தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    இப்பாடத்தின் மூலமாகக் கதைகளின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. புனைகதை என்பது புதினம், சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல் என்பதை இப்பாடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

    புதினத்தின் தோற்றம் குறித்தும், புதின இலக்கிய முன்னோடிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது.

    புதினத்தின் அமைப்புக் குறித்தும், கதைக்கரு, கதைப்பின்னல், இழுப்புவிசை, எதிர்பார்ப்பு நிலை, குறிப்புமுரண், பாத்திரப் படைப்பு, நனவோடைமுறை, உரையாடல், சூழல் அமைப்பு, நடை ஆகிய கூறுகள் புதினத்தில் பெறும் இடம் குறித்தும் இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1
    பாத்திரப் படைப்பின் சிறப்புகள் யாவை?
    2

    பாத்திரப் படைப்பின் உத்திகளைக் குறிப்பிடுக.

    3

    நனவோடை முறை குறித்து எழுதுக.

    4
    புதினத்தில் உரையாடல் பெறும் இடம் யாது?
    5

    நடை குறித்து எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:15:47(இந்திய நேரம்)