42. நங்கை
நீராடியது
|
|
இதன்கண்; வாசவதத்தை நீராட
வருதலும் அவள் மணையில் சேர்த்தலும் மஞ்சனமாட்டலும் ஒப்பனை செய்தலும் அவள் நீராடலும்
உதயணன் செயலும் பிறவுங் கூறப்படும். |
|
|
|
|
|
நீராட்டு அரவம்நெடுநகர்
வரைப்பகம்
ஆராட்டு அரவமொடு அமர்ந்துவிழைவு
அகற்றிய
பெருநிலை நிதியம் பேணாது
வழங்கி
இருநில மடந்தைக்கு இறைவன்
ஆகிப் 5 பெருஞ்சின
மன்னர் அருஞ்சமம்
வாட்டித் தம்மொழிக்
கொளீஇ வெம்முரண்
வென்றியொடு
வழுவில் கொள்கை வானவர்
ஏத்தும்
கழிபெருங் கடவுளை வழிபடின்
அல்லது
வணக்கம் இல்லா அணித்தகு
சென்னித் 10 திருச்சேர்
அகலத்துப் பிரச்சோ தனன்மகள் |
உரை
|
|
|
அரிமான் அன்னதன் பெருமான்
அகலத்துத்
திருவுநிறை கொடுக்கும் உருவுகொள்
காரிகை
வால்வளைப் பணைத்தோள் வாசவ
தத்தையைக்
கோல்வளை மகளிர் கொட்டையைச்
சூழ்ந்த 15 அல்லியும்
இதழும் போல
நண்ணிப்
பல்வகை மரபின் பசும்பொன்
குயின்ற
ஊர்தியும் பிடிகையும் சீர்கெழு
சிவிகையும்
வையமும் தேரும் வகைவெண் மாடமும்
பொறுப்பவும் ஊர்பவும்
செறித்துஇடம் பெறாஅர் |
உரை
|
|
|
20 நேமி வலவன் ஆணை
அஞ்சிப்
பூமி சுவர்க்கம் புறப்பட்
டாங்குத்
தீட்டமை கூர்வாள் கூட்டொடு
பொலிந்த
வேல்திறல் ஆளரும் மிலைச்சரும்
சிலதரும்
கோல்தகை மாக்களும் நூற்றுவில்
அகலம் 25 குறுகச் செல்லாச்
செறிவுடைக்
காப்பில்
பெருங்கடி மூதூர் மருங்குஅணி
பெற்ற
அருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும் |
உரை
|
|
|
அம்பணை மூங்கில் பைம்போழ்
நிணவையும்
வட்டமும் சதுரமும் முக்கோண்
வடிவமும் 30 கட்டளை
யானையும் மத்தக
வுவாவும்
வையப் புறத்தொடு கைபுனைந்து
இயற்றிப்
பூத்தூர் நிலையோடு யாப்புற
மைத்துக்
காமர் பலகை கதழவைத்து
இயற்றி
வண்ணம் கொளீஇய நுண்ணூல்
பூம்படம் 35 எழுதுவினைக்
கம்மமொடு முழுதும்முதல்
அளைஇ
மென்கிடைப் போழ்வைச் சந்திய
வாகி
அரிச்சா லேகமும் நாசியும்
முகடும்
விருப்புநிலைத் தானமும் பிறவும்
எல்லாம்
நேர்ந்துவனப்பு எய்திய நீரணி
மாடம் 40 சேர்ந்த
வீதியுள் சிறப்பொடு பொலிந்த |
உரை
|
|
|
எவ்வெவ
பண்டமும் அவ்வயின் போத்தந்து
ஒலியுஞ் சேனை இணைதனக்கு ஒவ்வா
மலிநீர் மாடத்துப் பொலிவுகொள் மறுகின்
வெயில்அழல் கவியாது வியலக வரைப்பின்
45 உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப்
பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை
வேந்தன் மகளே விரையாது என்மரும் |
உரை
|
|
|
பண்டை மகளிர் படிமையில்
பிழையாது
தண்டம் தூக்கித் தலைப்புனல்
விழவினைக் 50
கொண்டுவந்து ஆடுங் கொழுமலர்த்
தடம்கண்
பொங்குமலர்க் கோதாய் போற்றுஎன்
போரும்
நின்னை உவக்கும்நின் பெருமான்
ஏந்திய
வெல்வேல் கடுக்கும் வெம்மை
நோக்கத்துப்
பொன்னே போற்றி பொலிகஎன்
போரும் 55 பொருவேள்
பேணிப் பொலியும்
சேனையுள்
பெருவேண் மறைந்து பெரும்புனல்
ஆடும்
திருவே மெல்லச் செல்கஎன் போரும் |
உரை
|
|
|
பொங்குதிரை ஞாலத்து மயக்கம்
நீக்கும்
திங்கள் அன்னநின் திருமுகம்
சுடரத் 60 துன்பப்
பேரிருள் துமிக்கத்
தோன்றிய
நங்காய் மெல்ல நடஎன்
போரும்
வல்லவன் எழுதிய பல்பூம்
பத்திக்
கட்டெழில் சேர்ந்த வட்டணைப்
பலகைப்
பளிக்குமணிச் சிவிகையுள் விளக்குறுத்
ததுபோல் 65 தோன்றும்
மாதரைத் தோன்ற ஏத்திப் |
உரை
|
|
|
பைங்கேழ்ச் சாந்தும் குங்குமக்
குவையும்
மலர்ப்பூம் பந்தும் தலைத்தளிர்ப்
போதும்
மல்லிகைச் சூட்டும் நெல்வளர்
கதிரும்
இனிக்குறை இல்லை யாமும்
ஆடுகம் 70 எனத்துணிந்து
இளையோர் ரிருநூல்
பெய்த
அனிச்சக் கோதையும் ஆய்பொன்
சுண்ணமும்
அந்தர மருங்கின் வண்டுகை
விடாஅச்
சுந்தரப் பொடியும் சுட்டிச்
சுண்ணமும்
வித்தகர் கொடுத்த பித்திகைப் பிணையலும்
75 மத்தநல் யானை மதமும்
நானமும்
வாசப் பொடியொடு காயத்துக்
கழும
அந்தரத்து இயங்குநர் மந்திரம்
மறப்ப
நறுந்தண் நாற்றம் உடையவை
நாடி
எறிந்துந் தூவியும் எற்றியும் தெளித்தும்
80 பல்லோர் பல்சிறப்பு அயர்வனந்
ஏத்தி |
உரை
|
|
|
வெல்போர் வேந்தன் மடமகள்
விரும்பி
நில்லாத் தண்புனல் நெடுங்கோட்டு
ஒருசார்த்
துறையமைத்து இயற்றிய குறைவில்
கூடத்து
அம்புகை மருங்கில் செஞ்சுடர் மழுங்கச்
85 சீயமும் ஏறும் பாய்பரிப்
புரவியும்
யானையும் புலியும் அன்னமும்
அகன்றிலும்
ஏனைய பிறவும் ஏஎ
ருடையன
புனைவுகொண்டு ஏற்றி வினைவலர்
இயற்றிய
கனல்சேர் புயைகஇல் ஏந்திய
கையின் 90 மூதறி பெண்டிர்
காதலொடு பரவி |
உரை
|
|
|
நீர்கால் கழீஇய வார்மணல்
எக்கர்
முத்தும் மணியும் பொற்குறு
சுண்ணமும்
வெள்ளியும் பவழமும் உள்விழுந்து
இமைப்ப
வண்ண அரிசியொடு மலரிடை
விரைஇ 95 நுண்ணிது நரித்த
வண்ண னகர்வயின்
தமனியத் தடத்துப் பவழப்
பாய்கால்
திகழ்மணி வெள்ளிப் புகழ்மணை சேர்த்திக் |
உரை
|
|
|
கதிர்நகை முறுவல் காரிகை
மாதரை
எதிர்கொண்டு வணங்கி இழித்தனர்
நிறீஇக் 100 காஞ்சன
மாலையும் செவிலியும்
பற்றி
எஞ்சலில் கம்மத்து இணைதனக்கு
இல்லாப்
பஞ்ச வண்ணத்துப் பத்திபல
புனைந்த
பொங்குமலர்த் தவிசில் பூமிசை
ஆயினும்
அஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற
105 வேழத் தாழ்கைக் காழொடு
சேர்த்த
கண்டப் பூந்திரை மண்டபத்து
இழைத்த
நன்னகர் நடுவண் பொன்மணை ஏற்றிப் |
உரை
|
|
|
பெருந்திசை நோக்கி யிருந்தவண்
இறைஞ்சி
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள்
110 அடித்தலம் முதலா முடித்தலங்
காறும்
மொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு
பைந்தாள்
மங்கலப் புல்அவர் இன்புறப்
பெய்தபின்
நீராடு பல்கலம் நெரிய
ஏற்றி
ஆராடு தானத்து ஐந்நூறு ஆயிரம் 115
பசும்பொன் மாலையுந் தயங்குகதிர்
முத்தமும்
இரவல் மாக்கட்குச் சொரிவன
நல்கித் தீங்கருங்
காதல் செவிலியும்
தோழி
காஞ்சன மாலையும் கையிசைத்து
ஏந்த
அளற்றுஎழு தாமரை அள்ளிலை நீரில்
120 துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு
விம்மித்
தோழியர் சூழ ஊழூழ்
ஒல்கித் தலைப்புனல்
மூழ்குதல் இலக்கணம்
ஆதலின்
மணலிடு நிலைத்துறைத் துணைவளை
ஆர்ப்பக் குடைவனள்
குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்
125 படையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப் |
உரை
|
|
|
புடைவீங்கு இளமுலைப் பூண்பொறை
ஆற்றாது இடையே
மாக்குமென்று அடைவனர்
விலக்கிச்
சீலத்து அன்ன தெய்வம்
கவினிக்
கோலம் கொண்ட கூந்தலொடு
குளித்துப் 130
பிடிக்கையின் வணரும் முடிக்குரல்
ஆற்றாள்
செருக்கயல் அன்ன சேயரி
நெடுங்கண் அரத்தகம்
பூப்ப அலமந்து
எழலும் வாழியர்
எம்மனை வருந்தினை
பெரிதென மொழிஅறி
மகளிர் தொழுதனர் வணங்கி 135
அத்துமுறை யுரிஞ்சி ஆயிரத்து
எண்குடம்
முத்துஉறழ் நறுநீர் முறைமையின் ஆட்டி |
உரை |
|
|
அங்கு
அல்குவு அல்நங்கைக்கு
இன்றிவை
மங்கல மண்ணுநீர் ஆவன
என்று
நெஞ்சம் நெகிழ்ந்துவந்து ன்புகலந்து
தாடியல் 140 அரவில்
பரந்த அல்குல் மீமிசைக்
கலாஅய்க் கிடந்த குலாத்தரு
கலிங்கம்
நிலாவிடு பசுங்கதிர்க் கலாவம்
ஏய்ப்ப
நீரணி கொண்ட ஈரணி
நீக்கிக்
கதிர்நிழற்கு அவாஅப் பதுமநிறம்
கடுக்கும் 145 புதுநூல்
பூந்துகில் அருமடி உடீஇக் |
உரை
|
|
|
காரிருங் கூந்தல் நீரற
வாரி வனப்பொடு
புணர வகுத்தணி
முடிமிசை
நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை
சிகழிகை முல்லையம்
கோதை சில்சூட்டு அணிந்து 150
தண்ணறும் சாந்தம் நுண்ணிதின்
எழுதிப்
பதினோர் ஆண்டினுள் பாற்படக்
கிளந்த
விதிமாண் உறுப்பிற்கு வேண்டுவ
வேண்டுவ
கதிர்மாண் பல்கலம் கைபுனைந்து
இயற்றி
உறுப்பெடுக் கல்லா உடம்பினள் ஆயினும் |
உரை
|
|
|
155 சிறப்பவை ஆதலின்
சீர்மையொடு இருந்து
காமர் கோலம் கதிர்விரித்து
இமைப்பத்
தாமரை உறையுள் மேவாள்
போந்த
தேமலர்க் கோதைத் திருமகள்
போலக்
கோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி |
உரை
|
|
|
160 அரணி கான்ற அணிகிளர்
செந்தீக்
கிரிசையின் வழாஅ வரிசை
வாய்மை
அளப்பரும் படிவத்து ஆன்ற
கேள்வித்
துளக்கில் நெஞ்சத்துத் துணிந்த
வாய்மொழி
சால்வணி யொழுக்கின் நூலியல்
நுனித்த 165 மந்திர
நாவின் அந்தண
மகளிரும்
வரும்புனல் ஆடற்குப் பரிந்தனர்
வந்த
விரைபரி மான்தேர் அரைச
மகளிரும்
அறிவினுஞ் செறிவினும் பொறியினும்
புகழினும்
எறிகடல் தானை இறைமீக் கூறிய
170 செம்பொன் பட்டத்துச் சேனா
பதிமகள்
நங்கை தோழி நனிநா கரிகியும் |
உரை
|
|
|
அருந்திணை ஆயத்து அவ்வயின்
வழாஅத்
திருந்திய திண்கோள் பெருந்திணை
மகளிரும்
செண்ணம் அமைத்த செம்பொன்
பட்டத்து 175 வண்ண
மணியொடு முத்திடை
விரைஇய
கண்ணி நெற்றிக் காவிதி
மகளிரும்
காலினும் கலத்தினும் சாலத்
தந்த
மாநிதிச் செல்வத்து வாணிக
மகளிரும்
நிலத்தோர் அன்ன நலத்தகு
பெரும்பொறை 180 அருங்கடி
மூதூர்ப் பெருங்குடி
மகளிரொடு
எண்ணல் ஆகத்துப் பெண்ணுலகு
ஏய்ப்பக்
கன்னி மகளிர் கதிர்த்த
கோலமொடு
நன்மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர் |
உரை
|
|
|
நீர்தலைக் கொண்ட நெடும்பெருந்
துறைவயின் 185
போர்தலைக் கொண்டு பொங்குபு
மறலிக்
கொங்கலர் கோதை கொண்டுபுறத்து
ஓாச்சியும்
அம்செம் சாந்தம் ஆகத்து
எறிந்தும்
நறுநீர்ச் சிவிறிப் பொறிநீர்
எக்கியும்
முகிழ்விரள் தாரை முகநேர் விட்டும்
190 மதிமருள் திருமுகத்து எதிர்நீர்
தூவியும்
பொதிபூம் பந்தின் எதிர்நீர் எறிந்தும் |
உரை
|
|
|
சிவந்த கண்ணினர் வியர்ந்த
நுதலினர் அவிழ்ந்த
கூந்தலர் நெகிழ்ந்த
ஆடையர்
ஒசிந்த மருங்குர் அசைந்த
தோளினர் 195 நல்கூர்
பெரும்புனல் கொள்க
என்றுதம்
செல்வம் எல்லாம் சேர்த்துஇறைத்து
அருளி
இளையா விருப்பில்தம் விளையாட்டு
முனைஇக்
கயம்பாடு அவியப் புறங்கரை போந்து |
உரை
|
|
|
பொறிமயில் தொழுதி புயல்கழி காலைச்
200 செறிமயிர் உளர்த்தும் செய்கை
போல்தம்
நெறிமயிர்க் கூந்தல் நீரற
வாரிச்
செழும்பூம் பிணையல் அடக்குபு
முடித்துக்
குழங்கற் சாந்தம் அழுந்துபட அணிந்து |
உரை
|
|
|
பைங்கூற் பாதிரிப் போதுபிரித்
தன்ன 205 அங்கோ சிகமும்
வங்கச் சாதரும்
கொங்கார் கோங்கின் கொய்மலர்
அன்ன பைங்கேழ்க்
கலிங்கமும் பட்டுத்
தூசும்
நீலமும் அரத்தமும் வாலிழை
வட்டமும்
கோலமொடு புணர்ந்த வேறுவேறு
இயற்கை 210 நூலினும்
உலண்டினும் நாரினும்
இயன்றன
யாவை யாவை அவைஅவை
மற்றவை
மேவன மேவன காமுற
அணிந்து
கம்மியர் புனைந்த காமர்
பல்கலம்
செம்மையின் அணியுஞ் செவ்விக் காலத்துச் |
உரை
|
|
|
215 சிந்தையின் ஒழிக்கும்
செலவிற்று ஆகி
அந்தர விசும்பின் அமரர்
பொருட்டா
மந்திர முதல்வன் மரபில்
படைத்த
இந்திரன் களிற்றொடு இணைந்துடன்
பிறந்த
இரும்பிடி தானும் இதற்கிணை
அன்றென 220 அரும்பிடி
அறிவோ ஆராய்ந்து
அமைத்தது
காலினும் கையினும் படைத்தொழில்
பயின்றது
கோலினும் வேலினும் மறலினுங்
குமைத்தது
தட்பமும் வெப்பமுந் தாம்படின்
தீர்ப்பது
பகலினும் இருளினும் பணியில்
பயின்ற 225 திகலிருங்
கும்பத்து ஏந்திய சென்னியது |
உரை
|
|
|
மேலின் தூயது காலில்
கடியது
மத்தக மாலையொடு நித்திலம்
அணிந்த
துத்தரா பதத்தும் ஒப்புமை
இல்லாப்
பத்திரா பதிமிசைப் பனிக்கடல்
பிறந்த 230 வெஞ்சூர்
தடிந்த அஞ்சுவரு
சீற்றத்து
முருகவேள் அன்ன உருவுகொள்
தோற்றத்து
உதையண குமரன் புதைவாள் அடக்கிச் |
உரை
|
|
|
சிறைஎனக் கொண்ட மன்னவன்
செல்வமும்
துறைவயின் நாடுநர் துதைந்த
போகமும் 235 நெய்பெய்
அழலில் கைஇகந்து
பெருகிப்
புறப்படல் செல்லா ஆகி
மற்றவை
மனத்திடை நின்று கனற்றுபு
சுடுதலின்
மாற்றுச் செய்கை என்னும்
நீரால்
ஆற்ற வெவ்வழல் அவிப்பக் கூடுதல்
240 வயிரத் தோட்டி அன்றியும்
பயிரின்
சொல்லியது பிழையாக் கல்விக்
கரணத்துப்
பிடியொடு புணர்ந்த இப்பகல்
ஆயினும்
முடியும் என்னும் முயற்சியன் ஆகிப் |
உரை
|
|
|
பாப்புரி அன்ன மீக்கொள்
தானை 245 இருபுடை
மருங்கினும் வருவளிக்கு
ஒசிந்து
வீச்சுறு கவரித் தோற்றம்
போல
மிக்குவாய் கூரும் மீட்சி
வேட்கையன்
கொக்குவாய் யன்ன கூட்டமை
விரலினன்
நண்ணா மன்னனை நலிவது நாடும்
250 எண்ணமோடு இருந்தனன் இரும்படி மிசைஎன். |
உரை
|
|