2. அற இலக்கியம்

பழமொழி

பாடல்
Poem


பாடல் 1

புலமிக் கவரை புலமை அறிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க

பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே

பாம்பறியும் பாம்பின் கால். .


பாடல் 2

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழமே

பாடல் 3

பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டு கரந்து

மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்த

வேயின் இரண்டதோள் வேற்கண்ணாய்! விண்ணியங்கும்

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்.

பாடல் 4

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.