2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

பாடல்
Poem


நற்குடிப் பிறப்பு

பாடல் 1

கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும் மான்வயிற்றில்

ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்கும் குடி. - (4)

சினம் விடுக

பாடல் 2

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது

வேண்டின் வெகுளி விடல். - (17)

அஞ்சாமையும் அஞ்சுதலும்

பாடல் 3

அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த

எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்

கோடாமை கோடிபொருள்பெறினும் நாடாதி

நட்டார்கண் விட்ட வினை. - (25)

வேறு இல்லை

பாடல் 4

திருவின் திறலுடைய(து) இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இன்மையின் இன்னாத(து) இல்லைஇல் என்னாத

வன்மையின் வன்பாட்ட(து) இல். - (29)