இறை வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. வடலூர் வள்ளலார் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள ----------- என்ற ஊரில் பிறந்தார்.
வடலூர் வள்ளலார் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் என்ற ஊரில் பிறந்தார்.
2. இராமலிங்கர் இறைவனைச் சோதியுள் -------------- என்று புகழ்கிறார்.
இராமலிங்கர் இறைவனைச் சோதியுள் சோதி என்று புகழ்கிறார்.
3. இறைவன் ---------------- வீசும் ஆனந்தத் தனிமலராக இருக்கிறார்.
இறைவன் அருள்மணம் வீசும் ஆனந்தத் தனிமலராக இருக்கிறார்.
4. இதயமாகிய இரும்பிலே பழுத்தவன் ------------------- ஆவான்.
இதயமாகிய இரும்பிலே பழுத்தவன்இறைவன் ஆவான்.
5. வாழ்த்துதல் என்னும் சொல்லுக்கு --------------- என்று பொருள்.
வாழ்த்துதல் என்னும் சொல்லுக்கு போற்றுதல் என்று பொருள்.
6. வள்ளலார் ------------ என்ற ஊரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.
வள்ளலார் வடலூர் என்ற ஊரில் சத்திய ஞான சபையை அமைத்தார்.
7. பெரும்பதம் என்றால் ---------------- என்று பொருளாகும்.
பெரும்பதம் என்றால் கிடைக்காத பெரிய இடம் என்று பொருளாகும்.
8. கரும்பிலே எடுத்த சுவைத்திரள் ------------------ ஆவான்.
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் இறைவன் ஆவான்.
9. எங்கும் பேரொளியாக இருப்பவன் ---------------- ஆவான்.
எங்கும் பேரொளியாக இருப்பவன் இறைவன் ஆவான்
10. துரும்பினேன் என்று வள்ளலார் குறிப்பிடுவது -----------.
துரும்பினேன் என்று வள்ளலார் குறிப்பிடுவது தம்மைப்பற்றி