தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • மணிக்குடி நாயகன் கோவில் - திருமணிக்கூடம்

    கெண்டையும் குறளும் புள்ளும்
        கேழலும் மரியும் மாவும்
    அண்டமும் சுடரும் அல்லா
        ஆற்றதுமாய எந்தை
    ஒண்டிறல் தென்ன னோட
        வடவர சோட்டங்கண்ட
    திண்டிற லாளர் நாங்கூர்த்
        திருமணிக் கூடத்தானே - (1293)
             பெரிய திருமொழி 4-5-6

    என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
    இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 பர்லாங் தூரத்தில்
    உள்ளது. திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம்
    மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:40:26(இந்திய நேரம்)