தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • வடிவழகிய நம்பி திருக்கோயில் - திரு அன்பில்

    சிறப்புக்கள்

    1. திருமழிசையாழ்வாரால் மட்டும் தலைப்பில் கொடுக்கப்பட்ட
      ஒரேயொரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

    2. இத்தலம் மிகவும் தொன்மையானதாகும்.

    3. சுந்தர சோழன் தன் எதிரிகளோடு போருக்குச் செல்வதற்கு முன்,
      தனது உடைவாளை இப்பெருமானுக்கு முன் வைத்து வணங்கிச்
      சென்று போரில் வெற்றி வாகை சூடினான் என்றும், அதற்கு
      நன்றிக் காணிக்கையாக இத்தலத்திற்கு இறையிலி (ஏராளமான
      நிலதானம்) செய்ததையும் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.

    4. இக்கோவிலின் பிரகாரத்திலும், சுற்று மதில்களிலும், நடை
      பாதையிலும் கூட ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
    5. மிகச் சாதாரண நிலையில், சிற்சில பழுதுபாடுகளுடன்
      விளங்கினாலும், இத்தலம், தொன்மையினாலும், மேன்மையிலும் மிக
      உயர்ந்ததுதான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:02:11(இந்திய நேரம்)