2. அற இலக்கியம்

திருக்குறள்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  திருக்குறள் எழுதியவர் -----------.

திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்

2.  முப்பால் என்று குறிப்பிடப் பெறுவது ----------.

முப்பால் என்று குறிப்பிடப் பெறுவது திருக்குறள்.

3.  திருக்குறள் ------, --------, -------- எனப் பகுப்பு உடையது.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் எனப் பகுப்பு உடையது.

4.  திருக்குறள் ---------- அதிகாரங்கள் உடையது.

திருக்குறள் 133 அதிகாரங்கள் உடையது.

5.  திருக்குறள் ----------- குறட்பாக்கள் கொண்டது.

திருக்குறள் 1330 குறட்பாக்கள் கொண்டது.

6.  திருவள்ளுவர் காலம் --------.

திருவள்ளுவர் காலம் கி.மு. 31.

7.  திருக்குறள் --------- பாவகையைச் சார்ந்தது.

திருக்குறள் வெண்பா பாவகையைச் சார்ந்தது.

8.  திருக்குறள் ----------- இலக்கிய வகையைச் சேர்ந்தது.

திருக்குறள் அற இலக்கிய வகையைச் சேர்ந்தது.

9.  திருக்குறளுக்கு வேறு பெயர்கள்--------, ------------, -------------, ----------, -------------, ------------, ----------.

திருக்குறளுக்கு வேறு பெயர்கள் முப்பால், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை .

10.  திருக்குறள் சிறப்பு மிக்க -------, ------- அடிகளால் ஆனதால் இப்பெயர் பெற்றது.

திருக்குறள் சிறப்பு மிக்க குறுகிய, இரண்டு அடிகளால் ஆனதால் இப்பெயர் பெற்றது.