இறை வாழ்த்து
பாட அறிமுகம்
Introduction to Lesson
இறைவனை வணங்கி வாழ்த்திச் செயல்களைத் தொடங்குவது மக்கள் இயல்பு. ‘வாழ்த்து’ என்ற சொல்லுக்குப் போற்றுதல், இயல்புகளைக் கூறுதல் என்பது பொருள்.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கருத்தை உலகிற்குத் தந்தவர்கள் தமிழர்கள். இறைவனை வாழ்த்தியே தமிழ் நூல்கள் தொடங்குகின்றன.
இறைவன் சாதி சமயம் இல்லாதவன்; அவன் இயற்கையின் வடிவம்; அவன் மக்கள் எல்லார்க்கும் பொது; பொதுவான இறைவனை வாழ்த்தி வணங்கும் வள்ளலாரின் பாடல் ஒன்று இங்குப் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது.
திருவருட்பா என்னும் நூல் ஏறத்தாழ 6000 பாடல்களைக் கொண்டது. நமக்குப் பாடமாக அமைந்துள்ள பாடல் திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபட்டவர் வள்ளலார்.
