Primary tabs
[
மணிமேகலை உதயகுமரன்பால்
உள்ளத்தாள்
என மணிமேகலைதனக்கு மணிமேகலாதெய்வம் வந்துதோன்றிய பாட்டு
]
இளங்கோன் கண்ட இளம்பொன் பூங்கொடி
விளங்குஒளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச்
சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன
குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமன் கடந்த வாய்மையள் என்றே
சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்
செவ்வியள் ஆயின்என் செவ்வியள் ஆகென
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம்செஞ் சாயல் அராந்தா ணத்துள்ஓர்
விஞ்சையன் இட்ட விளங்குஇழை என்றே
கல்என் பேரூர்ப் பல்லோர் உரையினை
ஆங்குஅவர் உறைவிடம் நீங்கி ஆயிழை
வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி
ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம்
யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன்
பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய
என்கெடுத்து இரங்கித் தன்தக வுடைமையின்
குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே
தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்துஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிட லீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
புனிற்றுஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி
என்மகள் இருந்த இடமென்று எண்ணித்
தன்உறு துன்பம் தாங்காது புகுந்து
இவண்நீர் அல்லஎன்று என்னொடும் வெகுண்டு
மைஅறு படிவத்து மாதவர் புறத்துஎமைக்
கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம்
அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப்
மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்
என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி
எம்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள்
உலக நோன்பின் பலகதி உணர்ந்து
தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக்
காமன் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்
அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று
அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின்,
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்
கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்என
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான்
இந்திர கோடணை விழாஅணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம்
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி
மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமன் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழியன் திருந்தடி
நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று
எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து
ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி
புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப்
புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை
ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி
ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய
குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்உறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற
அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப்
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி அந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழல்மேல் கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிர்ஆற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி
மணிமேகலாதெய்வம் வந்து
தோன்றிய காதை
முற்றிற்று.