சிறுபஞ்சமூலம்
பாடல்
Poem
அழகுகள் ஐந்து
பாடல் 1
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்(பு) இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வேட்டான் நன்(று) என்றல் வனப்பு.

பல்லார் நகைக்காத வாழ்வு
பாடல் 2
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்த தீங்(கு) எண்ணி யிருத்தல் - பிழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளா பல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று.
மேதையர் நிலை
பாடல் 3
பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்(கு)
உரையாமைச் செல்லும் உணர்வு.

எல்லாம் அறிந்தவர் இலர்
பாடல் 4
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமி லானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல்.