திருக்குறள்
பாடல் கருத்து
Theme of the Poem
திருக்குறள் - புகழ்
குறள் - 1
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு.

குறள் - 2
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
குறள் - 3
ஒன்றா உலகத்(து) உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்(று) இல்.
குறள் - 4
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

குறள் - 5
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

குறள் - 6
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
குறள் - 7
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்
குறள் - 8
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
குறள் - 9
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

குறள் - 10
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
நடுவுநிலைமை
குறள் - 1
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்(டு) ஒழுகப் பெறின்.
குறள் - 2
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற்(கு) ஏமாப்(பு) உடைத்து.
குறள் - 3
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

குறள் - 4
தக்கார் தகவிலர் என்ப(து) அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
குறள் - 5
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
குறள் - 6
கெடுவல்யான் என்ப(து) அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
குறள் - 7
கெடுவாக வையா(து) உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
குறள் - 8
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
குறள் - 9
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
குறள் - 10
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.