உள்ளம்
இன்னும் பெறுவென் கொல்என மறுவந்து
மயங்கித் தீயுறு வெண்ணெயின் உருகு
நெஞ்சமொடு மறைந்தவண் நின்ற மாதரை இறைஞ்சிய |
உரை |
|
|
|
|
|
155 |
வல்லிருள் புதைப்பச் செல்சுடர்
சுருக்கி வெய்யோன் நீங்கிய வெறுமைத்து
ஆகிக் கையற வந்த பைதல் மாலைத் தீர்ந்தவண் ஒழிந்த திருநல்
ஆயம் தேர்ந்தனர் குழீஇப் பேர்ந்தனர் வருவோர் |
உரை |
|
|
|
|
|
160
165 |
இணையில் ஒருசிறைக்
கணைஉளங் கிழிப்பத் தனித்துஒழி பிணையின் நினைப்பனள்
நின்ற எல்ஒளிப் பாவையைக் கல்லெனச்
சுற்றி அளகமும் பூணும் நீவிச்
சிறிதுநின் திலக வாணுதல் திருவடி ஓக்கும் பிறையது காணாய் இறைவளை
முன்கை திருமுகை மெல்விரல் கூப்பி
நுந்தை பெரும்பெயர் வாழ்த்தாய் பிணைஎன் போரும் |
உரை |
|
|
|
|
|
170
175 |
செம்பொன்
வள்ளத்துத் தீம்பால்
ஊட்டும் எம்மனை வாராள் என்செய் தனள்எனப் பைங்கிளி காணாது பயிர்ந்துநிற்
கூஉம் அஞ்சொல் பேதாய் அருளென்
போரும் மதியங் கெடுத்து மாவிசும்
புழிதரும் தெறுதரு நாகம்நின் திருமுகம்
காணில் செறுதலும் உண்டினி எழுகென் போரும் பிசியும் நொடியும் பிறவும்
பயிற்றி நகைவல் ஆயம் நண்ணினர் மருட்டி |
உரை |
|
|
|
|
|
180
185 |
முள்ளெயிறு இலங்கு முறுவல் அடக்கிச் சொல்எதிர் கொள்ளாள் மெல்லியல்
இறைஞ்சிப் பந்தெறி பூமியுள் பாணி பெயர்ப்புழி அஞ்செங் கிண்கிணி அடியலைத்
தனகொல் திருக்கிளர் வேங்கையும் பொன்னும்
பிதிர்ந்து மருப்பியல் செப்புங் குரும்பையும்
இகலி உருத்தெழு மென்முலை முத்தலைத்
தனகொல் பிணையல் அலைப்ப நுதல்நொந்
ததுகொல் இனையவை
இவற்றுள் யாதுகொல்
இந்நோய் பெருங்கசி வுடையளிப் பெருந்தகை
மகளெனத் தவ்வையும் தாயும் தழீஇயினர் கெழீஇச் |
உரை |
|
|
|
|
|
190
195 |
செல்வி
யிலள்எனச் சேர்ந்தகம்
படுப்பச் செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துறத் திண்ணிலைப் படுகால் திருந்தடிக்கு
ஏற்ற மணிக்கலம் ஒலிப்ப மாடம்
ஏறி அணிக்கால் பவழத்து யவனர்
இயற்றிய மணிக்காழ் விதானத்து மாலை
தொடர்ந்த தமனியத்து இயன்ற தாமரைப் பள்ளிக் கலன்அணி ஆயம் கைதொழ
ஏறிப் புலம்புகொள் மஞ்ஞையின் புல்எனச்
சாம்பிப் புனல்கொல் கரையின் நினைவனள்
விம்மிப் பாவையும் படரொடு பருவரல் கொள்ள |
உரை |
|
|
|
|
|
200
205
210 |
இருவர்
நெஞ்சமும் மிடைவிடல் இன்றித் திரிதரல் ஓயாது திகிரியில்
சுழல ஊழ்வினை வலிப்பின் அல்லது
யாவதும் சூழ்வினை அறுத்த சொல்லருங்
கடுநோய்க் காமக் கனலெரி கொளீஇ
யாமம் தீர்வது போலா தாகித் திசைதிரிந்து தீர்வது போல விருளொடு
நிற்பச் சேர்ந்த பள்ளி சேர்புணை
யாகி நீந்தி அன்ன நினைப்பின
ராகி முழங்குகடல் பட்டோர் உழந்துபின்
கண்ட கரைஎனக் காலை தோன்றலின் முகையின பூக்கண் மலரப் புலம்பிய
பொய்கைப் பால்கேழ் அன்னமொடு பல்புள்
ஒலிப்பப் பரந்துகண் புதைஇய பாயிருள்
நீங்கிப் புலர்ந்தது மாதோ பொழில்தலைப் பெயர்ந்தென். |
உரை |
|
|