திருக்குறள்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. திருக்குறள் பெயர்க்காரணம் கூறுக.
திரு+குறள் = திருக்குறள். சிறப்புமிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆன நூல் என்று பெயர்.
2. திருக்குறள் எத்தனைப் பெரும் பிரிவுகள் கொண்டது?
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பெரும்பிரிவுகள் கொண்டது.
3. எண்என்பதும் எழுத்தென்பதும் எவை?
எண்என்பது கணிதம்; எழுத்தென்பது இலக்கியம் ஆகும்.
4. கற்றவருக்கு எல்லா நாடும், ஊரும் என்னவாகும்?
கற்றவருக்கு எல்லா நாடும்; ஊரும் சொந்தமாகும்.
5. கல்வி கற்றபின் என்ன செய்ய வேண்டும்?
கல்வி கற்றபின் அதன்படி ஒழுக வேண்டும்.
6. கேடில்லாத செல்வம் எது?
கேடு இல்லாத செல்வம் கல்வியே யாகும்.
7. அறிவு அரணாவது எவ்வாறு?
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாதலால் பகைவர்களால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணாகும்.
8. அறிவின் இலக்கணம் யாது?
எப்பொருளை யாரிடம் கேட்டாலும், அப்பொருளில் மெய்யான பொருளைக் காண்பதே அறிவின் இலக்கணமாகும்.
9. அறிவுடையார் யாவர்?
அறிவுடையார் எதிர்காலத்தை முன்னே எண்ணி அறிய வல்லவர்.
10. அறிவுடையார், அறிவிலார் உடைமைகள் யாவை?
அறிவுடையார் எல்லாம் உடையவர்; அறிவிலார் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.