19. தேவிக்கு
விலாவித்தது
|
இதன்கண், உதயணகுமரன் வாசவதத்தை
தீயின்கண் அகப்பட்டு இறந்துபட்டாள் என்று கருதி ஆற்றாமையால் தானும் தீயில்
மூழ்கி உயிர்விடப் போதலும் தோழர் அவளை விலக்குதலும், உதயணன்
வாசவதத்தையின் உடம்பையேனும் எனக்குக் காட்டுமின் என்று தோழரை இரத்தலும், உருமண்ணுவா
உதயணனை அழைத்துச் சென்று அரண்மனை அகத்தே வெந்து கிடந்த அணிகலன்களையும், கள்வர்
இருவர் உடம்புகளையும் காட்டி வாசவதத்தை இறந்தே விட்டாள் என்று அவ்உதயணன் நம்பும்படி
செய்தலும், உதயணனன் பொன்னரிமாலை முதலிய அணிகலன்களைக் கையிலெடுத்து நோக்கி
அரற்றுதலும், முன்நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்துப் புலம்புதலும், தோழர் இச்செவ்வி
அறிந்து பகைவர் படையெடுத்து வருதல் கூடும் என்று கருதித் தம் படைகளை எல்லைப் புறத்தில்
சென்றிருக்கச் செய்தலும் பிறவும் கூறப்படும். |
|
|
ஏற்றெழுந் ததன்பின் இனியோர் குழீஇ
ஆற்றல் சான்ற நூல்துறை
மருங்கின்
பழையவும் புதியவும் உழைவயின் பிரியார்
காரணம் உரைப்பவும் ஓர்வரை
நில்லான் 5 அந்தீம்
கிளவிஎன் அம்பிணை மூழ்கிய
செந்தீயானும்புகுவென்
சென்றென
முரிந்த கந்தின் எரிந்த வேயுள்
அரிந்த யாப்பில் சொரிந்த
கடுங்காழ்
கரிந்த மாடம் காவலன் குறுக |
உரை |
|
|
10 ஆரளைச்
செறிந்த அருஞ்சின நாகத்துப்
பேரழல் காணிய பேதை
மாந்தர்
வாயில் மருங்கின் தீயெரி கொளீஇயது
செயிற்படு பொழுதில் செம்முக
நின்றுதம்
உயிர்ஒழிந் ததுபோல் உறுதி வேண்டார் 15
அடங்கார் அடக்கிய அண்ணல்
மற்றுநின்
கடுஞ்சினம்பேணாக் கன்றிய மன்னர்
இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே |
உரை |
|
|
ஆகியது அறியும் அரும்பொருள் சூழ்ச்சி
20 யூகியின் அல்லதை உதயண குமரன்
உள்ளம் இலன்என வெள்ளைமை
கலந்த
புறத்தோர் உரைக்கும் புன்சொல் மாற்றம்
அகத்தோர்க்கு என்றும் அகஞ்சுடல்
ஆனாது
ஆங்ஙனம் அந்நிலை அறிந்து மனங் கவலாது. 25
ஓங்கிய பெருங்குலம் தாங்குதல் கடனாப்
பூண்டனை யாகுதல் பொருள்மற்று
இதுவென
மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்கக் |
உரை |
|
|
காலங் கலக்கக் கலக்கமொடு
உராஅய்
ஞாலம் முழுதும் நவைக்குற்று எழினும் 30
ஊர்திரை உடைய ஒலிகெழு முந்நீர்
ஆழி இறத்தல் செல்லாது
ஆங்குத்
தோழரை இகவாத் தொடுகழல் குருசில்
சூழ்வளை முன்கைச் சுடர்க்குழை
மாதர்
மழைக்கால் அன்ன மணிஇருங் கூந்தல் 35
அழல்புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி
மணிக்கை நெடுவரை மாமலைத்
சாரல்
புனத்தீப் புதைப்பப் போக்கிடங் காணாது
அளைச்செறி மஞ்ஞையின் அஞ்சுவனள்
விம்மி
இன்னுயிர் அன்ன என்வயின் நினைஇத் 40
தன்னுயிர் வைத்த மின்உறழ் சாயல்
உடப்புச் சட்டகம் உண்டெனில்
காண்கம்
கடுப்புஅழல் அவித்துக் காட்டுமின் விரைந்தெனக் |
உரை |
|
|
கரிப்பிணம் காணார் காவலர்
என்னும்
மொழிப்பல காட்டவும் ஒழியான்
அழிய 45 முன்னையர்
ஆதலின் முதற்பெருந் தேவி
இன்னுயிர் இகப்ப விடாஅர்
இவரென
மன்ன குமரன் மதித்தனன் ஆயின்
எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு
ஆமெனத்
தவலரும் பெரும்பொருள் நிலைமையின் எண்ணி 50
உலைவில் பெரும்புகழ் உருமண்
ணுவாவிரைந்து
ஆய்புகழ் அண்ணல் மேயது
விரும்பி
நீள்புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கிக்
கோயில் வட்டத்து ஆய்நலம்
குயின்ற
பள்ளிப் பேரறை உள்ளகம் புக்காங்கு 55
அழிவுறு சுருங்கை வழிமுதல் மறைஇ
விம்முறு துயரமொடு விளிந்துயிர்
வைத்த
குய்ம்மனத் தாளர் குறைப்பிணங் காட்டித்
தாயும் தையலும் தீஉண
விளிந்தமை
மாயம் அன்றென மன்னனைத் தேற்றி |
உரை |
|
|
60 மணியும் முத்தும்
அணியும் இழந்துதிர்ந்து
ஆரக் கம்மம் சாரவீற்
றிருந்து
கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி
மாசுவினை கழித்த மாதவர்
போலத்
தீஅகத்து இலங்கித் திறல்விடு கதிரொளி 65
சேடுறக் கிடந்த செம்பொன் செய்கலம்
பொன்னணி மார்பன் முன்னண விடுதலின் |
உரை |
|
|
ஒண்செந் தாமரை ஒள்இதழ் அன்ன
பண்கெழு விரலில் பன்முறை
தொகுத்து
நானம் மண்ணி நீனிறம் கொண்டவை 70
விரித்தும் தொகுத்தும் வகுத்தும்
வாரியும்
உளர்ந்தும் ஊறியும் அளந்துகூட்டு அமைத்த
அம்புகை கழுமிய அணிமா
ராட்டம்
வெம்புகை குழ்ந்து மேலெரி ஊர
விளிந்தது நோக்கி ஒழிந்தனை
ஆதலின் 75 நன்நுதல்
மாதர் பின்னிருங் கூந்தல்
பொன்னரி மாலாய் பொருளிலை என்றும் |
உரை |
|
|
கொடியும் மலரும் கொழுந்தும்
குலாஅய்
வடிவுபெற வகுத்த மயிர்வினைச் சிப்பத்து
வத்தவ மகடூஉச் சித்திரத்து
இயற்றிய 80 பல்வினைப் பரிசரத்து
எல்லை யாகி
மதிப்புறம் கவைஇய வானவில்
போல
நுதல்புறம் கவவி மிகச்சுடர்ந்து இலங்கும்
சிறப்புடைப் பட்டம் சிறியோர்
போல
இறப்புக் காலத்துத் துறப்புத்தொழில் துணிந்த
85 வன்கண்மை பெரிதெனத் தன்கணும்
நோக்கான்
பட்டப் பேரணி விட்டெறிந்து இரங்கியும் |
உரை |
|
|
பனிநாள் புண்ணியத்து அணிபெறு திங்கள்
அந்தியுள் முளைத்த வெண்பிறை
போலச்
செந்தீச் சிறுநுதல் மூழ்கத் தீந்து 90
நிலமிசை மருங்கின் வீழ்ந்தனை
யோஎனத்
திலகம் நோக்கிப் பலபா ராட்டியும் |
உரை |
|
|
வெண்மதிக் கைப்புடை வியாழம்
போல
ஒண்மதி திகழ ஊசல் ஆடிச்
சீர்கெழு திருமுகத்து ஏரணி யாகிய
95 வார்நலக் காதினுள் வனப்புவீற்
றிருந்த
நன்பொன் குழைநீ நன்நுதல் மாதரை
அன்பில் கரந்தே அகன்றனை
யோஎனப்
போதணி கூந்தல் பொற்பூம் பாவை
காதணி கலத்தொடு கவன்றனன் கலங்கியும் |
உரை |
|
|
100 பொய்கையில்
தீர்ந்து புன்கண் கூர
எவ்வ மாந்தர் எரிவாய்
உறீஇய
பொருங்கயல் போர வருந்துபு மிளிராக்
களைகண் பெறாஅக் கலக்க
நோக்கமொடு
தளைஅவிழ்ந்து அகன்ற தாமரை நெடுங்கண்
105 அகையற அருளா யாகிக்
கலிழ்ந்து
செவ்அழல் புதைத்திடச் சிதைந்தனை
யோஎன
அவ்விழிக்கு இரங்கி வெவ்வழல் உயிர்த்தும் |
உரை |
|
|
செஞ்சாந்து
வரித்த சின்மெல்
ஆகத்து அஞ்சாய்
மருங்குல் வருந்த அடிபரந்து 110
வீங்குபு செறிந்த வெங்கண்
வனமுலை
பூங்கொடிப் பொன்கலம் போழ்ந்துவடுப்
பொறிப்ப
மகிழ்ச்சி எய்தி மனம்ஒன் றாகிய
புணர்ச்சிக் காலத்து மதர்த்துமுகம்
சிவப்ப
நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை 115
வேக வெவ்அழல் வெம்புகை அணிந்த
பொங்கழல் போர்வை போர்த்ததோ எனவும் |
உரை |
|
|
இலைப்பெரும் பூணும் இதயவா சனையும்
நலப்பெரும் களிகையும் நன்முத்
தாரமும்
பன்மணிப் பூணும் சின்மணித் தாலியும் 120
முத்துஅணி வடமும் சித்திர
உத்தியும்
நாணும் தொடரும் ஏனைய பிறவும்
மெய்பெறப் புனைந்து கைவல்
கம்மியச்
செய்கையில் குயிற்றிய சித்திரம் கொளீஇப்
பூண்அணி யுள்ளும் மாண்அணி
யுடையவை 125 ஆகக்கு ஏற்ப
அணிகம் வாராய்
வேகத் தானை வேந்தன்
மகளே
தனித்தாய் இயங்கலும் தாங்கினை யோவெனப்
பனித்தார் மார்பன் பலபா ராட்டியும் |
உரை |
|
|
ஓங்குவரை மருங்கின் ஒளிபெற
நிவந்த 130 காம்பொசிந்து
அன்ன கவினை யாகிய
நலங்கிளர் தடந்தோள் நவையறச்
சேஎந்து
அலங்குமலர்த் தாமரை அகவயின் அமர்ந்த
திருமகள் இருக்கை உருவுபடக்
குயிலாக்
காமுறப் புனைந்த தாமம் உளப்படப் 135
பொறிவரி ஒழுக்கம் போலும் மற்இம்
மறியிலைக் கம்மமொடு மகரங்
கவ்விக்
கொடியொடு துளங்கி அடிபெற
வகுத்த அருமணிக்
கடகமொடு அங்குலி அழியச்
செற்றுபு சிறந்த சிறப்பும்உள்
ளாது 140 கற்றதென்
அமர்ந்த கலப்பின வாகியும்
பற்றுவிட்டு அகறல் பண்போ எனவும் |
உரை |
|
|
பவழக் காசொடு பன்மணி விரைஇத்
திகழக் கோத்த செம்பொன்
பாண்டில்
கைவினைக் கொளுவில் செய்துநலம் குயின்ற 145
எண்ணாற் காழ்நிரை கண்உமிழ்ந்து
இலங்க
உருவக் கோலமொடு உட்குவீற்று இருந்த
அரவுப்பை அன்ன ஐதேந்து
அல்குல்
புகைக்கொடிப் புத்தேள் பொருக்கென ஊட்டி
அழல்கொடி அரத்தம் மறைத்தவோ எனவும் |
உரை |
|
|
150 மணிக்கண் அன்னம்
அணித்தகு
பெடையைப்
பயிலிதழ்ப் பனிநீர்ப் பக்கம் நீக்கி
வெயில்கெழு வெள்ளிடை விட்டிசின்
ஆங்கு
மணியரிக் கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
..................................................................
நின்னணி
காண்கம் சிறிது சிறிதுஉலாஅய் 155
மராஅந் துணரும் மாவின் தழையும்
குராஅம் பாவையும் கொங்கவிழ்
முல்லையும்
பிண்டித் தளிரும் பிறவும் இன்னவை
கொண்டியான் வந்தேன் கொள்குவை
ஆயின்
வண்டுஇமிர் கோதாய் வாராய் எனயும் |
உரை |
|
|
160 அணிவரைச் சாரல்
அருவி ஆடியும்
பணிமலர் கொய்தும் பாவை
புனைந்தும்
திருவிழை மகளிரோடு ஒருவழி வருவோய்
மருவின் மாதவன் மாசின்
மடமகள்
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின்
165 தாமம் தொடுத்தியான் கொடுத்தது
தவறெனக்
காம வேகம் கடுத்த கலப்பிடை
முகத்தே வந்துஓர் முசுக்கலை
தோன்ற
அகத்தே நடுங்கி அழல்பட வெய்துயிர்த்து
அஞ்சி அடைந்த அஞ்சில் தேமொழிப்
170 பஞ்சி மெல்லடிப் பாவாய்
பரந்த
கடுந்தீக்கு அஞ்சாது கரத்தியோ எனவும் |
உரை |
|
|
அங்கண் மாநிலத்து அகன்றுயிர்
வாழ்வோர்
வன்க ணாளர் என்றுபண்டு உரைப்போய்
நின்கண் அம்மொழி நிற்ப
என்கண் 175 புன்கண்
நோக்காது போதியோ எனவும் |
உரை |
|
|
இளைப்புறு ஞமலி நலத்தகு
நாவில்
செம்மையும் மென்மையுஞ் சிறந்துவனப்பு
எய்தி
அம்மை முன்னம் அணிபெறப் பிணங்கி
இலைபடக் குயிற்றிய எழில்ஒளிக் கம்மத்துத்
180 தலைவிரல் சுற்றும் தாதணி
வளையமும்
வட்ட ஆழியும் கட்டுவடஇணையும்
மகர வாயொடு நகைபெறப்
புனைந்த
விரல்அணி கவ்வி நிரலொளி எய்திப்
பூஅடர் மிதிப்பினும் புகைந்தழல் உறூஉம்
185 சேவடிக் கேற்ற செம்பொன்
கிண்கிணி
பாடக் குரலொடு பரடுபிறழ்ந்து அரற்றக்
கழனிக் கண்பின் காயெனத்
திரண்ட
அழகணி சிறுதுடை அசைய ஒதுங்கி
ஆயத்து இறுதி அணிநடை
மடப்பிடி 190 கானத்து அசைந்து
தானத்தின் தளர்ந்தபின்
கரிப்புல் பதுக்கையும் கடுநுனைப்
பரலும்
எரிப்புஉள் உறீஇ எஃகின் இயலவும்
எற்கா முறலின் ஏதம்
அஞ்சிக்
கற்கால் பயின்ற காலவி சில்அதர் 195
நடுக்கம் எய்தி நடப்பது நயந்தோய் |
உரை |
|
|
இடுக்கண் யான்பட என்னையும்
நினையாது
கடுப்பழல் அகவயின் கரத்தியோ எனவும்
படிகடந்து அடர்ந்த பல்களிற்று
யானை
இடிஉறழ் முரசின் இறைமகன் பணிப்ப
200 நூலமை வீணைக் கோலமை
கொளீஇக்
கரணம் பயிற்றினுங் காந்தள் முகிழ்விரல்
அரணங் காணா அஞ்சின
போலப்
பயத்தின் நீங்காச் சிவப்புஉள் உறுவின
அடைதற்கு ஆகா ஆரழற்
செங்கொடி 205 தொடுதற்கு
ஆற்றத் துணிந்தவோ எனவும் |
உரை |
|
|
வடிக்கண் மாதர் முடிக்கலம் முதலா
அடிக்கலம் தழீஇ முடித்தார்
மார்பன்
அரற்றியும் அயர்ந்தும் உரற்றியும் உயிர்த்தும்
வீழ்ந்தும் எழுந்தும் தாழ்ந்தும்
தளர்ந்தும் 210 செருவடு செங்கண்
தெண்பனி சிதறி
உருவுடை அகலத்து ஊழூழ்
உறைத்தரக்
கோல இரும்பிடி குழிப்பட்டு ஆழ
நீல வேழம் நினைந்துஉழன்
றாங்கு
மாலை மார்பன். மாதரைக் காணாது 215
இன்னவை பிறவும் பன்முறை அரற்றச் |
உரை |
|
|
செறுநர் முன்னர்ச் சீர்மை அன்றென
உறுநர் சூழ்ந்த ஒருபால்
ஒடுங்கித்
தேரும் புரவியும் வார்கவுள் யானையும்
மறப்படை இளையரோடு திறப்பட
வகுத்துப் 220 போரணி கலமும்
பொருளும் நல்கி |
உரை |
|
|
ஆரணி
அரசன் அடுதிறல் ஆண்தகை
அற்றம் அறியாச் செற்றச்
செய்கையோடு மேல்வர
வுண்டெனின் மீளி வாட்டிச்
சென்று நெருங்காது பின்றியும்
விடாது 225 குன்றகம்
அடுத்துக் கூழ்அவண் ஒடுக்கி
யாப்புற நிற்கெனக் காப்புறு
பெரும்படை
திசைசெலப் போக்கி அசைவில்
ஆண்மை மன்பெருங்
குமரனை மரபுளிக் காட்டித்
துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்துஎன்.
|
உரை |
|