மறுமலர்ச்சிப் பாடல்கள்

படித்ததோடு இருந்துவிடாதே

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  பட்டுக்கோட்டை எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

29 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

2.  மனிதன் எவற்றில் வானளவு உயர வேண்டும்?

மனிதன் ஒழுக்கத்திலும் அறிவிலும் உயர வேண்டும்.

3.  படித்தவன் எப்படி வாழ வேண்டும்?

படித்ததைப் பின்பற்றி வாழ வேண்டும்.

4.  யார் சொல்படி நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை?

மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்; அதை மீறக்கூடாது.

5.  வாழ்க்கையில் யாருடன் சேரக்கூடாது?

தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

6.  எப்பண்புகளில் மாற்றம் இருக்கக் கூடாது?

பேச்சிலும் ஒழுக்கத்திலும் மாற்றம் இருக்கக் கூடாது.

7.  எதற்குக் கல்வி கற்க வேண்டும்?

துன்பத்தை வென்று மகிழ்ச்சியாக இருக்கக் கல்வி கற்க வேண்டும்.

8.  எப்படிப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பட்டுக்கோட்டைக் கூறுகிறார்?

விருதுமேல் விருது பெற்றுப் பெருமை சேர்க்க வேண்டும்.

9.  எதை விட்டு விட வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டை?

தீய குணங்கள் இருந்தால் விட்டுவிட வேண்டும்.

10.  இளைஞர்கள் எந்த வழியில் நடக்க வேண்டும் என்கிறார் பட்டுக்கோட்டையார்

மேதைகள் சொன்ன வழியில் நடக்க வேண்டும்.