2. அற இலக்கியம்

திருக்குறள்

பாடல் கருத்து
Theme of the Poem


திருக்குறள் - புகழ்

குறள் - 1

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)

ஊதியம் இல்லை உயிர்க்கு.


குறள் - 2

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்(று)

ஈவார்மேல் நிற்கும் புகழ்.


குறள் - 3

ஒன்றா உலகத்(து) உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்(று) இல்.


குறள் - 4

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

குறள் - 5

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.

குறள் - 6

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.


குறள் - 7

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்


குறள் - 8

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.


குறள் - 9

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

குறள் - 10

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.


நடுவுநிலைமை

குறள் - 1

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்(டு) ஒழுகப் பெறின்.


குறள் - 2

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற்(கு) ஏமாப்(பு) உடைத்து.


குறள் - 3

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.

குறள் - 4

தக்கார் தகவிலர் என்ப(து) அவரவர்

எச்சத்தால் காணப் படும்.


குறள் - 5

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.


குறள் - 6

கெடுவல்யான் என்ப(து) அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்.


குறள் - 7

கெடுவாக வையா(து) உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.


குறள் - 8

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.


குறள் - 9

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.


குறள் - 10

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின்.