இறை வாழ்த்து
பாடல்
Poem
திருவருட்பா
அரும்பிலே மலர்உற்று அருள்மணம் வீசும்
ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
கடையனேன் உடையநெஞ்சு அகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
சோதியுள் சோதிநின் தனையே!
- வள்ளலார்
