முகப்பு |
யானை (களிறு, பிடி, வேழம், நெடுங்கைவன்மான்) |
1. குறிஞ்சி |
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த |
||
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, |
||
கழல் தொடி, சேஎய் குன்றம் |
உரை | |
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. |
||
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார் |
13. குறிஞ்சி |
மாசு அறக் கழீஇய யானை போலப் |
||
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
||
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
||
நோய் தந்தனனே - தோழி!- |
||
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. |
உரை | |
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
34. மருதம் |
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
||
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
||
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
||
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
||
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
||
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
||
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. |
உரை | |
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |
36. குறிஞ்சி |
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
||
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
||
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என, |
||
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
||
தாவா வஞ்சினம் உரைத்தது |
||
நோயோ-தோழி!-நின் வயினானே? |
உரை | |
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |
37. பாலை |
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; |
||
பிடி பசி களைஇய பெருங் கை வேழம் |
||
மென் சினை யாஅம் பொளிக்கும் |
||
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. |
உரை | |
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
52. குறிஞ்சி |
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் |
||
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, |
||
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், |
||
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! |
||
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே? |
உரை | |
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார் |
54. குறிஞ்சி |
யானே ஈண்டையேனே; என் நலனே, |
||
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
||
கான யானை கை விடு பசுங் கழை |
||
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
||
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |
75. மருதம் |
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
||
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
||
வெண் கோட்டு யானை சோணை படியும் |
||
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
||
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? |
உரை | |
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |
76. குறிஞ்சி |
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் |
||
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்- |
||
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை |
||
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ, |
||
தண் வரல் வாடை தூக்கும் |
||
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே. |
உரை | |
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார் |
77. பாலை |
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
||
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
||
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
||
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
||
அரிய கானம் சென்றோர்க்கு |
||
எளிய ஆகிய தட மென் தோளே. |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
88. குறிஞ்சி |
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
||
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
||
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
||
நடு நாள் வருதலும் வரூஉம்; |
||
வடு நாணலமே-தோழி!-நாமே. |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |
91. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி |
||
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் |
||
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், |
||
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! |
||
ஓவாது ஈயும் மாரி வண் கை, |
||
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி |
||
கொன் முனை இரவு ஊர் போலச் |
||
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே! |
உரை | |
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
111. குறிஞ்சி |
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன், |
||
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும், |
||
அது என உணரும்ஆயின், ஆயிடைக் |
||
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன |
||
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன் |
||
வல்லே வருக-தோழி!-நம் |
||
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே! |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன். |
112. குறிஞ்சி |
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்; |
||
எள் அற விடினே, உள்ளது நாணே; |
||
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ |
||
நாருடை ஒசியல் அற்றே- |
||
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார் |
119. குறிஞ்சி |
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை |
||
கான யானை அணங்கியா அங்கு- |
||
இளையள், முளை வாள் எயிற்றள், |
||
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார் |
129. குறிஞ்சி |
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! |
||
புலவர் தோழ! கேளாய் அத்தை; |
||
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் |
||
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் |
||
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் |
||
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
136. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக் |
||
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை |
||
குளகு மென்று ஆள் மதம் போலப் |
||
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
|
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. |
உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
161. குறிஞ்சி |
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது, |
||
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப் |
||
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி, |
||
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ! |
||
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை |
||
ஆரம் நாறும் மார்பினன் |
||
மாரி யானையின் வந்து நின்றனனே? |
உரை | |
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர் |
169. மருதம் |
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
||
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
||
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
||
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
||
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
||
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. |
உரை | |
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |
170. குறிஞ்சி |
பலரும் கூறுக, அஃது அறியாதோரே- |
||
அருவி தந்த நாட் குரல் எருவை |
||
கயம் நாடு யானை கவளம் மாந்தும் |
||
மலை கெழு நாடன் கேண்மை |
||
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார் |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
208. குறிஞ்சி |
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
||
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
||
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
||
நின்று கொய மலரும் நாடனொடு |
||
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, |
உரை |
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
215. பாலை |
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
||
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
||
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
||
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
||
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
||
கொடு வரி இரும் புலி காக்கும் |
||
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. |
உரை |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
232. பாலை |
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
||
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
||
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
||
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
||
யாஅ வரி நிழல், துஞ்சும் |
||
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |
244. குறிஞ்சி |
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
||
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் |
||
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- |
||
ஓரி முருங்கப் பீலி சாய |
||
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் |
||
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ |
246. நெய்தல் |
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, |
||
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் |
||
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, |
||
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் |
||
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் |
||
இளையரும் மடவரும் உளரே; |
||
அலையாத் தாயரொடு நற்பாலோரே. |
உரை | |
சிறைப்புறம். - கபிலர் |
247. குறிஞ்சி |
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; |
||
திறவோர் செய்வினை அறவது ஆகும்; |
||
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என |
||
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை |
||
வீயா மென் சினை வீ உக, யானை |
||
ஆர் துயில் இயம்பும் நாடன் |
||
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே. |
உரை | |
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன். |
255. பாலை |
பொத்து இல் காழ அத்த யாஅத்துப் |
||
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி, |
||
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச் |
||
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும் |
||
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!- |
||
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் |
||
காமர் பொருட்பிணிப் போகிய |
||
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. |
உரை | |
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன் |
258. மருதம் |
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
||
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
||
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
||
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
||
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
||
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
||
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
||
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. |
உரை | |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? |
உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
284. குறிஞ்சி |
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் |
||
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் |
||
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும், |
||
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?- |
||
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி |
||
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் |
||
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே. |
உரை | |
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன் |
292.குறிஞ்சி |
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
||
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
||
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
||
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
||
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
||
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
||
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
||
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. |
உரை | |
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |
307. பாலை |
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, |
||
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, |
||
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, |
||
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன் |
||
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, |
||
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, |
||
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, |
||
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
||
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? |
உரை | |
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன் |
308. குறிஞ்சி |
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
||
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
||
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
||
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
||
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
||
மா மலைநாடன் கேண்மை |
||
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. |
உரை | |
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |
319. முல்லை |
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, |
||
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், |
||
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, |
||
மை அணி மருங்கின் மலையகம் சேரவும், |
||
மாலை வந்தன்று, மாரி மா மழை; |
||
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் |
||
இன்னும் வாரார்ஆயின், |
||
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே |
உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன் |
329. பாலை |
கான இருப்பை வேனில் வெண் பூ |
||
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
||
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
||
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
||
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
||
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
||
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |
332. குறிஞ்சி |
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், |
||
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து |
||
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் |
||
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை |
||
குன்றகச் சிறுகுடி இழிதரும் |
||
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? |
உரை | |
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் |
333. குறிஞ்சி |
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
||
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
||
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
||
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
||
பணிக் குறை வருத்தம் வீட, |
||
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? |
உரை | |
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |
343. பாலை |
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
||
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
||
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
||
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
||
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
||
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
||
உயர் வரை நாடனொடு பெயருமாறே. |
உரை | |
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. |
உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |
357. குறிஞ்சி |
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
||
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
||
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
||
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
||
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
||
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
||
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
||
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
உரை | |
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
393. மருதம் |
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
||
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
||
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
||
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
||
களிறொடு பட்ட ஞான்றை, |
||
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே |
உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |
394. குறிஞ்சி |
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
||
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
||
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
||
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
||
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
||
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |