| 42. நங்கை 
 நீராடியது
 
 | 
 
 |  | இதன்கண்; வாசவதத்தை நீராட 
 வருதலும் அவள் மணையில் சேர்த்தலும் மஞ்சனமாட்டலும் ஒப்பனை செய்தலும் அவள் நீராடலும் 
 உதயணன் செயலும் பிறவுங் கூறப்படும். |  | 
 
 |  |  |  | 
 
 |  |             
 நீராட்டு அரவம்நெடுநகர் 
 வரைப்பகம்ஆராட்டு அரவமொடு அமர்ந்துவிழைவு 
 அகற்றிய
 பெருநிலை நிதியம் பேணாது 
 வழங்கி
 இருநில மடந்தைக்கு இறைவன் 
 ஆகிப்
 5   பெருஞ்சின 
 மன்னர் அருஞ்சமம் 
 வாட்டித்
 தம்மொழிக் 
 கொளீஇ வெம்முரண் 
 வென்றியொடு
 வழுவில் கொள்கை வானவர் 
 ஏத்தும்
 கழிபெருங் கடவுளை வழிபடின் 
 அல்லது
 வணக்கம் இல்லா அணித்தகு 
 சென்னித்
 10    திருச்சேர் 
 அகலத்துப் பிரச்சோ தனன்மகள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அரிமான் அன்னதன் பெருமான் 
 அகலத்துத் திருவுநிறை கொடுக்கும் உருவுகொள் 
 காரிகை
 வால்வளைப் பணைத்தோள் வாசவ 
 தத்தையைக்
 கோல்வளை மகளிர் கொட்டையைச் 
 சூழ்ந்த
 15   அல்லியும் 
 இதழும் போல 
 நண்ணிப்
 பல்வகை மரபின் பசும்பொன் 
 குயின்ற
 ஊர்தியும் பிடிகையும் சீர்கெழு 
 சிவிகையும்
 வையமும் தேரும் வகைவெண் மாடமும்
 பொறுப்பவும் ஊர்பவும் 
 செறித்துஇடம் பெறாஅர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 20   நேமி வலவன் ஆணை 
 அஞ்சிப் பூமி சுவர்க்கம் புறப்பட் 
 டாங்குத்
 தீட்டமை கூர்வாள் கூட்டொடு 
 பொலிந்த
 வேல்திறல் ஆளரும் மிலைச்சரும் 
 சிலதரும்
 கோல்தகை மாக்களும் நூற்றுவில் 
 அகலம்
 25   குறுகச் செல்லாச் 
 செறிவுடைக் 
 காப்பில்
 பெருங்கடி மூதூர் மருங்குஅணி 
 பெற்ற
 அருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அம்பணை மூங்கில் பைம்போழ் 
 நிணவையும் வட்டமும் சதுரமும் முக்கோண் 
 வடிவமும்
 30   கட்டளை 
 யானையும் மத்தக 
 வுவாவும்
 வையப் புறத்தொடு கைபுனைந்து 
 இயற்றிப்
 பூத்தூர் நிலையோடு யாப்புற 
 மைத்துக்
 காமர் பலகை கதழவைத்து 
 இயற்றி
 வண்ணம் கொளீஇய நுண்ணூல் 
 பூம்படம்
 35   எழுதுவினைக் 
 கம்மமொடு முழுதும்முதல் 
 அளைஇ
 மென்கிடைப் போழ்வைச் சந்திய 
 வாகி
 அரிச்சா லேகமும் நாசியும் 
 முகடும்
 விருப்புநிலைத் தானமும் பிறவும் 
 எல்லாம்
 நேர்ந்துவனப்பு எய்திய நீரணி 
 மாடம்
 40   சேர்ந்த 
 வீதியுள் சிறப்பொடு பொலிந்த
 | உரை | 
 
 |  | 
 
 |  | எவ்வெவ 
	பண்டமும் அவ்வயின் போத்தந்து ஒலியுஞ் சேனை இணைதனக்கு ஒவ்வா
 மலிநீர் மாடத்துப் பொலிவுகொள் மறுகின்
 வெயில்அழல் கவியாது வியலக வரைப்பின்
 45   உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப்
 பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை
 வேந்தன் மகளே விரையாது என்மரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பண்டை மகளிர் படிமையில் 
 பிழையாது தண்டம் தூக்கித் தலைப்புனல் 
 விழவினைக்
 50  
  கொண்டுவந்து ஆடுங் கொழுமலர்த் 
 தடம்கண்
 பொங்குமலர்க் கோதாய் போற்றுஎன் 
 போரும்
 நின்னை உவக்கும்நின் பெருமான் 
 ஏந்திய
 வெல்வேல் கடுக்கும் வெம்மை 
 நோக்கத்துப்
 பொன்னே போற்றி பொலிகஎன் 
 போரும்
 55   பொருவேள் 
 பேணிப் பொலியும் 
 சேனையுள்
 பெருவேண் மறைந்து பெரும்புனல் 
 ஆடும்
 திருவே மெல்லச் செல்கஎன் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொங்குதிரை ஞாலத்து மயக்கம் 
 நீக்கும் திங்கள் அன்னநின் திருமுகம் 
 சுடரத்
 60   துன்பப் 
 பேரிருள் துமிக்கத் 
 தோன்றிய
 நங்காய் மெல்ல நடஎன் 
 போரும்
 வல்லவன் எழுதிய பல்பூம் 
 பத்திக்
 கட்டெழில் சேர்ந்த வட்டணைப் 
 பலகைப்
 பளிக்குமணிச் சிவிகையுள் விளக்குறுத் 
 ததுபோல்
 65   தோன்றும் 
 மாதரைத் தோன்ற ஏத்திப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைங்கேழ்ச் சாந்தும் குங்குமக் 
 குவையும் மலர்ப்பூம் பந்தும் தலைத்தளிர்ப் 
 போதும்
 மல்லிகைச் சூட்டும் நெல்வளர் 
 கதிரும்
 இனிக்குறை இல்லை யாமும் 
 ஆடுகம்
 70   எனத்துணிந்து 
 இளையோர் ரிருநூல் 
 பெய்த
 அனிச்சக் கோதையும் ஆய்பொன் 
 சுண்ணமும்
 அந்தர மருங்கின் வண்டுகை 
 விடாஅச்
 சுந்தரப் பொடியும் சுட்டிச் 
 சுண்ணமும்
 வித்தகர் கொடுத்த பித்திகைப் பிணையலும்
 75   மத்தநல் யானை மதமும் 
 நானமும்
 வாசப் பொடியொடு காயத்துக் 
 கழும
 அந்தரத்து இயங்குநர் மந்திரம் 
 மறப்ப
 நறுந்தண் நாற்றம் உடையவை 
 நாடி
 எறிந்துந் தூவியும் எற்றியும் தெளித்தும்
 80   பல்லோர் பல்சிறப்பு அயர்வனந் 
 ஏத்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வெல்போர் வேந்தன் மடமகள் 
 விரும்பி நில்லாத் தண்புனல் நெடுங்கோட்டு 
 ஒருசார்த்
 துறையமைத்து இயற்றிய குறைவில் 
 கூடத்து
 அம்புகை மருங்கில் செஞ்சுடர் மழுங்கச்
 85   சீயமும் ஏறும் பாய்பரிப் 
 புரவியும்
 யானையும் புலியும் அன்னமும் 
 அகன்றிலும்
 ஏனைய பிறவும் ஏஎ 
 ருடையன
 புனைவுகொண்டு ஏற்றி வினைவலர் 
 இயற்றிய
 கனல்சேர் புயைகஇல் ஏந்திய 
 கையின்
 90   மூதறி பெண்டிர் 
 காதலொடு பரவி
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீர்கால் கழீஇய வார்மணல் 
 எக்கர் முத்தும் மணியும் பொற்குறு 
 சுண்ணமும்
 வெள்ளியும் பவழமும் உள்விழுந்து 
 இமைப்ப
 வண்ண அரிசியொடு மலரிடை 
 விரைஇ
 95   நுண்ணிது நரித்த 
 வண்ண னகர்வயின்
 தமனியத் தடத்துப் பவழப் 
 பாய்கால்
 திகழ்மணி வெள்ளிப் புகழ்மணை சேர்த்திக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கதிர்நகை முறுவல் காரிகை 
 மாதரை எதிர்கொண்டு வணங்கி இழித்தனர் 
 நிறீஇக்
 100    காஞ்சன 
 மாலையும் செவிலியும் 
 பற்றி
 எஞ்சலில் கம்மத்து இணைதனக்கு 
 இல்லாப்
 பஞ்ச வண்ணத்துப் பத்திபல 
 புனைந்த
 பொங்குமலர்த் தவிசில் பூமிசை 
 ஆயினும்
 அஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற
 105    வேழத் தாழ்கைக் காழொடு 
 சேர்த்த
 கண்டப் பூந்திரை மண்டபத்து 
 இழைத்த
 நன்னகர் நடுவண் பொன்மணை ஏற்றிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பெருந்திசை நோக்கி யிருந்தவண் 
 இறைஞ்சி யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள்
 110    அடித்தலம் முதலா முடித்தலங் 
 காறும்
 மொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு 
 பைந்தாள்
 மங்கலப் புல்அவர் இன்புறப் 
 பெய்தபின்
 நீராடு பல்கலம் நெரிய 
 ஏற்றி
 ஆராடு தானத்து ஐந்நூறு ஆயிரம்
 115   
  பசும்பொன் மாலையுந் தயங்குகதிர் 
 முத்தமும்
 இரவல் மாக்கட்குச் சொரிவன 
 நல்கித்
 தீங்கருங் 
 காதல் செவிலியும் 
 தோழி
 காஞ்சன மாலையும் கையிசைத்து 
 ஏந்த
 அளற்றுஎழு தாமரை அள்ளிலை நீரில்
 120    துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு 
 விம்மித்
 தோழியர் சூழ ஊழூழ் 
 ஒல்கித்
 தலைப்புனல் 
 மூழ்குதல் இலக்கணம் 
 ஆதலின்
 மணலிடு நிலைத்துறைத் துணைவளை 
 ஆர்ப்பக்
 குடைவனள் 
 குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்
 125    படையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | புடைவீங்கு இளமுலைப் பூண்பொறை 
 ஆற்றாது இடையே 
 மாக்குமென்று அடைவனர் 
 விலக்கிச்
 சீலத்து அன்ன தெய்வம் 
 கவினிக்
 கோலம் கொண்ட கூந்தலொடு 
 குளித்துப்
 130   
  பிடிக்கையின் வணரும் முடிக்குரல் 
 ஆற்றாள்
 செருக்கயல் அன்ன சேயரி 
 நெடுங்கண்
 அரத்தகம் 
 பூப்ப அலமந்து 
 எழலும்
 வாழியர் 
 எம்மனை வருந்தினை 
 பெரிதென
 மொழிஅறி 
 மகளிர் தொழுதனர் வணங்கி
 135   
  அத்துமுறை யுரிஞ்சி ஆயிரத்து 
 எண்குடம்
 முத்துஉறழ் நறுநீர் முறைமையின் ஆட்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  | அங்கு 
 அல்குவு அல்நங்கைக்கு 
 இன்றிவை மங்கல மண்ணுநீர் ஆவன 
 என்று
 நெஞ்சம் நெகிழ்ந்துவந்து ன்புகலந்து 
 தாடியல்
 140    அரவில் 
 பரந்த அல்குல் மீமிசைக்
 கலாஅய்க் கிடந்த குலாத்தரு 
 கலிங்கம்
 நிலாவிடு பசுங்கதிர்க் கலாவம் 
 ஏய்ப்ப
 நீரணி கொண்ட ஈரணி 
 நீக்கிக்
 கதிர்நிழற்கு அவாஅப் பதுமநிறம் 
 கடுக்கும்
 145    புதுநூல் 
 பூந்துகில் அருமடி உடீஇக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | காரிருங் கூந்தல் நீரற 
 வாரி வனப்பொடு 
 புணர வகுத்தணி 
 முடிமிசை
 நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை 
 சிகழிகை
 முல்லையம் 
 கோதை சில்சூட்டு அணிந்து
 150   
  தண்ணறும் சாந்தம் நுண்ணிதின் 
 எழுதிப்
 பதினோர் ஆண்டினுள் பாற்படக் 
 கிளந்த
 விதிமாண் உறுப்பிற்கு வேண்டுவ 
 வேண்டுவ
 கதிர்மாண் பல்கலம் கைபுனைந்து 
 இயற்றி
 உறுப்பெடுக் கல்லா உடம்பினள் ஆயினும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 155    சிறப்பவை ஆதலின் 
 சீர்மையொடு இருந்து காமர் கோலம் கதிர்விரித்து 
 இமைப்பத்
 தாமரை உறையுள் மேவாள் 
 போந்த
 தேமலர்க் கோதைத் திருமகள் 
 போலக்
 கோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 160    அரணி கான்ற அணிகிளர் 
 செந்தீக் கிரிசையின் வழாஅ வரிசை 
 வாய்மை
 அளப்பரும் படிவத்து ஆன்ற 
 கேள்வித்
 துளக்கில் நெஞ்சத்துத் துணிந்த 
 வாய்மொழி
 சால்வணி யொழுக்கின் நூலியல் 
 நுனித்த
 165    மந்திர 
 நாவின் அந்தண 
 மகளிரும்
 வரும்புனல் ஆடற்குப் பரிந்தனர் 
 வந்த
 விரைபரி மான்தேர் அரைச 
 மகளிரும்
 அறிவினுஞ் செறிவினும் பொறியினும் 
 புகழினும்
 எறிகடல் தானை இறைமீக் கூறிய
 170    செம்பொன் பட்டத்துச் சேனா 
 பதிமகள்
 நங்கை தோழி நனிநா கரிகியும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அருந்திணை ஆயத்து அவ்வயின் 
 வழாஅத் திருந்திய திண்கோள் பெருந்திணை 
 மகளிரும்
 செண்ணம் அமைத்த செம்பொன் 
 பட்டத்து
 175    வண்ண 
 மணியொடு முத்திடை 
 விரைஇய
 கண்ணி நெற்றிக் காவிதி 
 மகளிரும்
 காலினும் கலத்தினும் சாலத் 
 தந்த
 மாநிதிச் செல்வத்து வாணிக 
 மகளிரும்
 நிலத்தோர் அன்ன நலத்தகு 
 பெரும்பொறை
 180    அருங்கடி 
 மூதூர்ப் பெருங்குடி 
 மகளிரொடு
 எண்ணல் ஆகத்துப் பெண்ணுலகு 
 ஏய்ப்பக்
 கன்னி மகளிர் கதிர்த்த 
 கோலமொடு
 நன்மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீர்தலைக் கொண்ட நெடும்பெருந் 
 துறைவயின் 185   
  போர்தலைக் கொண்டு பொங்குபு 
 மறலிக்
 கொங்கலர் கோதை கொண்டுபுறத்து 
 ஓாச்சியும்
 அம்செம் சாந்தம் ஆகத்து 
 எறிந்தும்
 நறுநீர்ச் சிவிறிப் பொறிநீர் 
 எக்கியும்
 முகிழ்விரள் தாரை முகநேர் விட்டும்
 190    மதிமருள் திருமுகத்து எதிர்நீர் 
 தூவியும்
 பொதிபூம் பந்தின் எதிர்நீர் எறிந்தும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சிவந்த கண்ணினர் வியர்ந்த 
 நுதலினர் அவிழ்ந்த 
 கூந்தலர் நெகிழ்ந்த 
 ஆடையர்
 ஒசிந்த மருங்குர் அசைந்த 
 தோளினர்
 195    நல்கூர் 
 பெரும்புனல் கொள்க 
 என்றுதம்
 செல்வம் எல்லாம் சேர்த்துஇறைத்து 
 அருளி
 இளையா விருப்பில்தம் விளையாட்டு 
 முனைஇக்
 கயம்பாடு அவியப் புறங்கரை போந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொறிமயில் தொழுதி புயல்கழி காலைச் 200    செறிமயிர் உளர்த்தும் செய்கை 
 போல்தம்
 நெறிமயிர்க் கூந்தல் நீரற 
 வாரிச்
 செழும்பூம் பிணையல் அடக்குபு 
 முடித்துக்
 குழங்கற் சாந்தம் அழுந்துபட அணிந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | பைங்கூற் பாதிரிப் போதுபிரித் 
 தன்ன 205    அங்கோ சிகமும் 
 வங்கச் சாதரும்
 கொங்கார் கோங்கின் கொய்மலர் 
 அன்ன
 பைங்கேழ்க் 
 கலிங்கமும் பட்டுத் 
 தூசும்
 நீலமும் அரத்தமும் வாலிழை 
 வட்டமும்
 கோலமொடு புணர்ந்த வேறுவேறு 
 இயற்கை
 210    நூலினும் 
 உலண்டினும் நாரினும் 
 இயன்றன
 யாவை யாவை அவைஅவை 
 மற்றவை
 மேவன மேவன காமுற 
 அணிந்து
 கம்மியர் புனைந்த காமர் 
 பல்கலம்
 செம்மையின் அணியுஞ் செவ்விக் காலத்துச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 215    சிந்தையின் ஒழிக்கும் 
 செலவிற்று ஆகி அந்தர விசும்பின் அமரர் 
 பொருட்டா
 மந்திர முதல்வன் மரபில் 
 படைத்த
 இந்திரன் களிற்றொடு இணைந்துடன் 
 பிறந்த
 இரும்பிடி தானும் இதற்கிணை 
 அன்றென
 220    அரும்பிடி 
 அறிவோ ஆராய்ந்து 
 அமைத்தது
 காலினும் கையினும் படைத்தொழில் 
 பயின்றது
 கோலினும் வேலினும் மறலினுங் 
 குமைத்தது
 தட்பமும் வெப்பமுந் தாம்படின் 
 தீர்ப்பது
 பகலினும் இருளினும் பணியில் 
 பயின்ற
 225    திகலிருங் 
 கும்பத்து ஏந்திய சென்னியது
 | உரை | 
 
 |  | 
 
 |  | மேலின் தூயது காலில் 
 கடியது மத்தக மாலையொடு நித்திலம் 
 அணிந்த
 துத்தரா பதத்தும் ஒப்புமை 
 இல்லாப்
 பத்திரா பதிமிசைப் பனிக்கடல் 
 பிறந்த
 230    வெஞ்சூர் 
 தடிந்த அஞ்சுவரு 
 சீற்றத்து
 முருகவேள் அன்ன உருவுகொள் 
 தோற்றத்து
 உதையண குமரன் புதைவாள் அடக்கிச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சிறைஎனக் கொண்ட மன்னவன் 
 செல்வமும் துறைவயின் நாடுநர் துதைந்த 
 போகமும்
 235    நெய்பெய் 
 அழலில் கைஇகந்து 
 பெருகிப்
 புறப்படல் செல்லா ஆகி 
 மற்றவை
 மனத்திடை நின்று கனற்றுபு 
 சுடுதலின்
 மாற்றுச் செய்கை என்னும் 
 நீரால்
 ஆற்ற வெவ்வழல் அவிப்பக் கூடுதல்
 240    வயிரத் தோட்டி அன்றியும் 
 பயிரின்
 சொல்லியது பிழையாக் கல்விக் 
 கரணத்துப்
 பிடியொடு புணர்ந்த இப்பகல் 
 ஆயினும்
 முடியும் என்னும் முயற்சியன் ஆகிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பாப்புரி அன்ன மீக்கொள் 
 தானை 245    இருபுடை 
 மருங்கினும் வருவளிக்கு 
 ஒசிந்து
 வீச்சுறு கவரித் தோற்றம் 
 போல
 மிக்குவாய் கூரும் மீட்சி 
 வேட்கையன்
 கொக்குவாய் யன்ன கூட்டமை 
 விரலினன்
 நண்ணா மன்னனை நலிவது நாடும்
 250    எண்ணமோடு இருந்தனன் இரும்படி மிசைஎன்.
 | உரை | 
 
 |  |