|
வஞ்சிக்
காண்டம்
|
2.
காட்சிக் காதை
|
"இலவந்தி
வெள்ளி மாடத்தில் தன் தேவி இளங்கோவேண்மாளுடன் இருந்த செங்குட்டுவன் மலைவளம்
காணச் சுற்றத்தோடு பெயர்தல்"
|
|
5 |
மாநீர்
வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து, வானவர் மருள, மலை வில் பூட்டிய வானவர் தோன்றல், வாய் வாள் கோதை, விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து, இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி, ‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும் மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என, பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி, வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன், |
உரை |
|
"பேரியாற்றங்கரையில் தங்குதல்" |
|
10
15 20 |
வள மலர்ப்
பூம் பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும், இலங்கு நீர்த் துருத்தியும்,இள மரக் காவும், அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி; ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று; கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை, நாகம், திலகம், நறுங் காழ் ஆரம், உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து, மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட, நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப- |
உரை உரை |
|
"மலைப்பக்கத்தில் எழும் பல் வேறு ஓசைகளைக் கேட்டல்" |
|
25 30 |
குன்றக்
குரவையொடு கொடிச்சியர் பாடலும், வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும், நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும், பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும், புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும், கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும், பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும், இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப- |
உரை |
|
"குறவர் மலைபடு பொருள்களுடன் வந்து, செங்குட்டுவனை வணங்குதல்" |
|
35 40 45 50 55 |
அளந்து
கடை அறியா அருங்கலம் சுமந்து, வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல; யானை வெண் கோடும், அகிலின் குப்பையும், மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்: ஏல வல்லியும், இருங் கறி வல்லியும், கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும், தெங்கின் பழனும், தேமாங் கனியும், பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும், காயமும், கரும்பும், பூ மலி கொடியும், கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும், பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்; ஆளியின் அணங்கும், அரியின் குருளையும், வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும், குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும், வரை ஆடு வருடையும், மட மான் மறியும், காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும், பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும், கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்; மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு- |
உரை உரை |
|
"மலைக் குறவர் சொல்லிய செய்தி ஆங்கு," |
|
60 |
ஏழ் பிறப்பு
அடியேம்; வாழ்க, நின் கொற்றம்! கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி, வானவர் போற்ற மன்னொடும் கூடி, வானவர் போற்ற, வானகம் பெற்றனள்; எந் நாட்டாள்கொல்? யார் மகள்கொல்லோ? நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்; பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!’ என- |
உரை |
|
"செங்குட்டுவனுடன் இருந்த சாத்தனார் உரைத்த புதுமைகள்" |
|
65 70 75 80 85 90 |
மண் களி
நெடு வேல் மன்னவன் கண்டு கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்: ‘ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம், திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்; தீவினைச் சிலம்பு காரணமாக, ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்; வலம் படு தானை மன்னன் முன்னர், சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்; செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர், வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி, ‘அம் சில் ஓதி! அறிக” எனப் பெயர்ந்து, முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்; “அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன், மயங்கினன்கொல்” என மலர் அடி வருடி, தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள், கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள், “மன்னவன் செல்வுழிச் செல்க யான் என தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல், பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்; “கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று” எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல், தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள், நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை’ என்று, ஒழிவு இன்றி உரைத்து, ‘ஈண்டு ஊழி ஊழி வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்’ என- |
உரை உரை உரை உரை |
|
"தென்னவனது மறைவை அறிந்த செங்குட்டுவன் வருந்தி உரைத்தல்" |
|
95 100 105 |
தென்னர்
கோமான் தீத் திறம் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்: ‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன், ‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என, வல் வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது: மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்; குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என, துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து- |
உரை உரை உரை |
|
"செங்குட்டுவன் வேண்மாளிடம் வினாவுதல் ‘ஆங்கு," |
110 |
உயிருடன்
சென்ற ஒரு மகள்-தன்னினும், செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும், நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?’ என, மன்னவன் உரைப்ப- |
உரை |
|
"பெருந்தேவியின் மறுமொழி மா பெருந்தேவி," |
|
|
‘காதலன்
துன்பம் காணாது கழிந்த மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து; அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’ என- |
உரை |
|
"அரசனது நோக்கத்தை அறிந்து அமைச்சர் கூறுதல்" |
|
115
120 |
மாலை வெண்குடை
மன்னவன் விரும்பி, நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர், ‘ஒற்கா மரபின் பொதியில் அன்றியும், வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக் கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்; கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும், |
உரை |
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து’ என- | உரை | |
|
"செங்குட்டுவன் தனது கருத்தை வெளியிடுதல்" |
|
125 130 135 140 145 |
‘பொதியில்
குன்றத்துக் கல் கால்கொண்டு, முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல், மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு, சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று; புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை, முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும், தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும், நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு’ என, ‘குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும், நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும், பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும், குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும், வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலிய, சூட்டி; பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என், வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்’ என- |
உரை உரை உரை உரை |
|
"வில்லவன் கோதை வேந்தனுக்கு உரைத்தவை" |
|
150
155 160 165 170 |
‘பல் யாண்டு
வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!’என, வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்: ‘நும் போல் வேந்தர் நும்மொடு இகலி, கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர், பங்களர், கங்கர், பல் வேல்கட்டியர், வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன் கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது; கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம், எம் கோமகளை ஆட்டிய அந் நாள், ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம் கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்: இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின், ஏற்பவர் முது நீர் உலகின் முழுவதும் இல்லை; இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின், வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி, மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என- |
உரை உரை உரை உரை உரை |
"அழும்பில் வேளின் கூற்று" |
||
175 |
‘நாவல்
அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ? அறை பறை’ என்றே அழும்பில் வேள் உரைப்ப- |
உரை |
|
"வஞ்சி மா நகர் திரும்பிய பின், வட திசை செல்வது குறித்து, செங்குட்டுவன் பறை அறைவித்தல்" |
|
180 185 190 |
நிறை-
அரும் தானை வேந்தனும் நேர்ந்து, கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சி மா நகர் புக்கபின்- ‘வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை! ஊழிதொறு ஊழி உலகம் காக்க’ என, ‘வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர் கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின், வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின், கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும், விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும், கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின், தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்; தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி, வாழ்க, சேனாமுகம்!’ என வாழ்த்தி, இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி, அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என். |
உரை |