தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • காய்சினவேந்தப் பெருமாள்கோவில் திருப்புளிங்குடி 1

    சிறப்புக்கள்
    1. இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின்
      திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப்
      பெரியவைகள்.

    2. பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி,
      சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது
      போன்ற அரிய காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது.

    3. (பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக்
      கமலத்திலிருந்துசெல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான்
      பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்)

    4. நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்

    5. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை
      மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள
      ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல்
      அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப்
      பெறாத ஒன்றாகும்.

    6. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்மாழ்வாரின் பாசுரத்தைக்
      கூர்ந்து நோக்கினால் மேற்சொன்ன வரலாறு அனைத்தும் அதில்
      பொதிந்துள்ள நிலையைக் கண்ணுறலாம்.

    7. நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட திவ்ய தேசமாகிறது.

    8. இராமானுஜர்     இவ்வூருக்கு     வந்து     திருப்புளிங்குடி
      எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின்
      வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய (நெல்லைக் காயலிட்டுக்
      கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு
      குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
      கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி
      துவராடையணிந்த     மூதறிவாளா     கூவுதல்     வருதல்
      செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி
      நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்”
      என்ற    நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய்
      சுட்டிக்காட்டினாள். ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட
      மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு
      தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி) அப்படியே தரையில்
      வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர்
      தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து
      மன்னிப்பும் கோரினார்)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:27:48(இந்திய நேரம்)