மறுமலர்ச்சிப் பாடல்கள்

படித்ததோடு இருந்துவிடாதே

பாடஅறிமுகம்
Introduction to Lesson


ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

நாட்டின் - நெறிதவறி

நடந்துவிடாதே - நம்

நல்லவர்கள் தூற்றும்படி

வளர்ந்து விடாதே! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது - பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது - தன்

மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும்

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு

வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்

பெற்றதாயின் புகழும், நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும்! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!