படித்ததோடு இருந்துவிடாதே
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்குப் ‘பாட்டுக்கோட்டை’ என்ற பெயரும் உண்டு.
சரி
2. மனிதன் உயர்ந்தவனாக ஆவதற்கு உரிய நெறிகள் பட்டுக்கோட்டைப் பாடலில் இடம் பெறவில்லை.
தவறு
3. ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே பாடல் இடம்பெற்ற திரைப்படம் குமாரராஜா.
சரி
4. படித்ததைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
சரி
5. மேதைகள் என்போர் வஞ்சகர்.
தவறு
6. வம்பு என்பது பிறருக்குத் தீமை செய்யும் செயல்.
சரி
7. மானமில்லா கோழையோடு சேர வேண்டும்.
தவறு
8. அறிவில் வானம் அளவு உயர வேண்டும்.
சரி
9. பெற்ற தாயின் புகழை வளர்க்க வேண்டும்.
சரி
10. பிறந்த மண்ணின் புகழை வளர்க்க வேண்டும்.
சரி