|  43.  ஊர் 
 தீயிட்டது
 
 | 
 
 | இதன்கண்: யூகி கூறியதை வயந்தகன் 
 உதயணனுக்கு அறிவித்தலும், அதுகேட்டு உதயணன் செய்த செயலும், யூகியின் செயலும், அவன் 
 மறவர் செயலும், மங்கையர் நகரில் தீக்கொளுவுதலும், தீப்பற்றிய நகரத்தே நிகழும் 
 நிகழ்ச்சிகளும், பிறவும் கூறப்படும்.
 | 
 
 |  | 
 
 |  | எண்ணமொடு இருந்தோன் கண்ணியது 
 கருதி யாத்திரைக்கு அமைந்தன பாற்பட 
 அடக்கிப்
 போகுபொருள் உணர்ந்து பாகுசெயற்கு 
 எய்தி
 நயந்தெரி நாட்டத்து வயந்தகன் கூறும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 5   பாகியல் 
 உள்ளத்துப் படிமந் 
 தாங்கிய யூகி சூழ்ந்த உரைப்பருஞ் 
 சூழ்ச்சி
 வாய்திறந்து இன்றிது கோமகற்கு 
 உரையெனக்
 கூறினன் அருளிக் குறிப்பில் 
 கேள்மதி
 செறுநர் சிறையகப் பட்டனன் 
 ஆயினும்
 10  
   உறுவலி நாகத்து ஒற்றிடம் 
 பார்த்தல்
 அறைகடன் ஞாலத்து இறைகடன் ஆதலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நம்மை 
 எள்ளிய வெம்மை 
 வேந்தன் சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி 
 எய்தி
 ஒன்னா தோரும் துன்னினர் 
 ஆடும்
 15    நெடுநீர் 
 விழவில் படைபிடித் 
 தோரைக்
 கடிமுறை கடிவது அல்லது 
 இல்லென
 இடுமணி யானை எருத்தம் 
 ஏற்றி
 அடல்முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | உத்தரா பதத்தும் ஒப்புமை 
 இல்லாப் 20   பத்திரா பதியைப் பண்ணமைத்து 
 இயற்றித்
 தான்மேற் கொண்ட தன்மையன் 
 ஆதலின்
 நூல்மேல் சூழ்ந்த நுனிப்பில் 
 வழாமைச்
 செருஅடு வேந்தனும் பெருநடுக்கு 
 எய்தத்
 தொகைகொள் மாடத்து அகநகர் 
 வரைப்பின்
 25  நகைகொள் 
 முறுவல் நம்நாட் 
 டாட்டியர்
 புகைஎரி பொத்திய புணர்ப்புவகை உண்மையின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஊர்வயின் 
கம்பலை அல்லது ஒருவரும் நீர்வயின் கம்பலை நினைக்குநர் இல்லை
 இல்லைஆதலின் வெல்சமம் பெருக்கி
 30  
 வேந்தன் கோடல் வியன்நாடு கெடுத்தல்
 ஆங்கவன் மகளை அருஞ்சிறை வௌவுதல்
 மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடுந்தொழில்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தோன்றக் கூறிய மூன்றின் 
 உள்ளும் முன்னைய இரண்டும் முடியா மற்றவன்
 35   அரும்பெறல் மடமகள் அமிழ்துபடு 
 தீஞ்சொல்
 ஏசுவது இல்லா எழில்படு 
 காரிகை
 வாசவ தத்தைக்கு வலத்தன் 
 ஆகிச்
 செந்தீ வெம்புகை யிம்பர்த் 
 தோன்றலும்
 அம்தீம் கிளவியை ஆண்மையில் 
 பற்றிக்
 40   கால்பிடி 
 தன்னொடு ஏற்றுக ஏற்றலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வேல்படை இளையர் நால்பெருந் 
 திசையும் வாழ்க உதயணன் வலிக்கநம் 
 கேள்எனப்
 பாழினும் முழையினும் காழில் 
 பொத்தினும்
 ஒளித்த வெம்படை வெளிப்பட 
 ஏந்தி
 45   மலைக்குநர் 
 உளரெனின் விலக்குநர் 
 ஆகித்
 தொலைக்கும் நம்படை துணிந்திது கருதுக
 | உரை | 
 
 |  | 
 
 |  | இமைத்தோர் காணா இயற்கைத்து 
 ஆக அமைக்கப் பட்ட அணிநடை 
 மடப்பிடி
 நண்ணா மன்னன் நாடுதலை 
 மணந்த
 50   ஐந்நூற்று ஓடுதல் 
 ஆற்றாது ஆயினும்
 முந்நூற்று எழுபதும் முப்பதும் 
 ஓடி
 வீழினும் வீழ்க வேதனை 
 இல்லைக்
 கூழினும் உடையினும் குறிப்பினர் 
 ஆகி
 நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் 
 தலைவரும்
 55   குறும்பரும் 
 குழீஇய குன்றுடைப் 
 பெருநாடு
 அறிந்தோர்க்கு ஆயினும் அணுகுதற்கு 
 அரிய
 அரிய ஆயினும் உரியவை 
 போல
 இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | இன்னன் என்று தன்அறி 
 வுறீஇப்பின் 60   குற்றப் 
 படினும் அற்றம் 
 ஓம்பிப்
 போதத்தின் அகன்று சாதத்தின் 
 வழிநின்று
 அடுகளிக் குரவைசேர் ஆர்கலி 
 யாளர்
 நடுகல் படப்பை இடுகல் 
 சீறூர்
 கண்கூட் டிருந்த ஐம்பதிற்று 
 இரட்டிப்
 65   புல்பரந்து 
 கிடந்த கல்அதர் கடந்தபின்
 
 | உரை | 
 
 |  | 
 
 |  | தமர்அல் மாக்களைத் தருக்கின் 
 நூறும் அமரடு நோன்தாள் நமருளர் 
 அவ்வயின்
 இன்னவை பிறவுந் தன்மனத்து 
 அடக்கித்
 தான்அவண் ஒழிக மானவன் 
 நகரில்
 70   இழுக்குடைத்து 
 என்னும் எண்ணம்உண் டாயினும்
 வழுக்குடைத்து அதனை வலித்தல் 
 நீங்குக
 யாவை ஆயினும் யான்துணி 
 கருமம்
 தீயது இன்மை தெளிகஎம் பெருமகன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | யூகி 
 என்னும் பரைபரந்து ஓடப் 75  
   புல்வாய் இனத்தில் புலிபுக் 
 காங்குக்
 கொல்வாள் வீசிக் கூற்றுத்தலை 
 பனிப்ப
 வெல்போர் வேந்தன் வீரரைச் 
 சவட்டி
 எய்தப் போதுவல் ஏதம் 
 ஆயினும்
 ஐயம் இன்றி யான்துணி 
 கருமம்
 80   செய்யான் 
 ஆயின் வையம் 
 இழக்கும்
 மையல் யானை மன்னவன் 
 தான்என
 இயைந்த தோழன் எண்ணிய 
 கருமம்
 வயந்தக குமரன் வத்தவற்கு உரைப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தானும் யானுந் தீதிலம் 
 ஆயின் 85   வானும் 
 வணக்குவம் ஏனையது 
 என்னென
 முறுவல் கொண்ட முகத்தன் 
 ஆகி
 நறுநீர் விழவின் நாளணி 
 அகலம்
 பூண்சேர் மார்பன் காண்பான் 
 போலக்
 கடைப்பிடி உள்ளமொடு மடப்பிடி 
 கடைஇக்
 90   கோமகள் ஆடும் 
 பூமலி பெருந்துறை
 அகலாது அணுகாது பகலோன் 
 விண்முனிந்து
 இருநில மருங்கின் இழிதந் 
 தாங்குப்
 பெருநலம் திகழும் திருநலக் 
 கோலமொடு
 செய்குறிக் கருமம் தெவ்வப் பட்டுழித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 95   தாக்குநர் 
 அசாஅய்ப்பொர நேர்க்குநர் 
 இரிவுழி இருவரும் அவ்வழிப் பருவரல் 
 தீரப்
 பெருவலிக் கிளையில் கூடுவது 
 போல
 விண்ணக மருங்கில் கண்அகன்று 
 உராஅய்
 மண்ணகம் மறிக்கும் மதுகைத்து 
 ஆகிப்
 100    பாருடைப் பவ்வம் 
 பருகுபு நிமிர்ந்த
 நீருடைக் கொண்மூ நெகிழாக் 
 காலொடு
 எண்டிசைப் பக்கமும் எதிர்எதிர் 
 கலாஅய்க்
 கண்டவர் நடுங்கக் கடுவளி தோன்றலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கனவில் கண்ட கண்ஆர் 
 விழுப்பொருள் 105    நனவில் 
 பெற்ற நல்குர 
 வன்போல்
 உவந்த மனத்தின் விரைந்தெழுந்து 
 யூகியும்
 மறையத் திரிதரு மாந்தர்க்கு 
 எல்லாம்
 அறியக் கூறிய குறிஇற் 
 றாகப்
 பத்திரா பதத்துப் பகையமை 
 போர்வை
 110    உட்குவரு 
 முரசம் உரும்உறழ்ந்து 
 அதிரக்
 கொட்டினன் கொட்டலுங் கொள்ளென வுராஅய்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எவ்வெத் தானத்தும் கவ்வை 
 தோற்றி உதையண குமரனும் யூகியும் 
 வாழ்கெனப்
 புதைவாள் உரீஇப் பூசல் விளைத்தலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 115    மட்டுஅணி மூதூர் மனைதொறும் 
 மரீஇய கட்டணி கூந்தல் கள்ள 
 மங்கையர்
 அட்டிலும் அறையும் விட்டெரி கொளுவலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எட்டுஎனக் 
 கூறிய திசைதிசை 
 தொறூஉம் ஐந்தலை உத்தி அரவுநாண் ஆக
 120 
    மந்தர வில்லின் அந்தணன் 
 விட்ட
 தீவாய் அம்பு திரிதரு 
 நகரின்
 ஓவாது எழுமடங்கு உட்குவரத் தோன்றி
 | உரை | 
 
 |  | 
 
 |  | அரும்புனல் ஆடாது அகவயின் 
 ஒழிந்த பெரும்பரி சாரத்துப் பெண்டிர் எல்லாம்
 125    நறுநெய் தோய்ந்த நார்நூல் 
 வெண்துகில்
 செறிமென் கச்சை சேர்ந்த 
 வல்குலர்
 அசல மஞ்ஞையின் அணிநிறந் 
 தழீஇப்
 பசலை பாய்ந்த திதலைத் 
 தித்தி
 அசைந்த அவ்வயிறு அடைமத் 
 தாழ்ந்த
 130    கொடுங்கால் 
 குண்டிகைக் கொட்டம் ஏய்ப்ப
 அறாஅது ஒழுகும் அம்முலை 
 ஆரம்
 பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆற்றல் 
 வேந்தன் அற்றம் 
 நோக்கி வேற்று வேந்தர் புகுந்தனர் 
 உளர்கொல்
 135    கூற்ற 
 வேழம் குணம்சிதைந் 
 ததுகொல்என்று
 ஈற்றுப் பெண்டிர் இளமகத் 
 தழீஇ
 ஊற்றுநீர் அரும்பிய உள்ளழி 
 நோக்கினர்
 காற்றுஎறி வாழையில் கலங்கிமெய்ந் 
 நடுங்கி
 ஆற்றேம் யாம்என்று லறினர் ஒருசார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 140    போதுகொண்டு 
 அணியின் பொறுக்கல் 
 ஆற்றாத் தாதுகொண்டு இருந்த தாழ்இரும் 
 கூந்தலர்
 கருங்கேழ் உண்கண் கலக்கமொடு 
 அலமரப்
 பெருஞ்சூல் பெண்டிர் பேரழல் 
 நோக்கி
 வருவோர்க் கண்டு வணங்கினர் ஒருசார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 145    தவழும் புதல்வரை 
 ஒருகையால் தழீஇப் பவழஞ் சேரந்த பல்காழ் 
 அல்குலர்
 அவிழ்ந்த பூந்துகில் அங்கையின் 
 அசைஇ
 நகைப்பூங் கோதையொடு நான்ற 
 கூந்தற்கு
 மிகைக்கை காணாது புகைத்தீ 
 எறிப்பப்
 150    படைத்தோன் 
 குற்றம் எடுத்துரைஇ 
 இறக்கேம்
 அங்கித் தேவன் அருளென 
 வயன்மனைப்
 பொங்குநீர்ப் பொய்கை புக்கனர் ஒருசார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பறைந்தஇடை சோர்தரு பசலை 
 வெண்நரைக் குறைந்த கூந்தலர் கோசிகம் போலப்
 155    புள்ளி விதிர்த்த உள்உறு 
 மேனியர்
 பைசொரிந்து அன்ன பால்இல் 
 தோல்முலை
 நரைமூ தாட்டியர் நடுக்கம் 
 எய்திக்
 காலிடு தளர்ச்சியர் கண்பிறர் 
 ஆகக்
 கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி
 160 
     ஆதி முற்றத்து வேதிகை 
 முட்டிச்
 சுழலும் நெஞ்சமொடு துயரம் 
 எய்தி
 அழல்இல் முற்றம் அடைந்தனர் ஒருசார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சீப்புஉள் உறுத்துத் திண்எழுப் 
 போக்கிக் காப்புஉள் 
 உறுத்த கடிமதில் வாயில்
 165   
  கால்கடி யாளர் வேல்பிடித் 
 தோடி
 ஆணை ஆணை அஞ்சன்மின் 
 கரவொடு
 பேணல் செல்லாது பெருந்தீப் 
 படுத்த
 நாணில் பெண்டிரை நாடுமின் 
 விரைந்தென
 ஆய்புகழ் வேந்தன் அரசுத் தாணிக்
 170    கோயில் காவல் கொண்டனர் ஒருசார்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எப்பால் மருங்கினும் அப்பால் 
 அவரவர் பெருந்துயர் எய்திக் கரிந்துகண் 
 புதைப்ப
 நறுநெய் 
 பயந்த நன்நகர் 
 முத்தீ
 மறுமைக்கு எண்ணிய மயல்அறு கிரிசை
 175    அந்தணர் சேரியும் அருந்தவர் 
 பள்ளியும்
 வெண்சுதை மாடமும் வேந்தன் 
 கோயிலும்
 தெய்வத் தானமொடு அவ்வழி ஒழியத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தண்நறுங் காழ்அகில் நுண்அயிர்! 
 கூட்டி அம்புகை தவழ்ந்த அரக்குவினை மாடமும்
 180   
  வெம்புகை தவழ்ந்து வேந்துகண் 
 புதைப்ப
 வால்வளை மகளிர் மணிநிலத்து 
 அமைந்த
 கால்வளர் சாலி ஆய்பத 
 அரிசிப்
 பொன்செய் கிண்கிணிப் புதல்வர் 
 ஆடும்
 கம்பலை வெரீஇக் கவரல் செல்லா
 185    அம்பலக் கொடுங்காழ் அசைத்த 
 யாப்பின்
 கிடையும் பூளையும் கிழியும் 
 பஞ்சியும்
 படைஅமைத்து இயற்றிய மடைஅணிப் 
 பள்ளியுள்
 பிணிக்குரல் பயிற்றும் பேடையைக் 
 காணாது
 அணிக்கண் புறவின் ஐம்பால் 
 சேவல்
 190    எரிவளை 
 புகையிடை இறகுவிரித்து 
 அலற
 மேலெழு பேடை மீண்டுவந்து 
 ஆடக்
 கீழ்எழு செந்தீக் கிளைபிரித்து 
 அழற்ற
 மாமயில் பெடையொடு மகளிர் 
 நாப்பண்
 தூவி மஞ்ஞை தோகைவிரித்து அகவ்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 195    ஏற்றுரி முரசின் 
 இறைவன் மூதூர்க் காற்றுத் துணையாகக் கனலெரி 
 கவரப்
 படலணி வாயில் மடலணி 
 வேயுள்
 இடையற வில்லா இருக்கையில் 
 பொலிந்த
 பன்னாறு ஆயிரம் பாடிக் கொட்டிலும்
 200 
    முந்நூறு ஆயிரம் முட்டிகைச் 
 சேரியும்
 ஐந்நூறு ஆயிரம் கம்மஆ 
 லயமும்
 சேனை வேந்தன் சிறப்பினொடு 
 இருந்த
 தானைச் சேரியும் தலைக்கொண்டு 
 ஓடிக்
 கானத் தீயின் கடுகுபு திசைப்ப
 205    ஏனை மாடமும் எழுந்தன்றால் எரியென்
 | உரை | 
 
 |  |