Primary tabs
6 சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
[ மணிமேகலைதனக்கு மணிமேகலாதெய்வம்
சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை
அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர
ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர்
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
உருவு கொண்ட மின்னே போலத்
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப்
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச்
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
அறத்தோர் வனம்என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
அம்செஞ் சாயல் நீயும் அல்லது
நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார்
சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன,
மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன்
ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல்இருள் வரினும்
நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய
தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்
துள்உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால்பெரு வாயிலும் பால்பட்டு ஓங்கிய
உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்,
அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்தமும்
நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்,
தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும்,
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்,
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்,
நீள்முக நரியின் தீவிளிக் கூவும்,
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவுஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல்நீர்ப் புணரி நளிகடல் ஓதையின்
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஒங்கிக்
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும்
மால்அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்,
வெள்நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள்இறை கூரும் வெள்ளில் மன்றமும்,
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்,
விரத யாக்கையர் உடைதலை தொகுத்துஆங்கு
இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும்
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச்
என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு
உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்,
கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்,
கடகம் செறிந்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்,
சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை
காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும்,
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண்தொட்டு உண்டு கவைஅடி பெயர்த்துத்
கண்டனன் வெரீஇக் கடுநவை எய்தி,
விண்டுஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்துஈங்கு
எம்அனை காணாய் ஈமச் சுடலையின்
வெம்முது பேய்க்குஎன் உயிர்கொடுத் தேன்எனத்
பார்ப்பான் தன்னொடு கண்இழந்து இருந்தஇத்
தீத்தொழி லாட்டிஎன் சிறுவன் தன்னை
யாரும்இல் தமியேன் என்பது நோக்காது
ஆர்உயிர் உண்டது அணங்கோ பேயோ
துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
தகவுஇலை கொல்லோ சம்பா பதிஎன
மகன்மெய் யாக்கையை மார்புஉறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில்
கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி
இடைஇருள் யாமத்து என்னைஈங்கு அழைத்தனை
என்உற் றனையோ எனக்குஉரை என்றே
ஆரும்இ லாட்டிஎன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர்உயிர் உண்டது
அணங்கும் பேயும் ஆர்உயிர் உண்ணா
பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக
ஊழ்வினை வந்துஇவன் உயிர்உண்டு கழிந்தது
என்உயிர் கொண்டுஇவன் உயிர்தந் தருளில்என்
கண்இல் கணவனை இவன்காத்து ஓம்பிடும்
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர்உயிர் போனால்
செய்வினை மருங்கில் சென்றுபிறப்பு எய்துதல்
ஆங்குஅது கொணர்ந்துநின் ஆர்இடர் நீக்குதல்
ஈங்குஎனக்கு ஆவதுஒன்று அன்றுநீ இரங்கல்
கொலைஅறம் ஆம்எனும் கொடுந்தொழில் மாக்கள்
அவலப் படிற்றுஉரை ஆங்கது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்குஉயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
தேவர் தருவர் வரம்என்று ஒருமுறை
நால்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும்
மாபெருந் தெய்வம் நீஅரு ளாவிடின்
ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம்தரின் யானும் தருகுவன் மடவாய்
நால்வகை மரபின் அரூபப் பிரமரும்
நானால் வகையின் உரூபப் பிரமரும்
இருவகைச் சுடரும் இருமூ வகையில்
பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம்
எண்வகை நரகரும் இருவிசும்பு இயங்கும்
பல்மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன்அகத்து அடக்கிய சக்கர வாளத்து
வரம்தரற்கு உரியோர் தமைமுன் நிறுத்தி
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே
எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே,
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற
எங்குவாழ் தேவரும் கூடிய இடம்தனில்
சூழ்கடல் வளைஇய வாழியங் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையில் நின்ற எழுவகைக் குன்றமும்
நால்வகை மரபின் மாபெருந் தீவும்
ஓர்ஈ ராயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்குஅதன் இடவகை உரியன
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி
ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப் பட்ட
இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டத்து என்றலது உரையார்
மதன் இல் நெஞ்சமொடு வான்துயர்எய்திப்
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப,
இறந்துஇருள் கூர்ந்த இடைஇருள் யாமத்துத்
தூங்குஎயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை முற்றிற்று.