நம்பிக்கை
பாடல்
Poem
நம்பிக்கை
துணை பிரிந்த குயில் ஒன்றின்
சோகம் போல
மெல்ல மெல்லக் கசிகிறது
ஆற்று வெள்ளம்
காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் வரால்மீன்கள்
ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது.
என்னருகே
வெம்மணலில்
ஆலம் பழக்கோதும்
ஐந்தாறு சிறுவித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கின்றேன்.
என்றாலும்
எங்கோ வெகுதொலைவில்
இனிய குரலெடுத்து
மாரிதனைப் பாடுகின்றான்
வன்னிச் சிறான் ஒருவன்.
