2. அற இலக்கியம்

நாலடியார்

பாடல்
Poem


குடிப்பிறப்பு

பாடல் 1

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புல் கறிக்குமோ மற்று. (141)

மேன்மக்கள்

பாடல் 2

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்

மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து

தேய்வர் ஒருமா சுறின் (151)

பெரியாரைப் பிழையாமை

பாடல் 3

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்

வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்

ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!

பேர்க்குதல் யார்க்கும் அரிது. (161)

நல்லினம் சேர்தல்

பாடல் 4

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு. (171)